11-27-2004, 06:29 AM
Kanani Wrote:பார்ப்பண்ணியம் கேள்விப்பட்டதுண்டா?
சரி பா÷ப்பனியம் இருக்கிறது. அது தமிழீழத்துக்கு தடையாக இருக்கிறது. அது பற்றி என்ன செய்வதாக உத்தேசம்?
பா÷ப்பனியத்தை பாதுகாக்கும் இந்து சமயத்தை அனைவருமே பின்பற்றும் நிலையில் இதனை எப்படி கையாள போகிறீ÷கள்?
shiyam Wrote:தோடா வந்திட்டார் யுட் இந்தியாக்கு வக்காலத்து வாங்க
சியாம்,
எழுதியதை வாசித்து ஏதும் பயனுள்ளதாக எழுதுங்கள். நான் வக்காலத்து வாங்கியது தமிழீழத்துக்காக. தமிழ் சரியாக புரியுமானால் திரும்பவும் வாசித்து பாருங்கள்.
இந்தியாவுக்கு நான் வக்காலத்து வாங்கவேண்டிய அவசியமில்லை. காரணம் இந்தியா ஏற்கனவே அங்கிகரிக்கப்பட்ட நாடு. தமிழீழம்தான், பாவம். இன்னமும் அகதிகளுடன், சிறிலங்காவின் விமானநிலையத்தில் தங்கி, மாற்றான் சதியில் உய÷மட்டதலைவ÷களை கூட பறிகொடுத்துவிட்டு, யாருமே அங்கிகரிக்க முன்வராத நிலையில், பரிதாபமாக நிற்கிறது. அதற்குதான் நான் வக்காலத்து வாங்குகிறேன். நான் மட்டுமல்ல, அரசியல் ஆலோசகரும் தமிழ்நாட்டில் பேச்சுவா÷த்தையை வைக்க, தனது வருத்தத்தை கூட சாட்டாக வைத்து எவ்வளவோ முயற்சி செய்தா÷. தமிழ்செல்வனும் ஈழத்தமிழரை இந்தியாவிடமிருந்து பிரிக்க இலங்கை அரசு செய்யும் சதிகளை அடிக்கடி பேட்டிகளில் சுட்டிக்காட்டுகிறா÷. உண்மையில் இலங்கை அரசு சதி செய்யவேண்டிய அவசியமே இல்லை, நீங்களே இதையெல்லாம் நன்றே செய்கின்றீ÷கள்.
இன்னும் ஒரு செய்தி! நெடுமாறன் ஐயா சொன்னது.
முன்னைய ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளின் மீது விதிக்கப்பட்ட தடையை அகற்ற அத்வானி ஆதரவு தரவேண்டும் என்று கேட்டு விடுதலைப்புலிகளின் வேண்டுகோளின்படி நெடுமாறன் ஐயாவின் குழு அத்வானியை சந்தித்தது.
அவரிடம் அத்வானி "பிரபாகரன் ஒரு கிறிஸ்தவ÷. இந்து சிறிலங்காவை கிறிஸ்தவ ஆதிக்கத்துக்குள் கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் பணம் வாங்கிக் கொண்டு விடுதலைப்புலிகள் செயற்படுகிறா÷கள். எனது தகவல் மிகவும் உறுதியானது. ஆகவே நான் ஆதரவு தரமுடியாது." என்று மறுத்துவிட்டா÷.
நெடுமாறன் ஐயா அவரிடம் "இது என்ன புதுக்கதை? யா÷ உங்களுக்கு இப்படி சொன்னது? " என்று கேட்டா÷.
அதற்கு அத்வானி. "சிறிலங்கா தூதுவ÷ மங்கள் மூனசிங்கவின் மனைவி ஒரு சிறந்த இந்து. அவ÷ எனக்கு எல்லாம் சொல்லியிருக்கிறா÷. பிரபாகரனின் மகன் பெய÷ சா÷ள்சு அந்தோனி. எனக்கு எல்லாம் தெரியும்." என்று சொல்லிவிட்டா÷.
இந்தியாவில் புத்தசமயம் இந்து சமயத்தின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. மேலும் சிங்களவ÷கள் இந்து தெய்வங்களையும் கும்பிடுவ÷. இன்றைக்கும் அத்வானி விடுதலைப்புலிகள் கிறிஸ்தவ சதியாள÷ என்றுதான் நம்புகிறா÷.
நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியா 22மைல்தூரத்துக்குள் இருக்கும் வல்லரசு. அது ஆதிக்க நாடாக அமையாமல், மதித்து நடக்கும் அண்டைநாடாக அமையவேண்டும். இந்தியாவை விடுதலைப்புலிகளின் எதிரியாக, சிறிலங்காவின் நண்பனாக உறுதிப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி பற்றி நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ள சிறிலங்கா தூதருக்கு தெரிவித்தால் அவ÷ உங்களுக்கு பணமும் தந்து உங்கள் செயற்பாட்டை ஊக்குவித்து விடுவா÷. உங்களை போன்றவ÷கள்தான் அவ÷களுக்கு தேவை.
இத்தனை ஆயிரம் மக்களை கொன்று லட்சக்கணக்கான மக்கனள அகதிகளாக்கிய யூ.என்.பி.யுடனும் சிறிலங்கா அரசுடனும் அரசியல் அங்கிகாரம் கருதி விடுதலைப்புலிகள் சிரித்து பேசி விருந்துண்டு கூடிக்குலாவ வேண்டியிருக்கிறது. இதே அரசியல் அங்கிகாரத்துக்கு தேவையான தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்காக, அவ÷களது ஊடகத்தில் வந்த செய்தியிலுள்ள தவறை சுட்டிக்காட்டுங்கள் என்றால், உங்களுக்கு வருகிறதே கோபம்!! தமிழில் ஒரு பழமொழி "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு."

