11-26-2004, 09:35 PM
பழம்பெருமை பேசியும், குட்டக் குட்ட குனிந்து, குறுகி, ஈனமாய் அழிந்து வாழ்ந்த எம்மினத்தின் விடிவெள்ளியாம் என் தலைவனுக்கு இன்று 50வது அகவை. எமக்கெல்லாம் முகமாகி முகவரியாகி முதுகெலும்பானவனே, உன் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்ற பெருமையைத் தந்தாய். உனை வாழ்த்துவதால் தமிழே பெருமையடைந்தது.
ஆயிரம்பேர் தலைவர்களென கூறி எம்முன்னே வந்தார்கள். பலர் எம்மை விற்றார்கள், சிலர் விற்க முற்பட்டார்கள், சிலர் நாற்காலிகளுடன் போய்விட்டார்கள். ஓரிருவர் குரல்கல் ஓங்கி ஒலிக்க முற்பட, சிங்கள இரும்புக்கரங்கள் கொடூரமாக அவற்றை அடக்கியது. இக்காலத்திலேயே ஒரு "இயேசுவோ", "புத்தனோ", "நபிகள்" போல எம்மக்களை மீட்க எம்மண்ணில் அவதாரம் எடுத்தாய். சிறுவயதிலேயே ஆக்கிரமிப்புக்கெதிராக தனிமனிதனாய் ஒற்றைத் துப்பாக்கியுடன் தொடங்கிய எம் தர்ம யுத்தம் அழிவுகள், அழிப்புக்கள், துன்பங்கள், சோகங்கள், துரோகங்கள், அன்னிய படையெடுப்புக்கள் எல்லாமே கண்டு விருட்சமாய் உருவெடுக்கச் செய்தாய். பாரதக் கண்ணனாய் எம் சத்திய யுத்தத்தில் எல்லாவற்றையும் நீயே ஏற்றாய்.
என் தலைவனின் போராட்ட வாழ்வில் நிகழ்ந்த, நானறிந்த சம்பவங்களை இக்களத்தினூடு பகிர விரும்புகின்றேன்.
ஆயிரம்பேர் தலைவர்களென கூறி எம்முன்னே வந்தார்கள். பலர் எம்மை விற்றார்கள், சிலர் விற்க முற்பட்டார்கள், சிலர் நாற்காலிகளுடன் போய்விட்டார்கள். ஓரிருவர் குரல்கல் ஓங்கி ஒலிக்க முற்பட, சிங்கள இரும்புக்கரங்கள் கொடூரமாக அவற்றை அடக்கியது. இக்காலத்திலேயே ஒரு "இயேசுவோ", "புத்தனோ", "நபிகள்" போல எம்மக்களை மீட்க எம்மண்ணில் அவதாரம் எடுத்தாய். சிறுவயதிலேயே ஆக்கிரமிப்புக்கெதிராக தனிமனிதனாய் ஒற்றைத் துப்பாக்கியுடன் தொடங்கிய எம் தர்ம யுத்தம் அழிவுகள், அழிப்புக்கள், துன்பங்கள், சோகங்கள், துரோகங்கள், அன்னிய படையெடுப்புக்கள் எல்லாமே கண்டு விருட்சமாய் உருவெடுக்கச் செய்தாய். பாரதக் கண்ணனாய் எம் சத்திய யுத்தத்தில் எல்லாவற்றையும் நீயே ஏற்றாய்.
என் தலைவனின் போராட்ட வாழ்வில் நிகழ்ந்த, நானறிந்த சம்பவங்களை இக்களத்தினூடு பகிர விரும்புகின்றேன்.
"
"
"

