11-16-2004, 01:24 AM
kuruvikal Wrote:விடுப்புத்தானே....
பறக்கும் பொழுதினில்
பலதும் கண்டு பழகிட்டுது
பழக்கம் ஒன்றும் தப்பில்லை...!
கலாட்டாக் குருவிகள்
கண்டபடி கீச்சிடும் ஒலி எழுப்பி
கவி குழப்பி
சீர்கவி சீரழித்தல் தவறெல்லோ...
சின்னக் குருவிகள் இவைக்கு
தீராத பழியெதுக்கு....!
சோடி தேடி சோரம் போக
மாந்தோப்பு குருவி என்ன
மப்பிலா இருக்கு....!
மலருக்கே இந்த மனம் என்று
மங்காத கொள்கை
மனதோட இருக்கே
மரணம் வரை தொடர் கதையாய்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
பறக்கும் போது காண்பது எல்லாம் விடுப்பாகிடுமா- இல்லை
பறக்கும் போது காண்பது விடுப்பல்ல அவை காட்சிகள்.
சொடுக்கு போடும் நேரத்தில்
சொட்டு தூரம் பறந்து ஏதோ பெரிதாய்
விடுப்பு பார்த்து பழகிட்டுது
பழக்க தோசம் என்கிறீர்கள்
செவ்வாய் தோசம் நீங்க
ஏதாவது செய்து
சோடி சேர்ந்து
ஓரம் போங்களேன்
மாந்தோப்பில்
தென்னையோ, பனையோ
இருக்காமலா போய் விடும்
பேந்து மப்புக்கு என்ன குறை
மாந்தோப்பு குருவியே..!
மனமே இல்லாத குருவிக்கு
மலருக்கு கொடுக்க
ஒருமனமா..?
அதுவும் மங்காத கொள்கையுடன்
சின்ன குருவிகளோ
சிங்கார குருவிகளோ
சிலேடையாக பேசி
சில்மிசம் புரிந்து
சிறியோர் போல் நடிக்கின்றன
[b][size=18]

