07-29-2003, 01:57 PM
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல் வன் இவ்வாறு தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்துக்கு முதற்றடவையாக நேற்றுமுன்தினம் வருகை தந்த சு.ப.தமிழ்ச்செல்வன், கப்டன் அன்பரசியின் 8ஆம் ஆண்டு நினைவை யொட்டி விடுதலைப் புலிகளின் தரவை மீனகவளாகத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்து கொண்டு போராளிகள், பொதுமக்கள் ஆகியோர் மத்தியில் உரையாற்றினார். அப்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். போராட்ட வாழ்வில் இன்று எனக்கு மகிழ்ச்சியான, மறக்கமுடியாத நாளாகும். தென்தமிழீழத்துக்கு வருவதற்கு பல தடவைகள் முயற்சித்தேன். இரண்டு நாள்களுக்கு முன்பே தலைவர் அதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.கடந்த காலங்களில் தென் தமி ழீழம் அனுபவித்த கொடுமைகள் பல. பல்வேறு படுகொலைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. சர்வதேச சமூகம் பல் வேறு படுகொலைகள் பற்றிப் பேசுகின்றது. ஆனால், அவற்றுடன் ஒப் பிடும்போது தென்தமிழீழத்தில் நடை பெற்றபடுகொலைகள் மிகவும் பயங்கரமானவை.
இங்குள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். ஆனால், இன்று தென்தமிழீழம் வீரம் செறிந்த புூமியாக பல படையணிகளுடன் திகழ்கின்றது. இங்குள்ள மக்கள் தேசியத் தலைவரின் சிந்தனை களைப் புரிந்துகொண்டு கருணா அம் மான் தலைமையில் படையணிகளைக் கட்டிஎழுப்புவது எமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. - இப்படி தமிழ்ச்செல்வன் கூறினார்.
இங்குள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர். ஆனால், இன்று தென்தமிழீழம் வீரம் செறிந்த புூமியாக பல படையணிகளுடன் திகழ்கின்றது. இங்குள்ள மக்கள் தேசியத் தலைவரின் சிந்தனை களைப் புரிந்துகொண்டு கருணா அம் மான் தலைமையில் படையணிகளைக் கட்டிஎழுப்புவது எமது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. - இப்படி தமிழ்ச்செல்வன் கூறினார்.

