Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மெல்ல வாய் திறக்கும் தமிழகம்
#73
உபகண்ட மேலாதிக்கம்?

அருணின் வலைக்குறிப்பில் நான் ஏதோ கருத்துச்சொல்லப்போக அங்கே ஒரு முகமூடி ஏதோ ஒரு பிரச்சனையை இழுத்து என்னை இந்த குறிப்பை எழுத வைத்திருக்கிறார்

ஒருமுறை நான் தமிழ் மணம் தளத்தின் கருத்துப்பகுதியில், எம்மை இந்திய உபகண்டம் என்று பிரிக்க வேண்டாம் ஈழம் என்று குறிப்பிடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
காசி ஏதோ சில காரணங்களுக்காக இவ்வாறு வகைபிரிப்புச்செய்திருக்கலாம்.
அவர் நேர்மையான நோக்கத்துடன் தான் செய்திருக்கக்கூடும் என நம்புகிறேன்.

அனாலும் எனக்கு இந்தப் பிரிப்பு அந்தர உணர்வையே தந்தது.
இந்த உணர்வுக்கு ஒரு வலுவான அரசியல் பின்னணி இருக்கிறது.

முன்பு ஒருநாள், எனக்கு 5 அல்லது ஆறு வயதிருக்கலாம்.
நான் குடியிருந்த திருக்கோணமலையில் உவர்மலை எனப்படும் சற்றே மேடானபகுதியில், உயரமான ஓரிடத்திலிருந்து, திருக்கோணமலைத்துறைமுகத்தில் வந்திறங்கிய ஒரு கப்பலை ஊரே கூடி நின்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

அனைவரும் தமிழர்கள்.
அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி, வெற்றிக்களிப்பு.

"இந்தியன் ஆமி வந்து இறங்கிட்டாங்க"

தமிழ் விடுதலை இயக்கங்கள் மட்டில் இந்திரா காந்தியின் (உள் நோக்கத்துடனான) அரசியல் அணுகுமுறைகள்,
யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசினை எரிச்சலூட்டி உணவுப்பொதிகளை இந்திய வானூர்திகள் போட்டமை,
காலகாலமால இருந்த வரலாற்றுத்தொடர்புகள்,
தமிழ் நாட்டுடனான மிக நெருங்கிய சகோதர உணர்வு எல்லாம் சேர்ந்த உணர்வெழுச்சியை அந்த சின்ன வயதிலேயே நான் உணரும்படி ஊர்மக்கள் வெளிக்காட்டினார்கள்.

எம்மூர் மக்கள் மட்டுமல்ல. முழு ஈழத் தமிழரும்......

பிறகு சில வருடங்கள் கடந்த நிலையில், அதே திருக்கோணமலையில்,
உட்துறைமுக வீதி வழியாக அப்பாவுடன் மோட்டர்சைக்கிளின் பின்புறம் அமர்ந்தபடி உட்துறைமுக வீதி வழியாக போய்க்கொண்டிருந்தேன்.

உட்துறைமுக வீதி நெடுகலும் இருபக்கமும் சிறீ லங்கா இராணுவம் அணிவகுத்திருக்க,
இந்திய அமைதிகாக்கும் படையின், எரிச்சலூட்டும் நாற்றமடிக்கும் வாகனங்கள் தொடரணியாக போய்க்கொண்டிருந்தன.
அப்பா சற்றே தாமதித்து அந்த மகிழ்ச்சியான காட்சியை ரசித்தார்.
அப்பாமட்டுமல்ல, ஊரே, முழுத் தமிழீழமே இச்சம்பவத்தை ஆறுதல் பெருமூச்சோடு ரசித்தது.

"போய்த் துலைஞ்சான்கள் பேய்கள்.....!"

இந்த சம்பவங்களைவிட எமது மனநிலையை விளக்க வேறு சுருக்கமான இறுக்கமான வழி எனக்கு தெரியவில்லை.

இந்தியன் ஆமி என்றால், உயரமான தலைப்பாகை கட்டிய திடமான மனிதர்கள்.
தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தருவார்கள்.
துப்பாக்கியை தொட்டுப்பார்க்கவிடுவார்கள்.
ஒருவித நாற்றம் அவர்கள் எல்லோர்மீதும் வீசும். (தூரத்தில் வரும்போதே அந்த நாற்றத்தை வைத்து கண்டுபிடித்துவிடுவோம்)
"ஏக், தோ, தீ" என்று தமது பாஷையை சொல்லித்தருவார்கள்.

இவ்வாறான படிமம்தான் திருக்கோணமலை நகரில் வளர்ந்த சிறுவனான என் மனதில் இருக்கிறது.
இதில் திருக்கோணமலை நகர் என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளுங்கள். கூடவே சிறுவன் என்பதையும்.

இந்திய அமைதிகாக்கும் படையினர் செய்த கொலைகள், சித்திரவதைகள், கூட்டுக்கொலைகள், பாலியல் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள், மக்கள் மீதான எரிச்சலூட்டல்கள். எல்லாம் வளர்ந்த பிறகு ஒவ்வொன்றாக அறியக்கிடைத்தது.

திருக்கோணமலை நகர் (நகர் மட்டுமே. எல்லையோரங்களில் இனப்படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது) வரதராஜப்பெருமாளின் நிர்வாகத்தின் கீழ், புலிவாடை வீசாமல், மாகாணசபை அமைந்திருந்த "பிரச்சனை இல்லாத" நகரமாக இருந்ததாலும் நான் ஓர் ஆண் சிறுவனாக இருந்ததாலும் என் மனதில் நல்ல படிவுகள் வந்ததேதவிர இந்திய அமைதிகாக்கும் படை என்பது இராணுவ அராஜகத்தின் மொத்த வடிவம்.

நியாயமான கோரிக்கைகள் வைத்து உண்ணாவிரதமிருந்த திலீபன் இறந்துபோகும் வரையில்,
அகிம்சையால் விடுதலை பெற்றதாக கூறிக்கொள்ளும் பாரதத்தின் எந்தவொரு அதிகாரியும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

அது காந்தியாரின் முகத்தில், தமது தேசபிதாமீது தாமே பூசிய பீ.
அவர்கள் செய்த பாலியல் தாக்குதல்கள், .............?

மக்களை வரிசையாக படுக்கவைத்தூ, அவர்கள் மீது கனரக வாகனங்கை ஏற்றி செத கூட்டுக்கொலைகள்,
சித்திரவதைகள் எல்லாம்
தமது புனித கங்கைகளில் அவர்களே ஊற்றிய மனித ரத்தம்.

இவர்களுக்கு, ஆயிரக்கணக்கான மனிதப்படுகொலைகளை ஆசீர்வதித்துக்கொண்டிருந்த ரஜீவ்காந்தி எனும் கோர சிந்தனைகள் கொண்ட சந்தர்ப்பவாதியின் சிதறுகை என்பது மனிதாபிமானமற்ற செயலாய்ப் பட்டிருக்கிறது.

மனிதப்படுகொலைகள் எதுவும் நியாயப்படுத்தப்படக்கூடியதல்ல.

ரஜீவ் காந்தியின் கொலைபற்றிய உண்மைகள் யாருக்கும் முழுமையாகத்தெரியாது.

புலிகளின் தற்கொடைப்போராளியான பானுவினால் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது உண்மையாக இருந்தால், அந்த பானு வேறு யாருமில்லை,

பாலியல் தாக்குதலுக்குள்ளான ஆயிரக்கணக்கான பெண்களின், இந்திய அரசால் விதவைகளாக்கப்பட்ட லட்சக்கணக்கான பெண்களின்,
பாரதத்தாயினால் ஆசீர்வதிக்கப்பட்ட சித்திரவதைகளின்போது கொல்லப்பட்ட பலலட்சம் இளைஞர்களின் பாசமிகு தாய்மார்களின் பிரதிநிதி.

அவளது கோபம், தன்னைக்கொடுத்து, ஒரு கொடூர அரசியல் சந்தர்ப்பவாதியை கொலைசெய்யுமளவுக்கு போயிருக்குமானால், அதனை நான் நியாயப்படுத்துவேன், நியாயப்படுத்துவேன்,
நியாயப்படுத்தியே தீருவேன்.

இத்தனைக்கும் நானொரு தீவிர விடுதலைப்புலி ஆதரவாளனோ, தமிழை , தமிழரை காப்பற்ற வெளிக்கிட்ட தேசியவாதியோ அல்ல.
அதற்கு நேர்மாறானவன்.

சார்க் ஒன்றியம் ஒன்று அமரிக்க மேலாதிக்கத்துக்கெதிராக தன்னை கட்டியெழுப்புமானால், அதில் சோஷலிச தமிழீழமும் சுய நிர்ணயம் கொண்ட தேசமாக தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தும் அரசியல் நிலைப்பாடுடையவன்.

ஒருமுறை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடுவண் குழு உறுப்பினரான திரு Prakash Karat உடன் தனிப்பட உரையாடிய பொழுது, இந்திய இடதுசாரிக்கட்சி ஒன்று ஈழத்தமிழர்பற்றிய எத்தனை பிழையான எண்ணங்களை கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

தமிழீழ இடதுசாரிகள் இந்தியா எமது நாட்டில் கால்வைப்பதை விரும்பவில்லை என்பதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

ஆனால் அதுதான் உண்மை.

அமரிக்க பேரரசுவாதத்துக்கு எதிரான செயற்பாடாகத்தான் இந்தியாவுடனான "சேர்ந்தியங்குதலை" நாம் காண்கிறோமேதவிர வேறு காரணங்கள் இல்லை.

எமக்குத்தெரியும். இந்தியா தன் மேலாதிக்க நலன்களில் மட்டுமே அக்கறை கொண்ட பிராந்திய வல்லரசு என்பது.

அவருக்கு , ஏன் தமிழீழ இடதுசாரிகள் தமிழீழ தேசியத்தை முழுசாக உதறித்தள்ளுவதற்கு இன்றைக்கு தயாரில்லை என்பதை புரிந்துகொள்ள முடியாது.

"ஆட்சிமாறினாலும் மாறாத இந்திய பிராமணீய கட்டமைப்பு" என்ற எனது சொல்லாடல் அவரது முகத்தை சுருங்கவைத்ததையும் நான் உணர்ந்தேன்.(bramin establishment or whatever you wish to call என்று இழுத்தார்)

பேராசிரியர் சிவத்தம்பி இந்தியாவை எதிர்த்து மூச்சுவிடுவதில்லை. அப்படி செய்வது நல்லதல்ல என்பது அவரது கருத்து. சிவத்தம்பி மட்டுமே ஈழத்து இடதுசாரி அல்ல. இதில் மட்டுமே யை அழித்துவிடலாம்.

பேரரசுவாதத்துக்கு எதிராக சார்க் ஒன்றியத்துடன் சேர்ந்தியங்குதலை நாம் விரும்புகிறோம். இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறுவதற்கு அல்ல.

நாம் தனி தேசிய இனம். எமக்கென்றொரு தேசம் இருக்கிறது. இந்தியாவின் சுயனலமிக்க சமஷ்டிக் கதைகளுக்கு மயங்க நாம் தயாராயில்லை.

கருணாவை இன்றைக்கும் தூக்கிப்பிடிக்கும் தமிழக சஞ்சிகைகள் அனைத்தும் இந்த மேலாதிக்க வாதிகளின் கைக்கூலிகள்தான். கிழக்கிலங்கையைச்சேர்ந்தவன் என்ற வகையிலும், யாழ் மேலாதிக்கத்தின் மீதான கடும் கசப்புணர்வு கொண்டவன் என்றவகையிலும் நான் இதை சொல்கிறேன்.

கருணாஎன்பது இன்று எதுவுமில்லை.
இன்னொரு ப்ளொட்மோகன் அவ்வளவுதான்.

கருணாவால் யாழ்மேலாதிக்கத்தைவைத்து அரசியல் பண்ண முடிந்திருக்கும் அளவுக்கு அப்பிரச்சனைமீது கவனக்குறைவாக இருந்திருக்கிறார்கள்புலிகள் என்பதுதான் பிரச்சனை.

ரஜீவ்காந்தி கொலை, அல்லது பழிவாங்கல், அல்லது அவருக்கான மரண தண்டனை எதுவானாலும்,
அதற்காக எமது கைகளின் கறையை நாம் கழுவ தயாராக இருக்கிறோம்.

பாரதம் செய்த கொலைகளின் ரத்தத்தை அவர்கள் எங்கே கழுவுவார்கள்?

எமது சுய நிர்ணய உரிமையை மதிக்கத்த இந்திய பிராமணீய கட்டமைப்பை நாமும் மதிப்பதாயில்லை.

மக்கள் போராட்டமென்பது நாட்டின் , படைய்களின் எண்ணிக்கையில் இல்லை.
அது நீதி சார்ந்த விஷயம்.

Thanx: Mayooran

http://mauran.blogspot.com/2004/11/blog-po...3418472082.html
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by paandiyan - 12-06-2004, 09:46 AM
[No subject] - by hari - 12-06-2004, 09:48 AM
[No subject] - by aathipan - 12-06-2004, 11:38 AM
[No subject] - by kuruvikal - 12-06-2004, 03:35 PM
[No subject] - by Rajan - 12-06-2004, 05:43 PM
[No subject] - by hari - 12-06-2004, 05:57 PM
[No subject] - by Nitharsan - 12-06-2004, 06:36 PM
[No subject] - by aathipan - 12-06-2004, 07:03 PM
[No subject] - by aathipan - 12-06-2004, 09:27 PM
[No subject] - by aswini2005 - 12-06-2004, 11:50 PM
[No subject] - by aswini2005 - 12-06-2004, 11:53 PM
[No subject] - by aswini2005 - 12-06-2004, 11:59 PM
[No subject] - by kuruvikal - 12-07-2004, 02:34 AM
[No subject] - by Kanani - 12-07-2004, 05:20 AM
[No subject] - by paandiyan - 12-07-2004, 05:36 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 06:10 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 06:29 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 07:16 AM
[No subject] - by kuruvikal - 12-07-2004, 11:23 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:26 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:32 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:40 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:47 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 04:00 PM
[No subject] - by Sabesh - 12-07-2004, 10:49 PM
[No subject] - by pepsi - 12-09-2004, 06:01 AM
[No subject] - by hari - 12-10-2004, 06:04 AM
[No subject] - by hari - 12-10-2004, 06:06 AM
[No subject] - by aathipan - 12-10-2004, 06:44 AM
[No subject] - by simran2005 - 12-11-2004, 05:27 PM
[No subject] - by Thusi - 12-11-2004, 06:03 PM
[No subject] - by Mathivathanan - 12-12-2004, 01:40 AM
[No subject] - by tamilini - 12-12-2004, 01:37 PM
[No subject] - by Mathivathanan - 12-12-2004, 11:08 PM
[No subject] - by aswini2005 - 12-12-2004, 11:25 PM
[No subject] - by tamilini - 12-12-2004, 11:35 PM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 12:34 AM
[No subject] - by yarlmohan - 12-13-2004, 12:46 AM
[No subject] - by tamilini - 12-13-2004, 01:00 AM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 03:03 AM
[No subject] - by kuruvikal - 12-13-2004, 03:11 AM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 03:30 AM
[No subject] - by Eelavan - 12-13-2004, 08:44 AM
[No subject] - by tamilini - 12-13-2004, 12:08 PM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 03:31 PM
[No subject] - by hari - 12-13-2004, 04:13 PM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 04:22 PM
[No subject] - by kuruvikal - 12-13-2004, 04:36 PM
[No subject] - by tamilini - 12-13-2004, 04:48 PM
[No subject] - by hari - 12-13-2004, 05:11 PM
[No subject] - by kavithan - 12-14-2004, 03:04 AM
[No subject] - by kavithan - 12-14-2004, 03:07 AM
[No subject] - by Mathivathanan - 12-14-2004, 03:19 AM
[No subject] - by Mathan - 12-14-2004, 04:07 AM
[No subject] - by kuruvikal - 12-14-2004, 04:43 AM
[No subject] - by Mathan - 12-14-2004, 05:04 AM
[No subject] - by kuruvikal - 12-14-2004, 11:49 AM
[No subject] - by வெண்ணிலா - 12-14-2004, 11:52 AM
[No subject] - by Mathan - 12-15-2004, 03:42 AM
[No subject] - by Mathan - 12-15-2004, 04:34 AM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 04:37 AM
[No subject] - by Mathan - 12-15-2004, 02:50 PM
[No subject] - by sethu - 12-15-2004, 02:53 PM
[No subject] - by Mathan - 12-15-2004, 04:24 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 04:58 PM
[No subject] - by Kanani - 12-15-2004, 11:02 PM
[No subject] - by Mathan - 12-16-2004, 11:04 PM
[No subject] - by cannon - 12-16-2004, 11:30 PM
[No subject] - by cannon - 12-16-2004, 11:35 PM
[No subject] - by kuruvikal - 12-16-2004, 11:37 PM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 11:50 PM
[No subject] - by Mathan - 12-17-2004, 05:09 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2004, 05:58 PM
[No subject] - by Mathan - 12-18-2004, 06:09 PM
[No subject] - by manimaran - 12-18-2004, 08:36 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 12:14 AM
[No subject] - by kuruvikal - 12-19-2004, 03:13 AM
[No subject] - by Mathan - 12-19-2004, 03:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)