11-17-2004, 11:27 AM
அமைதி பேச்சு: புலிகளுக்கு சந்திரிகா 2 வார கெடு !
கொழும்பு:
இந்த மாத இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது குறித்து விடுதலைப் புலிகள் பதில் தர வேண்டும் என இலங்கை அதிபர் சந்திரிகா கெடு விதித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
பேச்சுவார்த்தைகளை ஏதாவது காரணம் சொல்லி புலிகள் தவிர்த்து வருகின்றனர். பிரச்சனையை பேசித் தீர்க்க முடியும் என அரசு நம்புகிறது. அவர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கும் தயார். பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தங்களது நிலையை அடிக்கடி மாற்றி வரும் புலிகள், பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்க்கின்றனர். எனது பதவிக் காலம் விரைவில் முடியப் போவதால், என்னுடன் பேசிப் பயனில்லை என புலிகள் கூறியுள்ளனர்.
அவர்கள் பேசுவது அரசாங்கத்துடன், தனிப்பட்ட நபரிடம் அல்ல.
இதனால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து இம் மாத இறுதிக்குள் (இரண்டு வாரத்தில்) புலிகள் தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும் என்றார் சந்திரிகா.
இந்தக் கெடுவை புலிகள் ஏற்காவிட்டால், என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து சந்திரிகா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
thatstamil.com
கொழும்பு:
இந்த மாத இறுதிக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்புவது குறித்து விடுதலைப் புலிகள் பதில் தர வேண்டும் என இலங்கை அதிபர் சந்திரிகா கெடு விதித்துள்ளார்.
இலங்கை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,
பேச்சுவார்த்தைகளை ஏதாவது காரணம் சொல்லி புலிகள் தவிர்த்து வருகின்றனர். பிரச்சனையை பேசித் தீர்க்க முடியும் என அரசு நம்புகிறது. அவர்களுடன் அதிகாரப் பகிர்வுக்கும் தயார். பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தங்களது நிலையை அடிக்கடி மாற்றி வரும் புலிகள், பேச்சுவார்த்தைக்கு வராமல் தவிர்க்கின்றனர். எனது பதவிக் காலம் விரைவில் முடியப் போவதால், என்னுடன் பேசிப் பயனில்லை என புலிகள் கூறியுள்ளனர்.
அவர்கள் பேசுவது அரசாங்கத்துடன், தனிப்பட்ட நபரிடம் அல்ல.
இதனால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவது குறித்து இம் மாத இறுதிக்குள் (இரண்டு வாரத்தில்) புலிகள் தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும் என்றார் சந்திரிகா.
இந்தக் கெடுவை புலிகள் ஏற்காவிட்டால், என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து சந்திரிகா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
thatstamil.com

