12-19-2004, 03:13 AM
manimaran Wrote:cannon Wrote:அங்கே ஆதரவான குரல்கள் கேட்கத் தொடங்குதோ இல்லையோ எங்கடைகளிலை ஒண்டு இரண்டுக்கு வயிறெரியத் தொடங்கி விடும். பழையதுகளை கிண்டிக் கிண்டி சேறாக்கி நாற்றுவதில் ஒரு தனி இன்பம். ஈனப்பிறவிகள்!!!!!!
வெறுமனே புலி எதிர்ப்பு ஒன்றையே குறியாக கொண்டு எழுதும் தமிழக எழுத்தாளர்களை விடுத்து மற்றைய தமிழக எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் அல்லது எண்ணுகின்றார்கள் என்பது பற்றி நாங்கள் அறிந்திருத்தல் அவசியமானது. அப்போதுதான் நாங்கள் அவர்கள் கருத்துக்கு பதிலளிக்கவோ அல்லது எதிர்காலத்தில் அவர்களை எம்பால் இழுக்கக்கூடியதாகவோ செயலாற்ற முடியும்.
தமிழ்தேசியம் மீதான எமது பற்று அல்லது புலிகள் மீதான நேசம் என்பது எமது இனத்தின் ஆக்கபூா்வமான வளா்ச்சிக்கு உதவுவது என்பதனை குறியாக கொண்டதொன்றே. மாறாக அது உணா்ச்சிவசப்பட்ட வெறித்தனமாக மாறுமாயின் புலிகளது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின வீழ்ச்சிக்கே வழிகோலும். புலிகளது செயல்கள் எப்போதாவது வழிதவறிப்போகுமாயின் அதனை புரிந்து அவா்களை ஆக்கபூா்வமான வழியில் விமா்சித்தல் நிச்சயம் எல்லோரது வளா்ச்சிக்கும் வழி வகுக்கும்.
மணிமாறன்...உங்கள் கருத்தை ஏற்கவோ இல்ல மறுக்கவோ முதல் உஙளிடம் ஒரு கேள்வி...அதெப்படி புலிகள் எதிர்ப்பொன்றை குறியாகக் கொண்டு எழுதுபவர்கள் என்று ஒரு தரப்பைப் பிரிப்பீர்கள்...இனங்காட்டுவீர்கள்...அவர்களுக்கும் புலிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட... உங்கள் கண்ணுக்குத் தெரியும் புலி எதிர்ப்பு ஆரோக்கிய விமர்சனகாரர்களையும் கொஞ்சம் வேறுபடுத்தி அடையாளப்படுத்துக்கள் பார்க்கலாம்...இங்கு பலரும் இப்ப புலி எதிர்ப்பென்பது மக்களிடம் எடுபடாது என்பதற்காய் புலி வளர்ச்சி... ஆரோக்கிய விமர்சனம் என்று தங்கள் காழ்புணர்ச்சிகளைக் கொட்டவே வழி வகுக்கின்றனர்....!
இந்தியா என்ன காரணத்துக்காக தமிழர் போராட்டத்தை வளர்த்ததோ...அதே காரணம் தன் கைவிட்டுப் போகும் என்று உணர்ந்ததும் நசுக்க வெளிக்கிட்டது...எது புகழ்ந்ததோ...அது தூற்றியது.... தூற்றிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர புலிகள் பக்க நல்லதுகளை உலகமே காணும் போது இந்தியா காணாமலேதான் இருக்கிறது...ஒரு ஒப்புக்குக் கூட அதைச் சொல்வதாக இல்லை.... இது ஒன்றும் புலிகளின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு வரும் விமர்சனங்களாக கருத முதல் புலிகளின் வளர்ச்சியால் எழுந்த அச்சம் காரணமாக விதைக்கபட்ட பொய்களின் அம்சங்களின் விளைவுகளாகவே தென்படுகிறது....!
புலிகளை விமர்சிப்பதென்று தொடர்ந்தும் பழைய கட்டுக்கதைகளையே அவிழ்க்கிறீர்களே தவிர நிகழ்காலம் எதிர்காலம் என்று எதையும் யாரும் ஆராய்ந்து நடுநிலை நின்று எழுதுவதாகத் தெரியவில்லை...புலிகளை வெறுப்பவர்களில் பலர் உங்களைப் போலத்தான் போர்வைக்குள் இருந்து கொண்டு வெறுக்கிறார்கள்...புலி வளர்ச்சிக்குதான் மாற்றுக் கருத்து என்றவர்கள் ஈழத்தில் என்ன செய்கிறார்கள்...இதெல்லாம் மக்களை மந்தைகள் என்று எண்ணி விதைக்கப்படும் கருத்துக்கள் தங்களை நல்லவர்கள் போலக் காட்டிக் கொண்டு நஞ்சை விதைக்கும் கொடியவர்களாகவே உள்ளனர்....!
உண்மையான வளர்ச்சியை விரும்புவனின் விமர்சனம்...நல்லதையும் ஆராய்ந்து முன்னேற்ற வழி சொல்லும்..கெட்டத்தை இனங்காட்டி ஒதுக்கச் சொல்லும்...ஆனால் இங்கு எதிலும் நல்லதை ஆராய்ந்து வளர்க்க வழி சொன்னதாய் தெரியவில்லை...கெட்டது என்பதும் சரியானது இனங்காட்டப்படவில்லை...பழைய கட்டுக்கதைகளுக்கு இப்பவும் புத்துயிர் கொடுப்பதன் நோக்கம் என்ன...அதனால் இப்ப என்ன பயன் கிடைக்கப் போகிறது புலிகளுக்கும் சரி மக்களுக்கும் சரி...????!
ஐந்து வருடத்துக்கு முதல் ஜெயலலிதா செய்த ஊழல் கண்டு எதிர்த்தவர்கள் தான் பிறகு ஐந்தாண்டுக்குப் பின் மீண்டும் ஜெயலலிதா காலில் விழ்கிறார்கள்...இவர்களா..ஈழத்தமிழரின் புலிகளின் யதார்த்தச் சூழலை முற்றாக விளங்க முற்படுவர்...????! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

