Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளுக்கு 2 வார கெடு !
#23
<b>சிங்களவர் நடவடிக்கைகளால் சில காத்திரமான முடிவுகளை நோக்கி தமிழ்ச்சமூகம்: <i>தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை! </i> </b>
<i> வெள்ளிக்கிழமை, 26 நவம்பர் 2004,</i>

சமாதான சூழலிலிருந்து விலகிச்; செல்வதோடு தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் தாக்கி சமாதானத்தைச்; சீர்குலைக்கும் சிங்கள அரசு மற்றும் சிங்களத் தலைமைகளின் நடவடிக்கைகளால் தமிழீழ மக்கள் காத்திரமான முடிவுகளை எடுக்க தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தனியார் தொலைக்காட்சிக்கு தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டி:

சிறீலங்கா அரசும் அதன் படைகளும் சமாதான சூழ்நிலையிலிருந்து விலகிக் கொள்கின்றது போல் தெரிகின்றது.

இப்படியான சூழ்நிலை ஏற்படும் போது எதிர்காலத்தில் காத்திரமான முடிவுகளை நாமும் தமிழ் மக்களும் எடுக்க வேண்டி நேரிடும்.

மன்னார் மற்றும் வவுனியாவில் மாவீரர் நாளையொட்டிய நிகழ்வுகள் சமாதானச்; சூழ்நிலையைச் சீர்குலைக்கும் செயல்பாடாகும்.

இத்தகைய சீர்குலைக்கும் யுக்திகளை தொடர்ந்து எமது மக்கள் சகித்துக் கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.

விடுதலைப் புலிகள் அமைதி காக்கின்ற வேளையில் பொதுமக்கள் மீது சிங்கள படைத் தரப்பினர் தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் உயிரிழக்கின்றபோது புலிகள் இயக்கம் அமைதி காத்து மிக கவனமாக தமது நகர்வுகளை முன்னெடுக்கும் நிலையில் தற்போது பொதுமக்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமாதான சூழலை தொடர்ந்து முன்னெடுக்கக் கூடிய சூழலை அண்மைய நிகழ்வுகள் சீர்குலைத்து வருகின்றன. இந் நிலையில் நிலைமை இறுக்கமடைந்து வருகின்றது.

விடுதலைப் புலிகளோ தமிழ் மக்களோ தொடர்ந்து பொறுமை காத்துக் கொண்டு அமைதி காப்பார்களோ அல்லது அதை சகித்துக் கொண்டிருப்பார்களோ என்பதை எதிர்பார்க்க முடியாது.

சிங்கள அரசாங்கம் சிங்கள தலைமைகள் இன்று நிலமைகளைச்; சீர்குலைக்கின்ற நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி வருகின்றது என்பதை நாம் உணர்த்தி வருகின்றோம்.

ஆகவே எதிர் காலத்தில் சில காத்திரமான முடிவுகளை நாமும் மக்களும் இணைந்து எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்றார் அவர்.

நன்றி புதினம்

சனிக்கிழமை, 27 நவம்பர் 2004 செய்தி என்னவோ? :?: Idea
Reply


Messages In This Thread
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 11:38 AM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:08 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 03:10 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 03:13 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:14 PM
[No subject] - by tamilini - 11-17-2004, 03:16 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 03:17 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:20 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 03:20 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 03:24 PM
[No subject] - by tamilini - 11-17-2004, 03:26 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:26 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 04:02 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 04:14 PM
[No subject] - by shiyam - 11-17-2004, 05:40 PM
[No subject] - by MEERA - 11-17-2004, 09:09 PM
[No subject] - by yarl - 11-17-2004, 10:43 PM
[No subject] - by MEERA - 11-17-2004, 10:51 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 10:55 PM
[No subject] - by MEERA - 11-17-2004, 11:04 PM
[No subject] - by kuruvikal - 11-18-2004, 06:38 PM
[No subject] - by Kanani - 11-26-2004, 02:22 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)