12-19-2004, 03:47 PM
நன்றி இந்தியா
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட இருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த விடுதலைப்புலிகள் இந்த ஒப்பந்தம் தமிழர் உணர்வுகளுக்கு விரோதமாக அமையும் என்பதுடன் சமாதான காலத்தில் மக்களை அச்சமூட்டுவதாய் அமையும் எனவும் தெரிவித்திருந்தனர்.
என்னுடைய இதற்கு முன்பதான பதிவொன்றில் இந்தியா இவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டாலும் பரவாயில்லை ஆனால் அதற்கு முன்பாய் சமாதானப் பேச்சுக்களுக்கு இலங்கை அரசை வற்புறுத்தும் நிபந்தனையூடாக இப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் ஓரளவுக்காவது உபயோகமாயிருக்கும் என குறிப்பிட்டிருந்தேன்.
இதற்கிடையில் இப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடாது என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உறுதியளித்திருக்கிறார். இவ்வுறுதி மொழியை அவர் திரு வைகோ அவர்களிடம் கொடுத்திருக்கிறார்.
இது வழமையான அரசியல் வாதிகளின் வாக்குறுதியாக இருக்காது என நம்புவதுடன், அந்த நம்பிக்கையுடனேயே இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இலங்கையில் சமாதானம் மலர, நியாயமானதும் நிலையானதுமான சமாதானத்திற்கு ஆதரவும் அழுத்தமும் வழங்கும் உலக நாடுகளுடன் இந்தியாவும் இணைய வேண்டும்.
நன்றி - சயந்தன்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட இருந்தது.
இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த விடுதலைப்புலிகள் இந்த ஒப்பந்தம் தமிழர் உணர்வுகளுக்கு விரோதமாக அமையும் என்பதுடன் சமாதான காலத்தில் மக்களை அச்சமூட்டுவதாய் அமையும் எனவும் தெரிவித்திருந்தனர்.
என்னுடைய இதற்கு முன்பதான பதிவொன்றில் இந்தியா இவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டாலும் பரவாயில்லை ஆனால் அதற்கு முன்பாய் சமாதானப் பேச்சுக்களுக்கு இலங்கை அரசை வற்புறுத்தும் நிபந்தனையூடாக இப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் ஓரளவுக்காவது உபயோகமாயிருக்கும் என குறிப்பிட்டிருந்தேன்.
இதற்கிடையில் இப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடாது என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உறுதியளித்திருக்கிறார். இவ்வுறுதி மொழியை அவர் திரு வைகோ அவர்களிடம் கொடுத்திருக்கிறார்.
இது வழமையான அரசியல் வாதிகளின் வாக்குறுதியாக இருக்காது என நம்புவதுடன், அந்த நம்பிக்கையுடனேயே இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இலங்கையில் சமாதானம் மலர, நியாயமானதும் நிலையானதுமான சமாதானத்திற்கு ஆதரவும் அழுத்தமும் வழங்கும் உலக நாடுகளுடன் இந்தியாவும் இணைய வேண்டும்.
நன்றி - சயந்தன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

