Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவசர வேண்டுகோள்!
#1
உலகத் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

தமிழர் தாயகத்தில் பெரு வெள்ளத்தால் அழிவுகளைச் சந்தித்து பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எம் மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க முன்வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.

கடந்த 4 நாட்;களாக தமிழர் தாயகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்;ட குடும்பங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தம் வசிப்பிடங்களை இழந்து பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் இந்த மக்கள் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு சிறிலங்கா அரசினது புனர் நிவாரண நிர்வாகங்களில் இருந்து எந்தவித உடனடி உதவிகளும் வழங்கப்படவில்லை. தமிழர் தாயகப்பகுதி என்ற காரணத்தினால் சிறிலங்கா அரசினால் அசமந்தம் காட்டப்படுகின்றது. வெள்ளத்தால் அழிவுகளை சந்தித்து அவலப்படும் எமது மக்களுக்கு உடனடியாக அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.

அவலப்படும் எம் உறவுகளுக்கு உதவ புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் முன்வரவேண்டும் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

நிதி, உடைகள் உள்ளிட்ட வகைகளில் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தத்தமது நாடுகளில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக கிளைகளில் உதவிகளை கையளிக்கலாம் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ள அழிவால் அவலப்படும் எம் உறவுகளுக்கு அவசரமாக உதவ முன்வருமாறு புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

மட்டக்களப்பில் 68 ஆயிரம் பேரும், அம்பாறையில் 40 ஆயிரம் பேரும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய தமிழர் தாயக மாவட்டங்களில் இதே அளவு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதில் தற்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது

puthinam.com
Reply


Messages In This Thread
அவசர வேண்டுகோள்! - by vasisutha - 12-15-2004, 07:07 AM
[No subject] - by ஊமை - 12-15-2004, 07:16 AM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 01:11 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 01:17 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 01:22 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 01:33 PM
[No subject] - by sethu - 12-15-2004, 01:45 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 01:58 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 02:01 PM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 02:05 PM
[No subject] - by Danklas - 12-15-2004, 02:10 PM
[No subject] - by sethu - 12-15-2004, 02:16 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 03:19 PM
[No subject] - by selvanNL - 12-15-2004, 03:36 PM
[No subject] - by vasisutha - 12-17-2004, 02:08 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:04 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:10 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:13 AM
[No subject] - by hari - 12-17-2004, 08:16 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)