11-18-2004, 05:14 AM
Jaya Wrote:அன்புள்ள மீரா சியான் குருவி ஆகியவர்களிற்கும் கரிசனை கொண்ட களநண்பர்களிற்கும்.
தமிழிø எழுதுவது சற்று கடினமாக இருக்கின்றது இருந்தாலும் வெகுவிரைவில் பயிற்சி பெற்று விடுவேன் எனறு நினைககினறேன்
சுந்தரத்தமிழில் எழுதுவேன் என்று நம்பிக்கை வைத்ததற்கு மீராவிற்கு நன்றி.
சியான் நீங்கள் பிரெஞ்சிø அல்ல சீன மொழியில் எழுதினாலும் அதை நான் புரிந்து கொள்வேன். மொழி என்பது மற்றயவர்களைப்புரிந்து கொள்வதற்கும் அவர்களின் சுற்றாடலை அறிந்து கொள்வதற்கும் பாவிக்கின்ற ஊடகமாகவே நான் கருதுகின்றேன் ஆகவே அதில் பந்தா பவுசு படம் இப்படி எதுவும் கிடையாது. தற்பொழுது நான் எனது பதினேழாவது மொழியைக்கற்றுக்கொண்டிருக்கின்றேன் ஆனால் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
அன்புடன் Jaya
உங்கள் இருவரது கலகமும் நட்புடன் முடிவடைய எனது வாழ்த்துக்கள்.
ஜெயா, இங்கு உங்களை தமிழில் எழுதச் சொல்லியவர்களின் ஆதங்கம் என்ன என்டு உங்களுக்கு விளங்கியிருக்குமென நம்புகிறேன். தமிழர்கள் தமிழில் பேசி எழுதி தங்களுடைய கருத்துக்களை பகிரவே இங்கு விரும்புகிறார்கள் என்பதையும் அறிந்திருப்பீர்கள். நாம் என்ன மொழியையும் அல்லது எத்தனை மொழியையும் பேசினாலும் எமது தாய் மொழிக்கு ஈடாகாது என்பது எனது உறுதியான அபிப்பிராயம். இதை நீங்களும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்பதில்லை ஆனால் ஏற்றுக்கொள்ளும்போதுதான் நீங்களும்/யாரும் முழுமையான தமிழராக இருக்க முடியும் என்பது எனது கருத்து.

