12-15-2004, 04:24 PM
சயந்தனுடைய கருத்துக்களுக்கு டோண்டுவும் சீலனும் எழுதிய பதில்கள் .........
புலிகள் இந்தியாவில் ஆயுதக் கலாசாரத்தை புகுத்தியவர்களில் முக்கியமானவர்கள். ஏனைய ஈழப் போராளிகளும் இதைச் செய்தனர். ஆனாலும் புலிகள் அளவுக்கு இல்லை.
அவர்கள் உபயத்தில் கீழக் கடற்கரையில் கள்ளக் கடத்தல் அமோகமாக நடக்கிறது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினத்து தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தியைச் சாய்த்தவர்கள். பேச்சு வார்த்தைக்கு வந்தப் புலிகள் பிரதிநிதிகளை அமிர்தலிங்கம் அவர்கள் பெருந்தன்மையாக சோதனையிட வேண்டாமென்றுக் கூறியதற்குப் பதிலாக அதே இடத்தில் அவரைக் கொன்ற நம்பிக்கைத் துரோகிகள். பால சிங்கத்துக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று வெட்கமின்றிக் கேட்டவர்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்க தமிழகத்தில் ஒரு கூட்டம். ஒன்றும் நல்லதிற்கல்ல.
புலிகளின் வரலாற்றில் பலவீனம் அடையும் தருணத்தில் பேச்சு வார்த்தைக்கு வருவது, அதே நேரத்தில் ஆயுதங்களைச் சேகரிப்பது, பிறகு சமயம் பார்த்து முதுகில் குத்துவது ஆகியவையே அவர்கள் வேலையாகி விட்டது. இதில் நம்பிக்கை எங்கிருந்து வரும்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவின் உதவியைக் கேட்கிறார்கள்?
அவர்களை தூரத்தில் வைத்திருப்பதே இந்தியாவுக்கு நல்லது. அதைச் செய்வதாலேயே ஜெயலலிதா ஆதரவு பெறுகிறார்.
<b>அன்புடன்,
டோண்டு
Posted by Dondu at December 14, 2004 02:46 AM</b>
அமைதிப் படையென்ற பெயரில் வந்து தமிழ்ச் சனத்திற்கு பாடை கட்டியவர்கள், சயந்தன் எழுதியிருந்தது போல பசிக்கு அரிசி போட்டு வந்து பின்னர் வாய்க்கு அரிசி போட்டு போனவர்கள் என்று தெரிந்தும் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பங்களிப்பு குறித்து சிந்திக்கிறார்கள் என்றால் ஏன் இந்தியா சிந்திக்க கூடாது.
சயந்தனின் சாராம்சம் என்ன சொல்கிறது. சமாதான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அது சொல்கிறது.
மற்றும் படி புலிகளுக்கு ஆயுத உதவி செய்ய சொல்ல வில்லை. ஆரம்பத்தில் செய்த வரையில் நன்றி. இப்போது உதவி கேட்கிற நிலையில் புலிகள் இல்லை.
வன்முறை கூடாது என்பவர்கள், தீவிர வாதம் நசுக்கப் பட வேண்டும் என்பவர்கள் ஏன் சமாதானம் மலர வேண்டும் என குரல் கொடுப்பதில்லை.
இத்தனை நாளும் யுத்தத்தை கைவிடுங்கள் தீவிர வாதத்தை கைவிடுங்கள் என புலிகளுக்கு ஆலோசனையும் அழுத்தமும் கொடுத்தார்கள். இப்போது யுத்தத்தை நிறுத்தி விட்டு சமாதான பேச்சை ஆரம்பிக்க சொல்லி புலிகள் இலங்கையை கேட்கிறார்கள். அதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கும் படி உலக நாடுகளைக் கேட்கிறார்கள்.
அவ்வாறான ஒரு அழுத்தத்தை தான் இந்தியா கொடுக்க வேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சமாதானத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும் தானே.
மற்றும் படி ஜெயலலிதா... நாளைக்கே கருணாநிதி புலிகளை வன்முறையாளர்கள் கொடியவர்கள் என்றால்.. ஜெயலலிதா அவர்களை விடுதலைப் போராளிகள் என்பார். ஏற்கனவே சொன்னவர் தானே! தமிழக ஜனநாயக அரசியல் எமக்கும் தெரியும்.
<b>Posted by சீலன் at December 15, 2004 06:12 AM </b>
புலிகள் இந்தியாவில் ஆயுதக் கலாசாரத்தை புகுத்தியவர்களில் முக்கியமானவர்கள். ஏனைய ஈழப் போராளிகளும் இதைச் செய்தனர். ஆனாலும் புலிகள் அளவுக்கு இல்லை.
அவர்கள் உபயத்தில் கீழக் கடற்கரையில் கள்ளக் கடத்தல் அமோகமாக நடக்கிறது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினத்து தமிழ் மண்ணில் ராஜீவ் காந்தியைச் சாய்த்தவர்கள். பேச்சு வார்த்தைக்கு வந்தப் புலிகள் பிரதிநிதிகளை அமிர்தலிங்கம் அவர்கள் பெருந்தன்மையாக சோதனையிட வேண்டாமென்றுக் கூறியதற்குப் பதிலாக அதே இடத்தில் அவரைக் கொன்ற நம்பிக்கைத் துரோகிகள். பால சிங்கத்துக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று வெட்கமின்றிக் கேட்டவர்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்க தமிழகத்தில் ஒரு கூட்டம். ஒன்றும் நல்லதிற்கல்ல.
புலிகளின் வரலாற்றில் பலவீனம் அடையும் தருணத்தில் பேச்சு வார்த்தைக்கு வருவது, அதே நேரத்தில் ஆயுதங்களைச் சேகரிப்பது, பிறகு சமயம் பார்த்து முதுகில் குத்துவது ஆகியவையே அவர்கள் வேலையாகி விட்டது. இதில் நம்பிக்கை எங்கிருந்து வரும்? எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவின் உதவியைக் கேட்கிறார்கள்?
அவர்களை தூரத்தில் வைத்திருப்பதே இந்தியாவுக்கு நல்லது. அதைச் செய்வதாலேயே ஜெயலலிதா ஆதரவு பெறுகிறார்.
<b>அன்புடன்,
டோண்டு
Posted by Dondu at December 14, 2004 02:46 AM</b>
அமைதிப் படையென்ற பெயரில் வந்து தமிழ்ச் சனத்திற்கு பாடை கட்டியவர்கள், சயந்தன் எழுதியிருந்தது போல பசிக்கு அரிசி போட்டு வந்து பின்னர் வாய்க்கு அரிசி போட்டு போனவர்கள் என்று தெரிந்தும் ஈழத் தமிழர்கள் இந்தியாவின் பங்களிப்பு குறித்து சிந்திக்கிறார்கள் என்றால் ஏன் இந்தியா சிந்திக்க கூடாது.
சயந்தனின் சாராம்சம் என்ன சொல்கிறது. சமாதான பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க இந்தியா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அது சொல்கிறது.
மற்றும் படி புலிகளுக்கு ஆயுத உதவி செய்ய சொல்ல வில்லை. ஆரம்பத்தில் செய்த வரையில் நன்றி. இப்போது உதவி கேட்கிற நிலையில் புலிகள் இல்லை.
வன்முறை கூடாது என்பவர்கள், தீவிர வாதம் நசுக்கப் பட வேண்டும் என்பவர்கள் ஏன் சமாதானம் மலர வேண்டும் என குரல் கொடுப்பதில்லை.
இத்தனை நாளும் யுத்தத்தை கைவிடுங்கள் தீவிர வாதத்தை கைவிடுங்கள் என புலிகளுக்கு ஆலோசனையும் அழுத்தமும் கொடுத்தார்கள். இப்போது யுத்தத்தை நிறுத்தி விட்டு சமாதான பேச்சை ஆரம்பிக்க சொல்லி புலிகள் இலங்கையை கேட்கிறார்கள். அதற்கான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுக்கும் படி உலக நாடுகளைக் கேட்கிறார்கள்.
அவ்வாறான ஒரு அழுத்தத்தை தான் இந்தியா கொடுக்க வேண்டும் என தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சமாதானத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுக்க வேண்டும் தானே.
மற்றும் படி ஜெயலலிதா... நாளைக்கே கருணாநிதி புலிகளை வன்முறையாளர்கள் கொடியவர்கள் என்றால்.. ஜெயலலிதா அவர்களை விடுதலைப் போராளிகள் என்பார். ஏற்கனவே சொன்னவர் தானே! தமிழக ஜனநாயக அரசியல் எமக்கும் தெரியும்.
<b>Posted by சீலன் at December 15, 2004 06:12 AM </b>
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

