11-14-2004, 01:29 AM
MEERA Wrote:வெட்டி ஒட்டும் பொழுது எங்கிருந்து வெட்டப்பட்டது என்று எழுதுவதுதானே நாகாீகம்.
மீரா என்பவரே...இக்கருத்து வரவேற்கத்தக்கதுதான்...களத்தில் அநேகர் வெட்டி ஒட்டினால் எங்கிருந்து எடுக்கிறார்கள் என்பதைப் போடத்தவறுவதில்லை....! நடா தங்களைப் போல களத்துக்குப் புதியவர் அதனால் அதை போட மறந்திருக்கக் கூடும் எனினும்..அதை அவருக்கு நேரடியாக அல்லது போடத்தவறியவர்களுக்கு நேரடியாகச் சுட்டிக்காட்டுவதுதான் தகும்...தவறுதிருத்த உதவும்...இப்படி மொட்டையாகப் போட்டால் வேண்டாத கருத்துப் பிறழ்வுகள் ஏற்பட வழிசமைக்கலாம்...!

சுய ஆக்கங்கள் தவிர வெட்டி ஒட்டுதல்களுக்கு நன்றி சொல்லுதல்...எதிர்காலத்தில் தவிர்க்கப்பட்டு... கள உறுப்பினர்கள் புரிந்துணர்வுடன் தங்கள் கருத்துகளை வெட்டி ஒட்டும் கருத்துடன் பரிமாறுவதன் மூலம் நன்றி தெரிவித்துக்கொள்ளுதல் சிறப்பாக இருக்கும் என்று நாமும் நம்புகின்றோம்...!

மேலும் சிலர் களத்து முகப்பில் புதினச் செய்தி இருக்க அதை மீண்டும் ஏன் இங்கு கொண்டு வந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்வதாகத் தெரிகிறது... இங்கு அச்செய்தியைப் போட்டது அச்செய்தியின் அடிப்படையில் கருத்தாடல் செய்வதற்கே....என்பதை சம்பந்தப்படவர்கள் புரிந்துகொள்வது இக்கருத்தாடல் பயனுள்ள கருத்துக்களை உள்வாங்கி தொடரப்பட உதவியாக இருக்கும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
சில செய்திகள் புதினத்தோடு பத்தோடு பதினொன்றாக ஓடாமல் மக்களின் சிறப்புக் கவனத்தை பெற வேண்டின் அவற்றிற்குச் சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும்....அதுவே இங்கு செய்யப்பட்டுள்ளது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

