07-27-2003, 02:28 PM
அன்பு முல்லைக்கு
புரிந்துணர்வுக்கும் - விளக்கம் கிடைத்ததற்கும்; நன்றி
[quote=Mullai]நாங்கள் தாயகத்தில் இருக்கும் போது, பல விசயங்களை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாதிருந்தது. ஆனால் இன்று எதுவுமே எங்களுக்குத் தூரத்தில் இல்லை.
நாம் முயன்றால் , எமது மக்கள் மனம் வைத்தால் எதுவுமே தூரத்திலில்லை.
அண்மையில் இருப்பதை கருத்திலெடுக்காமல் தூரத்தில் தெரியும் கானலை நீர் என்று மயங்கி ; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல நடந்து கொள்ளும் நம்மால்தான் நாம் பின் தங்கி நிற்கிறோம் என்பது வேதனைதான்.இது பற்றி ஏற்கனவே ஓர் கட்டுரை வரைந்தேன்.
அதன்சில பகுதிகள்:-
எனக்குத் தெரிந்தவிதத்தில் இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் சரி உருவாக்கப்பட்ட தமிழ் வீடியோ அல்லது திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய பாணியைத் தழுவியதாகவே இருந்திருக்கின்றது. ஒரு சில படங்கள் வித்தியாசமாக இருக்க முற்பட்டாலும் முழுமையாக என்று கூறமுடியாது. இலங்கையில் உருவான ஒரு சில தமிழ்பேசும் சினிமாக்கள் சிங்கள சினிமாவின் தாக்கத்தைப் பெற்றிருந்ததையும் குறிப்பிட்டேயாகவேண்டியுள்ளது. அதற்கு காரணம் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படங்களில் முக்கியபங்கு வகித்ததும் அவற்றை தமிழ் - சிங்களம் எனும் இரு மொழிகளிலும் வெளியிட எத்தனித்ததும்தான். தமிழீழத்தில் தற்போது உருவாகும் பல வீடியோ திரைப்படங்கள் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இக்கருத்துக்கள் சிலசமயம் ஆரம்பத்திலேயே தென்னிந்திய - உலக சினிமாக்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க முற்படுவதாக எண்ணத்தோன்றும். பிரச்சனை இதுவல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏனைய புலம்பெயர் சமூகங்கள் போல நாமும் புலம் பெயர் தமிழ் சினிமா ஒன்றை ஜெனிக்கவைப்பதற்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நல்லதொரு சமயத்தில் தேவையான சில உண்மைகளை தெரிந்து கொள்வதும்இ அவற்றின்பால் தெளிவு பெறுவதும் இன்றியமையாதது.புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து அத்தி பூப்பதுபோல் ஆண்டொன்றுக்கு ஏதோ ஒன்று இரண்டு படைப்புகள் வந்து வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சாதனை என எண்ணுவது மடமையானது. அனைத்துப் பகுதியிலிருந்தும் படைப்புகள் புதிது புதிதாக உருவாக்கம் பெற வேண்டும். வேறுபட்ட நாடுகளில் இருந்து மாறுபட்ட அனுபவங்களாக அவை அமையும்போது அவை வித்தியாசமாகவே இருக்கும். அவை நிச்சயம் மக்களால் வரவேற்கப்படும்.
இலங்கையிலும்இ தென்னிந்தியாவிலும் சினிமாக்களில் பணியாற்றிய பல கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.ஆனால் இவர்கள் ஏனைய திறமையுள்ள கலைஞர் ஒருவருடன் சேர்ந்து எதுவும் செய்யாது, தனது தலையில் அனைத்தையும் போட்டுக்கொண்டு செயல்படத் துடிக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் தான் அடுத்தவன் முன் தாழ்ந்து விடுவேனோ எனும் தாழ்வு மனப்பான்மைதான். அத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து செய்யும்போது அனைத்துக்கும் தானே முழு உரிமையும் கோர முற்பட்டுஇ அடுத்தவர்களை மலினப்படுத்தி படைப்புகளை புஸ்வாணமாக்கி விடுகிறார்கள்.
எமது கலைப்படைப்புகள் எவருக்கு போய்சேர வேண்டும் என்பதைக்கூட சிந்திக்காமல் ஒரு பெரிய இயக்குனர் போல் அவர்கள் பேசுவது பரிதாபத்துக்குரியது.
இவர்கள் திருமண பிறந்தநாள் விழக்களை படம்பிடிப்பது போல் சினிமாவையும் நினைப்பது கேலிக்குரியது. ஒளிப்பதிவுக் கருவியால் பொம்மை வந்தால் போதும் என்று மட்டும் நினைக்கின்றார்கள்.
சினிமா சில நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒருகலை. நினைத்ததை நினைத்த இடத்தில் புகுத்தும் ஒரு கலையல்ல. அப்படியான விதிமுறைகளை தவிர்த்தால் ஏதோவொரு படைப்பாக இருக்குமே தவிர, அது எவராலும் பேசப்படாததாகப் போய்இ படைத்தவர் தன் வீட்டில் வைத்து தானே போட்டுப் பார்த்து..................... வேண்டியதாகிவிடும்.
இதுதவிர மேடை நாடகத்துக்கும் - சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட பலரால் வேறுபடுத்திப் பார்க்கமுடியாமலிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் சினிமா என வந்த படைப்புகளில் உள்ள பெரியதொரு குறை இலங்கைத் தமிழையும், இந்தியத் தமிழழையும், நாடகவசன நடைகளையும் புகுத்தி பார்வையாளனை பைத்தியக்காரனாக்க முற்பட்டது. இப்படியான ஒரு சில படங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் படும் அவஸ்தையும் - நகைப்பும் புலம்பெயர் சினிமா ஆர்வலர்களை புண்படுத்துகின்றது.
பணபலமும்இ ஆர்வமும் மட்டுமே ஒருவனை படைப்பாளியாக்கி விடுவதில்லை. ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் கதையைச் சொல்வது கடினமல்ல. ஒரு கதைக் கருவை பார்வையாளன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் திரையில் செதுக்குபவன் மட்டுமே படைப்பாளியாக முடியும்.
<b>அன்றைய இலங்கை பட முதலாளிகள் செய்த அதே தவறைத்தான் புலம் பெயர் தமிழ் தொலைக்காட்சிகளின் முதலாளிகளும் செய்து வருகிறார்கள்.அது அவர்களுக்கே வினையாகிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் எவரும் இங்கு வாழும் எமது கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை மனமுவந்து வழங்கவேயில்லை.
தென்னிந்தியாவைத் தேடிச் சென்ற இவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் தனது சக உடன் பிறப்பை தெரியவேயில்லை.
இவர்களுக்காக நாம் வருந்த வேண்டியதில்லை. </b>
நான் இலங்கையிலிருக்கும் போது என் சிங்கள நண்பனொருவன் 1975 -76 களில் என்று நினைவு ; கருத்தரங்கொன்றில் வைத்து சிலோன் தியட்டர் அதிபரிடம் இப்படிச் சொன்னான் :-
<b>இப்ப நீங்க லக்ஸ் கொண்டு வந்து விக்கிறீங்க : நாளைக்கு அவன் நேரே உங்களுக்கும் சேர்த்து நேரடியா விப்பான்.அப்ப கடையை மூடிட்டு வீட்டில இருந்து நீங்களும் வாங்கி தேச்சு குளிப்பீங்க."
சொல்வது புரியுமென்று நினைக்கிறேன்.....................
[quote=Mullai]கலைக்காகவும் உங்கள் திருப்திக்காகவும் குறும்படங்களைத் தயாரிக்கும் உங்களுக்கு தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணம் உண்டா..?
தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணமில்லை.அது நிலையானதல்ல எனக்கு யதார்த்தமான எமது புலம் பெயர் வாழ்வுடன் கலந்த கதையுடன் உள்ள படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறேன். தற்போது சுவிஸ் கலைஞர்களுடன் ஒரு முழு நீள ஜேர்மன் படத்தை முடித்திருக்கிறேன்.
[quote=Mullai]தொடர்ந்தும் நாங்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்போமானால்..... ஆண்டிகள் கட்டிய மடம் போல்தான் எல்லாமே.
முன்னுக்கு வருவீர்களா? முயற்சி செய்வீர்களா? என்பதுதான் இப்போதைக்குத் தேவையானது.
வைரமுத்து சொன்ன ஒரு கருத்து :-
[b]"கள்ளிக்காட்டு படைப்பை (இலக்கியத்தை) எழுதுவதற்கும் அதை ரசிப்பதற்கும் கள்ளிக்காட்டில் வாழ்ந்தவனால் மட்டுமே முடியும்." </b>
தற்போது " அழியாக் கவிதை " குறும் படம் தொகுக்கப்பட்டக் கொண்டிருக்கிறது.
வெகு விரைவில் உங்கள் ஆதங்கம் நிறைவேறும்...................
[quote=Mullai]முன்னர் கூட கண்ணன் இந்தக் கருத்துக் களத்தில் குறும்படங்களைப் பற்றிக் கதைத்து வந்தார். ஏனோ அவரைக் காணவேயில்லை.
கண்ணனின் தூன்டதல்கள்தான் நான் இங்கே எழுதக்; காரணம்.கண்ணன் மட்டும் இல்லாமலிருந்தால் நான் களத்துக்குள் வந்தேயிருக்க மாட்டேன்.
நன்றிகளுடன் தொடரும்.............
புரிந்துணர்வுக்கும் - விளக்கம் கிடைத்ததற்கும்; நன்றி
[quote=Mullai]நாங்கள் தாயகத்தில் இருக்கும் போது, பல விசயங்களை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாதிருந்தது. ஆனால் இன்று எதுவுமே எங்களுக்குத் தூரத்தில் இல்லை.
நாம் முயன்றால் , எமது மக்கள் மனம் வைத்தால் எதுவுமே தூரத்திலில்லை.
அண்மையில் இருப்பதை கருத்திலெடுக்காமல் தூரத்தில் தெரியும் கானலை நீர் என்று மயங்கி ; இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல நடந்து கொள்ளும் நம்மால்தான் நாம் பின் தங்கி நிற்கிறோம் என்பது வேதனைதான்.இது பற்றி ஏற்கனவே ஓர் கட்டுரை வரைந்தேன்.
அதன்சில பகுதிகள்:-
எனக்குத் தெரிந்தவிதத்தில் இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி, சிங்கப்பூரிலும் சரி தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளிலும் சரி உருவாக்கப்பட்ட தமிழ் வீடியோ அல்லது திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய பாணியைத் தழுவியதாகவே இருந்திருக்கின்றது. ஒரு சில படங்கள் வித்தியாசமாக இருக்க முற்பட்டாலும் முழுமையாக என்று கூறமுடியாது. இலங்கையில் உருவான ஒரு சில தமிழ்பேசும் சினிமாக்கள் சிங்கள சினிமாவின் தாக்கத்தைப் பெற்றிருந்ததையும் குறிப்பிட்டேயாகவேண்டியுள்ளது. அதற்கு காரணம் சிங்கள தொழில்நுட்ப கலைஞர்கள் அப்படங்களில் முக்கியபங்கு வகித்ததும் அவற்றை தமிழ் - சிங்களம் எனும் இரு மொழிகளிலும் வெளியிட எத்தனித்ததும்தான். தமிழீழத்தில் தற்போது உருவாகும் பல வீடியோ திரைப்படங்கள் மாறுபட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
இக்கருத்துக்கள் சிலசமயம் ஆரம்பத்திலேயே தென்னிந்திய - உலக சினிமாக்களுக்கு எதிரான எண்ணத்தை உருவாக்க முற்படுவதாக எண்ணத்தோன்றும். பிரச்சனை இதுவல்ல, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஏனைய புலம்பெயர் சமூகங்கள் போல நாமும் புலம் பெயர் தமிழ் சினிமா ஒன்றை ஜெனிக்கவைப்பதற்கு ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் நல்லதொரு சமயத்தில் தேவையான சில உண்மைகளை தெரிந்து கொள்வதும்இ அவற்றின்பால் தெளிவு பெறுவதும் இன்றியமையாதது.புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலிருந்து அத்தி பூப்பதுபோல் ஆண்டொன்றுக்கு ஏதோ ஒன்று இரண்டு படைப்புகள் வந்து வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சாதனை என எண்ணுவது மடமையானது. அனைத்துப் பகுதியிலிருந்தும் படைப்புகள் புதிது புதிதாக உருவாக்கம் பெற வேண்டும். வேறுபட்ட நாடுகளில் இருந்து மாறுபட்ட அனுபவங்களாக அவை அமையும்போது அவை வித்தியாசமாகவே இருக்கும். அவை நிச்சயம் மக்களால் வரவேற்கப்படும்.
இலங்கையிலும்இ தென்னிந்தியாவிலும் சினிமாக்களில் பணியாற்றிய பல கலைஞர்கள் புலம்பெயர் நாடுகளில் இருக்கின்றார்கள்.ஆனால் இவர்கள் ஏனைய திறமையுள்ள கலைஞர் ஒருவருடன் சேர்ந்து எதுவும் செய்யாது, தனது தலையில் அனைத்தையும் போட்டுக்கொண்டு செயல்படத் துடிக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் தான் அடுத்தவன் முன் தாழ்ந்து விடுவேனோ எனும் தாழ்வு மனப்பான்மைதான். அத்துடன் ஒரு குழுவாக சேர்ந்து செய்யும்போது அனைத்துக்கும் தானே முழு உரிமையும் கோர முற்பட்டுஇ அடுத்தவர்களை மலினப்படுத்தி படைப்புகளை புஸ்வாணமாக்கி விடுகிறார்கள்.
எமது கலைப்படைப்புகள் எவருக்கு போய்சேர வேண்டும் என்பதைக்கூட சிந்திக்காமல் ஒரு பெரிய இயக்குனர் போல் அவர்கள் பேசுவது பரிதாபத்துக்குரியது.
இவர்கள் திருமண பிறந்தநாள் விழக்களை படம்பிடிப்பது போல் சினிமாவையும் நினைப்பது கேலிக்குரியது. ஒளிப்பதிவுக் கருவியால் பொம்மை வந்தால் போதும் என்று மட்டும் நினைக்கின்றார்கள்.
சினிமா சில நெறிமுறைகள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உருவாகும் ஒருகலை. நினைத்ததை நினைத்த இடத்தில் புகுத்தும் ஒரு கலையல்ல. அப்படியான விதிமுறைகளை தவிர்த்தால் ஏதோவொரு படைப்பாக இருக்குமே தவிர, அது எவராலும் பேசப்படாததாகப் போய்இ படைத்தவர் தன் வீட்டில் வைத்து தானே போட்டுப் பார்த்து..................... வேண்டியதாகிவிடும்.
இதுதவிர மேடை நாடகத்துக்கும் - சினிமாவுக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட பலரால் வேறுபடுத்திப் பார்க்கமுடியாமலிருக்கின்றது. புலம்பெயர் தமிழ் சினிமா என வந்த படைப்புகளில் உள்ள பெரியதொரு குறை இலங்கைத் தமிழையும், இந்தியத் தமிழழையும், நாடகவசன நடைகளையும் புகுத்தி பார்வையாளனை பைத்தியக்காரனாக்க முற்பட்டது. இப்படியான ஒரு சில படங்களை பார்வையிடும் பார்வையாளர்கள் படும் அவஸ்தையும் - நகைப்பும் புலம்பெயர் சினிமா ஆர்வலர்களை புண்படுத்துகின்றது.
பணபலமும்இ ஆர்வமும் மட்டுமே ஒருவனை படைப்பாளியாக்கி விடுவதில்லை. ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் கதையைச் சொல்வது கடினமல்ல. ஒரு கதைக் கருவை பார்வையாளன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் திரையில் செதுக்குபவன் மட்டுமே படைப்பாளியாக முடியும்.
<b>அன்றைய இலங்கை பட முதலாளிகள் செய்த அதே தவறைத்தான் புலம் பெயர் தமிழ் தொலைக்காட்சிகளின் முதலாளிகளும் செய்து வருகிறார்கள்.அது அவர்களுக்கே வினையாகிக் கொண்டிருக்கிறது.
இவர்கள் எவரும் இங்கு வாழும் எமது கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை மனமுவந்து வழங்கவேயில்லை.
தென்னிந்தியாவைத் தேடிச் சென்ற இவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் தனது சக உடன் பிறப்பை தெரியவேயில்லை.
இவர்களுக்காக நாம் வருந்த வேண்டியதில்லை. </b>
நான் இலங்கையிலிருக்கும் போது என் சிங்கள நண்பனொருவன் 1975 -76 களில் என்று நினைவு ; கருத்தரங்கொன்றில் வைத்து சிலோன் தியட்டர் அதிபரிடம் இப்படிச் சொன்னான் :-
<b>இப்ப நீங்க லக்ஸ் கொண்டு வந்து விக்கிறீங்க : நாளைக்கு அவன் நேரே உங்களுக்கும் சேர்த்து நேரடியா விப்பான்.அப்ப கடையை மூடிட்டு வீட்டில இருந்து நீங்களும் வாங்கி தேச்சு குளிப்பீங்க."
சொல்வது புரியுமென்று நினைக்கிறேன்.....................
[quote=Mullai]கலைக்காகவும் உங்கள் திருப்திக்காகவும் குறும்படங்களைத் தயாரிக்கும் உங்களுக்கு தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணம் உண்டா..?
தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணமில்லை.அது நிலையானதல்ல எனக்கு யதார்த்தமான எமது புலம் பெயர் வாழ்வுடன் கலந்த கதையுடன் உள்ள படங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறேன். தற்போது சுவிஸ் கலைஞர்களுடன் ஒரு முழு நீள ஜேர்மன் படத்தை முடித்திருக்கிறேன்.
[quote=Mullai]தொடர்ந்தும் நாங்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்போமானால்..... ஆண்டிகள் கட்டிய மடம் போல்தான் எல்லாமே.
முன்னுக்கு வருவீர்களா? முயற்சி செய்வீர்களா? என்பதுதான் இப்போதைக்குத் தேவையானது.
வைரமுத்து சொன்ன ஒரு கருத்து :-
[b]"கள்ளிக்காட்டு படைப்பை (இலக்கியத்தை) எழுதுவதற்கும் அதை ரசிப்பதற்கும் கள்ளிக்காட்டில் வாழ்ந்தவனால் மட்டுமே முடியும்." </b>
தற்போது " அழியாக் கவிதை " குறும் படம் தொகுக்கப்பட்டக் கொண்டிருக்கிறது.
வெகு விரைவில் உங்கள் ஆதங்கம் நிறைவேறும்...................
[quote=Mullai]முன்னர் கூட கண்ணன் இந்தக் கருத்துக் களத்தில் குறும்படங்களைப் பற்றிக் கதைத்து வந்தார். ஏனோ அவரைக் காணவேயில்லை.
கண்ணனின் தூன்டதல்கள்தான் நான் இங்கே எழுதக்; காரணம்.கண்ணன் மட்டும் இல்லாமலிருந்தால் நான் களத்துக்குள் வந்தேயிருக்க மாட்டேன்.
நன்றிகளுடன் தொடரும்.............

