11-19-2004, 07:53 PM
<span style='font-size:25pt;line-height:100%'>படித்ததில் ரசித்தது </span>
சிகரங்களை நோக்கி படைப்பில்
ஓவியா திருஞானம்
<span style='font-size:25pt;line-height:100%'>காதல்!!!!!!. </span>
அவன் அவசரமாய் ரோஜாவை நீட்டி Ôஐ லவ் யூÕ என்றான்.
அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை.
நதி வந்து கலப்பதால் கடல் ஒன்றும் கைதட்டிக்கொள்வதில்லை; கண்டனம் தெரிவிப்பதுமில்லை. நீட்டிய ரோஜாவை நிதானமாய் வாங்கிக்கொண்டு Ôநன்றிÕ என்றாள்.
அதிர்ச்சி அவனுக்குத்தான்.
அவள் முகத்தில் ஒரு வெட்க வெயில் அடிக்காதது கண்டுஇ அவன் இருண்டு போனான்.
ÔÔநீ.... நீ... நீயும்தானே? என்று தப்புத் தப்பாய்த் தந்தியடித்தான்.
அவள் சிரித்தாள்; நீளமாய்ச் சிரித்தாள்.
அந்த சப்த அலைகள் அவன்மீது சாட்டை சொடுக்கின.
ÔÔஏன்? ஏன் சிரிக்கிறாய்? நான் சொல்வது உனக்குப் புதிதாய் இருக்கிறதா?ÕÕ
இல்லை! புதியதில்லை! அதுதான் சிரிக்கிறேன்
ÔÔபுரியவில்லை?
ÔÔஎன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன ஆட்களின் வரிசையில்இ நீங்கள் கடைசியில் நிற்கிறீர்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தை ஒன்றுதான்! வாய்களே வேறு வேறு!ÕÕ.
ÔÔஏன்? காதல் என்ற தத்துவத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா?
தகராறு தத்துவத்தோடு அல்ல; தலைமுறையோடு!
இந்தத் தலைமுறைக்குக் காதலிக்கத் தெரியவில்லை; காரணம்இ காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.
சிகைக்காய் என்பது சீயக்காய் என்று திரிந்தது மாதிரிஇ காதல் என்ற புனிதமான பதமும் பொருள் புரண்டுவிட்டது.
ÔÔகாதல் என்பதன் புரளாத பொருள் யாது?ÕÕ
ÔÔகாதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உள்ளம் சார்ந்ததென்றே உணர்த்துகிறது. காதலை ஒரு தாகமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உடல் சார்ந்ததாகவே உணர்கிறது. ஆனால்இ உண்மையில் காதல் என்பது பாச உணர்ச்சியும்இ பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி ஜடை போட்டுக்கொள்கிற சம்பவம். பாச உணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு பிராணி போதும்; பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள் போதும். ஆனால்இ இந்த இரண்டும் எந்தப் புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனவோஇ அந்தப் புள்ளிதான் காதல். இப்போது சொல்லுங்கள்இ நீங்கள் எந்தப் புள்ளியில் நிற்கிறீர்கள்?
சிகரங்களை நோக்கி படைப்பில்
ஓவியா திருஞானம்
<span style='font-size:25pt;line-height:100%'>காதல்!!!!!!. </span>
அவன் அவசரமாய் ரோஜாவை நீட்டி Ôஐ லவ் யூÕ என்றான்.
அவளுக்கு அதிலொன்றும் அதிர்ச்சியில்லை.
நதி வந்து கலப்பதால் கடல் ஒன்றும் கைதட்டிக்கொள்வதில்லை; கண்டனம் தெரிவிப்பதுமில்லை. நீட்டிய ரோஜாவை நிதானமாய் வாங்கிக்கொண்டு Ôநன்றிÕ என்றாள்.
அதிர்ச்சி அவனுக்குத்தான்.
அவள் முகத்தில் ஒரு வெட்க வெயில் அடிக்காதது கண்டுஇ அவன் இருண்டு போனான்.
ÔÔநீ.... நீ... நீயும்தானே? என்று தப்புத் தப்பாய்த் தந்தியடித்தான்.
அவள் சிரித்தாள்; நீளமாய்ச் சிரித்தாள்.
அந்த சப்த அலைகள் அவன்மீது சாட்டை சொடுக்கின.
ÔÔஏன்? ஏன் சிரிக்கிறாய்? நான் சொல்வது உனக்குப் புதிதாய் இருக்கிறதா?ÕÕ
இல்லை! புதியதில்லை! அதுதான் சிரிக்கிறேன்
ÔÔபுரியவில்லை?
ÔÔஎன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன ஆட்களின் வரிசையில்இ நீங்கள் கடைசியில் நிற்கிறீர்கள். ஐ லவ் யூ என்ற வார்த்தை ஒன்றுதான்! வாய்களே வேறு வேறு!ÕÕ.
ÔÔஏன்? காதல் என்ற தத்துவத்தில் உனக்கு நம்பிக்கை இல்லையா?
தகராறு தத்துவத்தோடு அல்ல; தலைமுறையோடு!
இந்தத் தலைமுறைக்குக் காதலிக்கத் தெரியவில்லை; காரணம்இ காதலென்றால் என்னவென்றே தெரியவில்லை.
சிகைக்காய் என்பது சீயக்காய் என்று திரிந்தது மாதிரிஇ காதல் என்ற புனிதமான பதமும் பொருள் புரண்டுவிட்டது.
ÔÔகாதல் என்பதன் புரளாத பொருள் யாது?ÕÕ
ÔÔகாதலை வெறும் தத்துவமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உள்ளம் சார்ந்ததென்றே உணர்த்துகிறது. காதலை ஒரு தாகமாகப் பார்க்கிற கூட்டம்இ அதை உடல் சார்ந்ததாகவே உணர்கிறது. ஆனால்இ உண்மையில் காதல் என்பது பாச உணர்ச்சியும்இ பாலுணர்ச்சியும் பின்னிப்பின்னி ஜடை போட்டுக்கொள்கிற சம்பவம். பாச உணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு பிராணி போதும்; பாலுணர்ச்சி மட்டுமே காதலென்றால் ஒரு விலைமகள் போதும். ஆனால்இ இந்த இரண்டும் எந்தப் புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றனவோஇ அந்தப் புள்ளிதான் காதல். இப்போது சொல்லுங்கள்இ நீங்கள் எந்தப் புள்ளியில் நிற்கிறீர்கள்?

