Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மெல்ல வாய் திறக்கும் தமிழகம்
#61
ஈழம் தமிழகம் இந்தியா சில குறிப்புக்கள்

முதற்தடவையாக இலங்கைக்கு வெளியே விடுதலைப் புலிகள் சார்ந்த ஒரு நிகழ்வுக்கு கடந்த சனிக்கிழமை (04.12.2004) போயிருந்தேன்.

அது மெல்பேர்ண் நகரில் நிகழ்ந்த மாவீரர் தினம்!

இம்முறை இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழகத்திலிருந்து ஓவியர் புகழேந்தி அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் சொல்லியிருந்த ஒரு கருத்துக் குறித்து இன்னமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர் சொல்லுகிறார். தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கான ஆதரவென்பது நீறு பூத்த நெருப்பாக இருக்கிறது. சட்டங்களாலும் அடக்குமுறைகளாலும் அவர்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். என புகழேந்தி தொடர்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்பவன் என்கிற முறையில் இதனைத் தான் சொல்லுவதாக வேறு புகழேந்தி குறிப்பிட்டார்.

இதனை நம்பி மனதின் எங்கோ ஒரு ஓரம் மகிழ்ச்சி கொள்வதா அல்லது அழைத்த காரணத்திற்காக புகழேந்தி அதனைச் சொல்லியிருப்பார். அது தவிர அதில் உண்மை எதுவும் கிடையாது என மனதைத் தேற்றிக்கொள்ளவா என எனக்கு தெரியவில்லை.

----------------------------------------------------------------------------

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் இலங்கை சென்று திரும்பியிருக்கிறார். வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர் கப்டன் மலரவன் எழுதிய போருலா என்னும் இலக்கியம் உட்பட மூன்று புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட திருமாவளவன் கொழும்பில் இலங்கைப் பிரதமரையும் சந்தித்திருக்கிறார்.

2002 ஒக்ரோபரிலும் திருமாவளவன் யாழ்ப்பாணம் வந்திருந்தார். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருந்த மானுடத்தின் தமிழ்க் கூடல் 2002 இல் பங்கு கொள்வதற்காக அப்போது அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

----------------------------------------------------------------------------

இயக்குனர் பாரதிராஜாவும் இலங்கையின் வடபகுதி சென்று வந்திருக்கிறார். போரின் வடுக்கள் குறித்தும் அவர் அங் தங்கியிருந்த போது நிகழ்ந்த மாவீரர் தினம் குறித்தும் புலிகளின் போர் வீரம் குறித்தும் அவர் தமிழக இதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கிறார்.

----------------------------------------------------------------------------

தமிழ்க் கருத்துக்கள தளம் ஒன்றில் அண்மைக்காலமாக ஒரு குறித்த கருத்தின் மீதான விவாதம் ஒன்றினை அவதானித்து வருகிறேன். ஈழத்தமிழர்களும் புலிகளும் தமது ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக தமிழக அரசின் நட்பினைப் பெற வேண்டும் என்பதே அந்த விவாதத்தின் மையப் பொருளாகிறது.

அண்மைக்காலமாக சர்வதேச நாடுகளின் நல்லெண்ணத்தினைப் பெறுகின்ற நோக்கில் புலிகள் காய்களை நகர்த்தியிருக்கிறார்கள். ஈழநாதம் பத்தி எழுத்தாளர் நிலாந்தன் எழுதியது போல கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் வாரா வாரம் வந்து இறங்கும் ஹெலிகொப்ரர்களையும் அதிலிருந்து இறங்கும் வெள்ளை மனிதர்களையும் பார்த்தால் புலிகளின் நகர்த்தல்கள் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருக்கின்றது என்பது தெளிவாகிறது.

இதே நோக்கில் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை ஓர் தூதுக்குழுவாக இந்தியாவுக்கு அனுப்பி அரசியல் வாதிகளை சந்திக்கின்ற ஏற்பாடுகளைச் செய்யலாம் என அக் கருத்துக் களத்தில் பலர் எழுதுகின்ற அதே வேளை இன்னும் சிலர் இதெல்லாம் வேலைக்காவாது என்றும் எழுதுகிறார்கள்.

----------------------------------------------------------------------------

சில காலங்களுக்கு முன்பு வெரித்தாஸ் ஜெகத் கஸ்பார் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பெரும் யுத்தம் மூண்டால் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவிற்குத் தான் தார்மீக ஆதரவினைக் கொடுப்பார்கள் என்கிறார் அவர்.

என்னளவில் எனக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எந்த கசப்பும் இல்லை. இருந்த போதும் கடந்த கார்கில் சண்டையில் இந்திய வெற்றிச் செய்தியைக் கேட்ட போது எனக்கு ஏற்பட்ட நிறைவிற்கு என்ன காரணம் எனச் சிந்தித்தால் விடைகளாகக் கூடிய மூன்று காரணங்களை என்னால் பட்டியல் இட முடியும்.

1. நான் ஒரு துரோகி (எங்கள் பசிக்கு அரிசி போட்டு வந்து இறுதியில் வாய்க்கரிசி போட்டுப்போன ஒரு நாட்டினை நான் ஆதரித்ததால்.)

2. இந்து மதம்.

3. ஆயிரம் பிரச்சனைகள் வரும். ஆனாலும் நாங்கள் அண்ணன் தம்பி என்கிற மாதிரியான ஒரு வித உணர்வு ரீதியான பிணைப்பு.

இறுதி விடையே எனக்கான விடை என்பது எனக்கு தெரிகிறது. மற்றவர்களுக்கு எப்படியோ?

----------------------------------------------------------------------------

இன்றைக்கு சர்வதேசத்திடம் இலங்கைத் தமிழர்கள் கேள்வி ஒன்றினைத் தொடுத்திருக்கிறார்கள்.

எங்களுக்கு என்ன தீர்வு?

இடைக்கால நிர்வாக சபை குறித்து பேசவே கூடாது என்கிறது அரசின் பங்காளிக் கட்சியான ஜே வி பி.

பேசினால் வீதியில் இறங்கி போராடுவோம் என்கிறார்கள் அவர்கள்.

அண்மைக்காலங்களாக புலிகள் மேற்கொண்டு வரும் ஆளுமை மிக்க அரசியல் நகர்வுகளுக்கூடாக இப்பிரச்சனையை சர்வதேசத்திடம் கொண்டு செல்வார்கள் என்ற கருத்து எனக்கு உண்டு.

ஒரு வேளை புலிகளே மீண்டும் யுத்தத்தை தொடங்கினாலும் அவ்வாறான யுத்தம் ஒன்றிற்கான தேவை நிலை ஒன்றினை உலகம் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்ளும் வரை அவர்கள் காத்திருப்பார்கள் என்றே கருதுகிறேன்.

அதன் முன்பாக அதனை உணர்த்துவதற்கான வேலைத் திட்டங்களில் அவர்கள் ஈடுபட வேண்டிருக்கும்.

உலகம் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது.

புலிகள் பேசலாம் வாருங்கள் என்கிறார்கள். என்ன சிக்கலானாலும் பேச்சு மேசைக்கு வாருங்கள் பேசி முடிவு காணலாம் என்கிறார்கள். நீங்கள் ஏன் இன்னும் போக வில்லை என அது இலங்கை அரசிடம் கேள்வி கேட்க வேணும். இலங்கை அரசு தெளிவாக பதில் சொல்ல வேணும்.

முடிப்பதற்கு முன்னால் மற்றொன்று!

இன்று இலங்கைக்கான கோடிக்கணக்கான நிதியுதவிகளை தடுத்து நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பியுங்கள். ஆரம்பித்தால்த்தான் காசு தருவோம் என உலக நாடுகள் இலங்கை அரசினை வற்புறுத்துகின்றன.

இப்படியான ஒரு வாய்ப்பில் இந்தியா கூட பேச்சுக்களை புலிகளோடு மீள ஆரம்பியுங்கள்.. ஆரம்பித்தால்த்தான் பாதுகாப்பு ஒப்பந்தம். படைத்தளபாடங்கள் அன்பளிப்பு என்று ஒரு வார்த்தை சொல்லலாமே!

அந்தப் பாதுகாப்பு ஒப்பந்தமும் படைக்கலங்களும் ஈழத்தமிழரை அழிப்பதற்கே பயன்பட்டாலும் பரவாயில்லை!

நன்றி - சயந்தன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by paandiyan - 12-06-2004, 09:46 AM
[No subject] - by hari - 12-06-2004, 09:48 AM
[No subject] - by aathipan - 12-06-2004, 11:38 AM
[No subject] - by kuruvikal - 12-06-2004, 03:35 PM
[No subject] - by Rajan - 12-06-2004, 05:43 PM
[No subject] - by hari - 12-06-2004, 05:57 PM
[No subject] - by Nitharsan - 12-06-2004, 06:36 PM
[No subject] - by aathipan - 12-06-2004, 07:03 PM
[No subject] - by aathipan - 12-06-2004, 09:27 PM
[No subject] - by aswini2005 - 12-06-2004, 11:50 PM
[No subject] - by aswini2005 - 12-06-2004, 11:53 PM
[No subject] - by aswini2005 - 12-06-2004, 11:59 PM
[No subject] - by kuruvikal - 12-07-2004, 02:34 AM
[No subject] - by Kanani - 12-07-2004, 05:20 AM
[No subject] - by paandiyan - 12-07-2004, 05:36 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 06:10 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 06:29 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 07:16 AM
[No subject] - by kuruvikal - 12-07-2004, 11:23 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:26 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:32 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:40 AM
[No subject] - by aswini2005 - 12-07-2004, 11:47 AM
[No subject] - by aathipan - 12-07-2004, 04:00 PM
[No subject] - by Sabesh - 12-07-2004, 10:49 PM
[No subject] - by pepsi - 12-09-2004, 06:01 AM
[No subject] - by hari - 12-10-2004, 06:04 AM
[No subject] - by hari - 12-10-2004, 06:06 AM
[No subject] - by aathipan - 12-10-2004, 06:44 AM
[No subject] - by simran2005 - 12-11-2004, 05:27 PM
[No subject] - by Thusi - 12-11-2004, 06:03 PM
[No subject] - by Mathivathanan - 12-12-2004, 01:40 AM
[No subject] - by tamilini - 12-12-2004, 01:37 PM
[No subject] - by Mathivathanan - 12-12-2004, 11:08 PM
[No subject] - by aswini2005 - 12-12-2004, 11:25 PM
[No subject] - by tamilini - 12-12-2004, 11:35 PM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 12:34 AM
[No subject] - by yarlmohan - 12-13-2004, 12:46 AM
[No subject] - by tamilini - 12-13-2004, 01:00 AM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 03:03 AM
[No subject] - by kuruvikal - 12-13-2004, 03:11 AM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 03:30 AM
[No subject] - by Eelavan - 12-13-2004, 08:44 AM
[No subject] - by tamilini - 12-13-2004, 12:08 PM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 03:31 PM
[No subject] - by hari - 12-13-2004, 04:13 PM
[No subject] - by Mathivathanan - 12-13-2004, 04:22 PM
[No subject] - by kuruvikal - 12-13-2004, 04:36 PM
[No subject] - by tamilini - 12-13-2004, 04:48 PM
[No subject] - by hari - 12-13-2004, 05:11 PM
[No subject] - by kavithan - 12-14-2004, 03:04 AM
[No subject] - by kavithan - 12-14-2004, 03:07 AM
[No subject] - by Mathivathanan - 12-14-2004, 03:19 AM
[No subject] - by Mathan - 12-14-2004, 04:07 AM
[No subject] - by kuruvikal - 12-14-2004, 04:43 AM
[No subject] - by Mathan - 12-14-2004, 05:04 AM
[No subject] - by kuruvikal - 12-14-2004, 11:49 AM
[No subject] - by வெண்ணிலா - 12-14-2004, 11:52 AM
[No subject] - by Mathan - 12-15-2004, 03:42 AM
[No subject] - by Mathan - 12-15-2004, 04:34 AM
[No subject] - by kuruvikal - 12-15-2004, 04:37 AM
[No subject] - by Mathan - 12-15-2004, 02:50 PM
[No subject] - by sethu - 12-15-2004, 02:53 PM
[No subject] - by Mathan - 12-15-2004, 04:24 PM
[No subject] - by KULAKADDAN - 12-15-2004, 04:58 PM
[No subject] - by Kanani - 12-15-2004, 11:02 PM
[No subject] - by Mathan - 12-16-2004, 11:04 PM
[No subject] - by cannon - 12-16-2004, 11:30 PM
[No subject] - by cannon - 12-16-2004, 11:35 PM
[No subject] - by kuruvikal - 12-16-2004, 11:37 PM
[No subject] - by KULAKADDAN - 12-16-2004, 11:50 PM
[No subject] - by Mathan - 12-17-2004, 05:09 AM
[No subject] - by Mathivathanan - 12-17-2004, 05:58 PM
[No subject] - by Mathan - 12-18-2004, 06:09 PM
[No subject] - by manimaran - 12-18-2004, 08:36 PM
[No subject] - by Mathan - 12-19-2004, 12:14 AM
[No subject] - by kuruvikal - 12-19-2004, 03:13 AM
[No subject] - by Mathan - 12-19-2004, 03:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)