08-02-2003, 03:27 PM
[quote=AJeevan]
அன்றைய இலங்கை பட முதலாளிகள் செய்த அதே தவறைத்தான் புலம் பெயர் தமிழ் தொலைக்காட்சிகளின் முதலாளிகளும் செய்து வருகிறார்கள்.அது அவர்களுக்கே வினையாகிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் எவரும் இங்கு வாழும் எமது கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை மனமுவந்து வழங்கவேயில்லை.
தென்னிந்தியாவைத் தேடிச் சென்ற இவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் தனது சக உடன் பிறப்பை தெரியவேயில்லை.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
தென்னிந்திய சினிமாக்கள் எங்களை ஆட்கொண்டு பல காலங்கள் ஆகிவிட்டது. தென்னிந்திய சினிமா என்பது இன்று சாதாரணமாக வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டதொன்று. தென்னிந்திய சினிமா செய்திகளைத் தாங்கித்தான் தமிழ்ப் பத்திரிகைகள் உலா வருகின்றன. இல்லாவிட்டால் அவை வியாபாரத்துறையில் தோல்வியைத் தழுவிவிடும நிலைதான் உள்ளது.
இணையப்பக்கங்களையும் கூட அவை பெரிதளவு ஆட்கொண்டுள்ளன. தேசியம் பேசுபவர்கள் கூட சினிமா பாடல்கள் அல்லது சினிமா செய்திகள், பேட்டிகள் இல்லாமல் தங்களது ஊடகங்களை நடாத்த முடியாத நிலையே இன்று உள்ளது.
புலம்பெயர்ந்த வாழ்வில் எங்களுடைய இயந்திர வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது, இருப்பது இந்த சினிமாதான். வேலையால் களைத்து வீடு திரும்புபவனுக்கு யதார்த்த வாழ்க்கையைக் காண்பிக்கின்றோம் என்றால் அது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது கேள்வி.
ஒன்றில் எங்களவர்களின் ரசிக்கும் திறமையை நாம் மாற்ற முற்பட வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய ரசனைக்கேற்ப படைப்புக்களைத் தந்து படிப்படியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ரசிகர்கள் அறிவானவர்கள், ரசிக்கும் திறன் உள்ளவர்கள் என்று எண்ணிக் கொண்டு படைப்புக்கள் வருமாயின், அது ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அமிழ்ந்து விடும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமாயின் ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகை எல்லோரிடமும் போய்ச் சேர வாய்ப்புண்டு. அதேவேளையில் ஒரு இலக்கியப் பத்திரிகை ஒரு குறிப்பிட்டவர்கள் கையில் மட்டுமே இருக்க வாய்ப்புண்டு.
ஊடகங்கள் வியாபாரத்திற்கோ அன்றி பிராச்சாரத்திற்காகவோ இருப்பினும், அவற்றை நடாத்த பணம் வேண்டும், போதுமான ரசிகர்கள் வேண்டும். ஆகவேதான் அவர்கள் தென்னிந்தியாவில் இருந்து நிகழ்ச்சியைத் தருவிக்கின்றார்கள். ஆக ஊடகவியலாளரை வெறுமனே குற்றம் சுமத்துவது பொருந்தாது. எமது கலைஞர்களின் நிகழ்ச்சிகளை முற்றாக அவர்கள் புறந்தள்ளியிருந்தால் உங்கள் ஆதங்கத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எங்கள் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. உதாரணத்திற்காக வேண்டுமானால் இந்தக் களத்தில் வந்து போகும் நாச்சிமார் கோயிலடி ராஜனைச் சொல்லலாம். அவரது வில்லிசை வாரம்தோறும் இடம்பெறுவதாக அறிகின்றேன்.
ஆக எங்கள் கலைஞர்களின் திரைப்படத் துறையிலான வளர்ச்சிக்கு ஊடகவியலாளரின் பங்கு என்ன என்பதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரமிது.
அன்றைய இலங்கை பட முதலாளிகள் செய்த அதே தவறைத்தான் புலம் பெயர் தமிழ் தொலைக்காட்சிகளின் முதலாளிகளும் செய்து வருகிறார்கள்.அது அவர்களுக்கே வினையாகிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் எவரும் இங்கு வாழும் எமது கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை மனமுவந்து வழங்கவேயில்லை.
தென்னிந்தியாவைத் தேடிச் சென்ற இவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் தனது சக உடன் பிறப்பை தெரியவேயில்லை.
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
தென்னிந்திய சினிமாக்கள் எங்களை ஆட்கொண்டு பல காலங்கள் ஆகிவிட்டது. தென்னிந்திய சினிமா என்பது இன்று சாதாரணமாக வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டதொன்று. தென்னிந்திய சினிமா செய்திகளைத் தாங்கித்தான் தமிழ்ப் பத்திரிகைகள் உலா வருகின்றன. இல்லாவிட்டால் அவை வியாபாரத்துறையில் தோல்வியைத் தழுவிவிடும நிலைதான் உள்ளது.
இணையப்பக்கங்களையும் கூட அவை பெரிதளவு ஆட்கொண்டுள்ளன. தேசியம் பேசுபவர்கள் கூட சினிமா பாடல்கள் அல்லது சினிமா செய்திகள், பேட்டிகள் இல்லாமல் தங்களது ஊடகங்களை நடாத்த முடியாத நிலையே இன்று உள்ளது.
புலம்பெயர்ந்த வாழ்வில் எங்களுடைய இயந்திர வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது, இருப்பது இந்த சினிமாதான். வேலையால் களைத்து வீடு திரும்புபவனுக்கு யதார்த்த வாழ்க்கையைக் காண்பிக்கின்றோம் என்றால் அது எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பது கேள்வி.
ஒன்றில் எங்களவர்களின் ரசிக்கும் திறமையை நாம் மாற்ற முற்பட வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய ரசனைக்கேற்ப படைப்புக்களைத் தந்து படிப்படியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். ரசிகர்கள் அறிவானவர்கள், ரசிக்கும் திறன் உள்ளவர்கள் என்று எண்ணிக் கொண்டு படைப்புக்கள் வருமாயின், அது ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அமிழ்ந்து விடும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமாயின் ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகை எல்லோரிடமும் போய்ச் சேர வாய்ப்புண்டு. அதேவேளையில் ஒரு இலக்கியப் பத்திரிகை ஒரு குறிப்பிட்டவர்கள் கையில் மட்டுமே இருக்க வாய்ப்புண்டு.
ஊடகங்கள் வியாபாரத்திற்கோ அன்றி பிராச்சாரத்திற்காகவோ இருப்பினும், அவற்றை நடாத்த பணம் வேண்டும், போதுமான ரசிகர்கள் வேண்டும். ஆகவேதான் அவர்கள் தென்னிந்தியாவில் இருந்து நிகழ்ச்சியைத் தருவிக்கின்றார்கள். ஆக ஊடகவியலாளரை வெறுமனே குற்றம் சுமத்துவது பொருந்தாது. எமது கலைஞர்களின் நிகழ்ச்சிகளை முற்றாக அவர்கள் புறந்தள்ளியிருந்தால் உங்கள் ஆதங்கத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் எங்கள் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. உதாரணத்திற்காக வேண்டுமானால் இந்தக் களத்தில் வந்து போகும் நாச்சிமார் கோயிலடி ராஜனைச் சொல்லலாம். அவரது வில்லிசை வாரம்தோறும் இடம்பெறுவதாக அறிகின்றேன்.
ஆக எங்கள் கலைஞர்களின் திரைப்படத் துறையிலான வளர்ச்சிக்கு ஊடகவியலாளரின் பங்கு என்ன என்பதை நீங்கள் சொல்ல வேண்டிய நேரமிது.

