11-17-2004, 03:08 PM
<b>தமிழ் மக்களின் ஆணையின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்: </b><i>சு.ப.தமிழ்ச்செல்வன் </i>
சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தடையாக உள்ளனர் எனவும், இது இழுபட்டுச் செல்வதற்கு புலிகள்தான் காரணமெனவும் சர்வதேச சமூகத்திற்கு பல வழிகளிலும் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.
இதில் எந்தவித உண்மையும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக பேச்சுக்களை தொடர்வதற்கும் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கபட்ட தன்னாட்சி அதிகார சபையின்அடிப்படையில் பேசுவதற்கு தயாராகவே இருப்பதாக நாங்கள் எப்போதும் தெரிவித்து வந்துள்ளோம்.
இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து தெளிவாக்கி வந்துள்ளோம். இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய தமிழ் மக்களி;ன ஆணையின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு தலைப்படசமாக சிறிலங்கா அரசோடு தமிழர் தாயகப் பகுதியில் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்து கொள்வதை தமிழ் மக்கள் சார்பாக எவருமே விரும்பவில்iயெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கும் இந்திய அரசிற்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு உத்தியாகவே நாம் இதைப் பார்க்கின்றோம். இது தொடர்பாக தமிழ் மக்கள் கூட தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆகவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளை அவர்களுடைய நலன்களுக்கு விரோதமாக இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென்பது எங்களுடைய நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் ஆகுமெனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி புதினம்
சிறிலங்கா அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள்தான் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு தடையாக உள்ளனர் எனவும், இது இழுபட்டுச் செல்வதற்கு புலிகள்தான் காரணமெனவும் சர்வதேச சமூகத்திற்கு பல வழிகளிலும் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.
இதில் எந்தவித உண்மையும் இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக பேச்சுக்களை தொடர்வதற்கும் தமிழ் மக்கள் சார்பாக முன்வைக்கபட்ட தன்னாட்சி அதிகார சபையின்அடிப்படையில் பேசுவதற்கு தயாராகவே இருப்பதாக நாங்கள் எப்போதும் தெரிவித்து வந்துள்ளோம்.
இது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து தெளிவாக்கி வந்துள்ளோம். இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் முழுமையாக செயற்பட்டு வருகின்றனர். தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய தமிழ் மக்களி;ன ஆணையின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு தலைப்படசமாக சிறிலங்கா அரசோடு தமிழர் தாயகப் பகுதியில் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் செய்து கொள்வதை தமிழ் மக்கள் சார்பாக எவருமே விரும்பவில்iயெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கும் இந்திய அரசிற்கும் இடையே ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒரு உத்தியாகவே நாம் இதைப் பார்க்கின்றோம். இது தொடர்பாக தமிழ் மக்கள் கூட தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆகவே தமிழ் மக்களுடைய அபிலாசைகளை அவர்களுடைய நலன்களுக்கு விரோதமாக இந்திய மத்திய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென்பது எங்களுடைய நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் ஆகுமெனவும் அவர் தெரிவித்தார்.
நன்றி புதினம்

