11-29-2004, 04:02 AM
யூட்டீன் வாதத்துள் நியாயம் இருக்கிறது.... தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் பலம் மிக்க சக்தி புலிகளே... அது சிறீலங்கா முதல் இந்தியா ஈறாக சகல நாடுகளுக்கும் தெரியும்... அதனால் அவர்கள் புலிகளின் தலைமைப் பீடத்தை தகர்க்க காத்திருப்பதும் வெளிப்படை... இந்தியா தலைவரை தேடுவோர் பட்டியலில் இட்டு அவர்களின் நீதிமன்ற உத்தரவோடு காத்திருக்கிறது வேட்டையாட....அல்லது அழுத்தங்களைப் பிரயோகிக்க... அமெரிக்கா இதற்கெல்லாம் ஒரு படி முன்னோடியாக பயங்கரவாத முத்திரை குத்தி வைத்திருக்கிறது.... இவை வெளிப்படை....!
எனவே சகல உளவுப் பிரிவுகளும் புலிகளை என்ன விலை கொடுத்தும் பலவீனப்படுத்தி தாம் ஆட்டி வைக்க ஆடும் தலைமையை புலிகளுக்குள் புகுத்த...அல்லது புலிகள் தலைமையை உறையச் செய்ய...பலஸ்தீனத்தில் அரபாத்தைக் கட்டிப்போட்டது போல....அல்லது மாற்று அமைப்பை தமிழர்களுக்குள் திணிக்க கங்கணம் கட்டுவதும் தெரியும்....!
இதற்கு நல்ல உதாரணம் டக்ளஸ் என்பவரை ஜயசுக்குறு காலத்தில் அமெரிக்கா வெளிப்படையாகவே தனது நாட்டுக்கு அழைத்து தாலாட்டுப் பாடியதும் இந்தியா வரதராஜப் பெருமாளுக்கு மகுடம் சூட்டி வைத்திருப்பதும் கொழும்புக்கு அனுப்பி பிரபல்யப்படுத்துவதும்..துரோக அரசியல் சதுரங்கம் ஆடுவதும்...சங்கரியார் கொண்டு மடி நிரப்பி அகிம்சை சனநாயகம் பேசுவதும்... என்றும் இன்னும் பல உதாரணங்களும் இருக்கு.....!
உண்மையில் புலிகள் தலைமைத்துவத்தை மட்டும் மாத்தையா கருணா போன்றவர்களின் உருவாக்கத்துக்கு முழுவதும் குறை சொல்ல முடியாது...! ஒரு பெரிய விடுதலை அமைப்புள் தலைவர் எத்தனை பேரைக் நேரடியாக அல்லது தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கொண்டு கண்காணிக்க முடியும்...அது பூரண சாத்தியம் இல்லை....! அமெரிக்கப் படையிலும் புஷ்ஷுக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள் தான்...ஆனால் அதற்காக அவர்களை தனித்து ஒரு சக்தியா இயக்க ஒரு சக்தி இன்னும் உலகிலோ அமெரிக்காவிலோ தயாரில்லை...!
ஆனால் புலிகளைப் பொறுத்தவரை அவர்களைப் பலவீனப்படுத்த நேரடி எதிரி முதல் மறைமுக எதிரிகளும் கைகோர்த்து நிற்பதால் புலியின் சாதாரண உறுப்பினரையே விலைக்கு வாங்கி குழப்பங்களை விளைவித்துப் புலிகளை இயன்றவரை பலவீனப்படுத்த அல்லது அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்க்க பலரும் விளக்கெண்ணை கண்ணில் விட்டுக் காத்திருக்கின்றனர்....!
இதைத் தடுக்க புலிகளால் மட்டுமன்றி மக்களாலும் தான் முடியும்.... துரோகிகளை மக்கள் உடனடியாக நிராகரிக்க வேண்டும்...அவர்களின் பொய்ப்பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டும்...உண்மையை விளங்க விளக்க முற்பட வேண்டும்...அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும்...புலிகளும் மக்களும் வேறல்ல என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்...தற்போதைய போராட்டம் மக்கள் போராட்டம் அதன் ஒரு அம்சமே புலிகள் என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டும்...புலிகளின் தலைமை மக்கள் தலைமை என்பதைச் சொல்ல வேண்டும்...! இதை ஒற்றுமையாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒத்த குரலில் சொல்ல வேண்டும் செயலிலும் காட்ட வேண்டும்...!
அப்போதான் புலிகளுக்குள் பதுங்கி இருக்கும் பூனைகளும் வெளியில் வேட்டைக்குக் காத்திருக்கும் கழுகுகளும் காகங்களும் சிங்கங்களும் கருணாக்களும் குள்ள நரிகளும்... துரோக ஓநாய்களும் மக்கள் சக்தி முன் மண்டியிட வேண்டிய நிலை வரும்...! அத்துடன் மக்கள் எப்போதும் இவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்....இவர்களின் நேரடி மறைமுகச் செயல்களை கண்டும் காணாததும் போல் இருக்காது நேரடியாக கண்டிக்க வேண்டும்...! புறக்கணித்து ஒதுக்க வேண்டும்...தாம்தாம் வாழும் மண்ணில் இருந்து இவர்களை இவர்களின் வால்களையும் ஓட்ட வேண்டும்....அல்லது அவர்களை அடையாளப்படுத்த வேண்டும்... தனிமைப்படுத்த வேண்டும்...! புலிகளும் இன்று அதனைத்தான் ஒரு மக்கள் அமைப்பாக வளர்ந்து நின்று கொண்டு எதிர்பார்த்து நிற்கின்றனர்...!
இன்று பொங்குதமிழ் நடத்தி உலகெங்கும் வாழும் மக்கள் தமிழீழம் எமது தேசம்.... விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டம்... புலிகள் மக்கள் பிள்ளைகள் பிரதிநிதிகள்...மக்கள் தலைமை புலிகளின் தற்போதைய தலைமையே என்று வலியுறுத்தி வருவது தொடர வேண்டும்.. இன்னும் பலம் பெற்று அது மக்களை இணைக்கும் குரலாக என்றும் ஒலிக்க வேண்டும்....!
அதுமட்டுமன்றி புலிகளைப் பலப்படுத்துவதும் மக்கள் பணிதான்...அது ஆட்பலமாய் இருக்கட்டும் ஆயுத பலமாய் இருக்கட்டும் பொருளாதார பலமாய் இருக்கட்டும்...அவர்கள் தான் இப்போ மக்கள் பலம்...அவர்களால்தான் மக்களின் கொள்கைகளை வென்றெடுக்க முடியும் அதற்கான உறுதிப்பாட்டை அவர்கள் எங்களுக்கு காட்டியுள்ளனர் அதுவும் பல சவால்களை சந்தித்து முறையடித்து என்பதையும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் தங்களின் தியாகங்களை ஒரு தடவை நினைவு கூர்ந்து சிந்தித்துப் பார்த்து தமது கடமைகளை எங்கிருப்பினும் இயன்றவரை செய்யத் தவறக்கூடாது....!
எனவே சகல உளவுப் பிரிவுகளும் புலிகளை என்ன விலை கொடுத்தும் பலவீனப்படுத்தி தாம் ஆட்டி வைக்க ஆடும் தலைமையை புலிகளுக்குள் புகுத்த...அல்லது புலிகள் தலைமையை உறையச் செய்ய...பலஸ்தீனத்தில் அரபாத்தைக் கட்டிப்போட்டது போல....அல்லது மாற்று அமைப்பை தமிழர்களுக்குள் திணிக்க கங்கணம் கட்டுவதும் தெரியும்....!
இதற்கு நல்ல உதாரணம் டக்ளஸ் என்பவரை ஜயசுக்குறு காலத்தில் அமெரிக்கா வெளிப்படையாகவே தனது நாட்டுக்கு அழைத்து தாலாட்டுப் பாடியதும் இந்தியா வரதராஜப் பெருமாளுக்கு மகுடம் சூட்டி வைத்திருப்பதும் கொழும்புக்கு அனுப்பி பிரபல்யப்படுத்துவதும்..துரோக அரசியல் சதுரங்கம் ஆடுவதும்...சங்கரியார் கொண்டு மடி நிரப்பி அகிம்சை சனநாயகம் பேசுவதும்... என்றும் இன்னும் பல உதாரணங்களும் இருக்கு.....!
உண்மையில் புலிகள் தலைமைத்துவத்தை மட்டும் மாத்தையா கருணா போன்றவர்களின் உருவாக்கத்துக்கு முழுவதும் குறை சொல்ல முடியாது...! ஒரு பெரிய விடுதலை அமைப்புள் தலைவர் எத்தனை பேரைக் நேரடியாக அல்லது தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களைக் கொண்டு கண்காணிக்க முடியும்...அது பூரண சாத்தியம் இல்லை....! அமெரிக்கப் படையிலும் புஷ்ஷுக்கு எதிரானவர்கள் இருக்கிறார்கள் தான்...ஆனால் அதற்காக அவர்களை தனித்து ஒரு சக்தியா இயக்க ஒரு சக்தி இன்னும் உலகிலோ அமெரிக்காவிலோ தயாரில்லை...!
ஆனால் புலிகளைப் பொறுத்தவரை அவர்களைப் பலவீனப்படுத்த நேரடி எதிரி முதல் மறைமுக எதிரிகளும் கைகோர்த்து நிற்பதால் புலியின் சாதாரண உறுப்பினரையே விலைக்கு வாங்கி குழப்பங்களை விளைவித்துப் புலிகளை இயன்றவரை பலவீனப்படுத்த அல்லது அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தகர்க்க பலரும் விளக்கெண்ணை கண்ணில் விட்டுக் காத்திருக்கின்றனர்....!
இதைத் தடுக்க புலிகளால் மட்டுமன்றி மக்களாலும் தான் முடியும்.... துரோகிகளை மக்கள் உடனடியாக நிராகரிக்க வேண்டும்...அவர்களின் பொய்ப்பிரச்சாரங்களை நிராகரிக்க வேண்டும்...உண்மையை விளங்க விளக்க முற்பட வேண்டும்...அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களை உலகுக்கு அம்பலப்படுத்த வேண்டும்...புலிகளும் மக்களும் வேறல்ல என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்...தற்போதைய போராட்டம் மக்கள் போராட்டம் அதன் ஒரு அம்சமே புலிகள் என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டும்...புலிகளின் தலைமை மக்கள் தலைமை என்பதைச் சொல்ல வேண்டும்...! இதை ஒற்றுமையாக உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் ஒத்த குரலில் சொல்ல வேண்டும் செயலிலும் காட்ட வேண்டும்...!
அப்போதான் புலிகளுக்குள் பதுங்கி இருக்கும் பூனைகளும் வெளியில் வேட்டைக்குக் காத்திருக்கும் கழுகுகளும் காகங்களும் சிங்கங்களும் கருணாக்களும் குள்ள நரிகளும்... துரோக ஓநாய்களும் மக்கள் சக்தி முன் மண்டியிட வேண்டிய நிலை வரும்...! அத்துடன் மக்கள் எப்போதும் இவர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்....இவர்களின் நேரடி மறைமுகச் செயல்களை கண்டும் காணாததும் போல் இருக்காது நேரடியாக கண்டிக்க வேண்டும்...! புறக்கணித்து ஒதுக்க வேண்டும்...தாம்தாம் வாழும் மண்ணில் இருந்து இவர்களை இவர்களின் வால்களையும் ஓட்ட வேண்டும்....அல்லது அவர்களை அடையாளப்படுத்த வேண்டும்... தனிமைப்படுத்த வேண்டும்...! புலிகளும் இன்று அதனைத்தான் ஒரு மக்கள் அமைப்பாக வளர்ந்து நின்று கொண்டு எதிர்பார்த்து நிற்கின்றனர்...!
இன்று பொங்குதமிழ் நடத்தி உலகெங்கும் வாழும் மக்கள் தமிழீழம் எமது தேசம்.... விடுதலைப் போராட்டம் மக்கள் போராட்டம்... புலிகள் மக்கள் பிள்ளைகள் பிரதிநிதிகள்...மக்கள் தலைமை புலிகளின் தற்போதைய தலைமையே என்று வலியுறுத்தி வருவது தொடர வேண்டும்.. இன்னும் பலம் பெற்று அது மக்களை இணைக்கும் குரலாக என்றும் ஒலிக்க வேண்டும்....!
அதுமட்டுமன்றி புலிகளைப் பலப்படுத்துவதும் மக்கள் பணிதான்...அது ஆட்பலமாய் இருக்கட்டும் ஆயுத பலமாய் இருக்கட்டும் பொருளாதார பலமாய் இருக்கட்டும்...அவர்கள் தான் இப்போ மக்கள் பலம்...அவர்களால்தான் மக்களின் கொள்கைகளை வென்றெடுக்க முடியும் அதற்கான உறுதிப்பாட்டை அவர்கள் எங்களுக்கு காட்டியுள்ளனர் அதுவும் பல சவால்களை சந்தித்து முறையடித்து என்பதையும் மக்கள் தங்கள் பிள்ளைகளின் தங்களின் தியாகங்களை ஒரு தடவை நினைவு கூர்ந்து சிந்தித்துப் பார்த்து தமது கடமைகளை எங்கிருப்பினும் இயன்றவரை செய்யத் தவறக்கூடாது....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

