07-27-2003, 11:16 AM
அந்தத் தொலைபேசி அழைப்பை யார் எடுத்தார்கள் என்று நான் குழம்பியதுண்டு . திருத்தம் செய்ததற்கு நன்றி
பார்த்தீர்களா? அந்த குறும்படத்தில் எவ்வளவு விடயங்களைச் சொல்ல வருகிறீர்களென்று. ஆக நீங்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லோரிடமும் போய்ச் சேர்ந்ததாகக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமே வருகின்றது.
நாங்கள் தாயகத்தில் இருக்கும் போது, பல விசயங்களை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாதிருந்தது. ஆனால் இன்று எதுவுமே எங்களுக்குத் தூரத்தில் இல்லை.
கலைக்காகவும் உங்கள் திருப்திக்காகவும் குறும்படங்களைத் தயாரிக்கும் உங்களுக்கு தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணம் உண்டா..?
ஏனெனில் இன்று தென்னிந்தியக் கலைஞர்கள் நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்தான் படம்பிடித்துப் போகின்றார்கள். எங்கள் கதைகளையே படமாக்கி எங்களுக்குப் போட்டுக் காட்டும் நிலையே அவர்களிடம் இப்போது உள்ளது.
தொடர்ந்தும் நாங்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்போமானால்..... ஆண்டிகள் கட்டிய மடம் போல்தான் எல்லாமே.
முன்னுக்கு வருவீர்களா? முயற்சி செய்வீர்களா? என்பதுதான் இப்போதைக்குத் தேவையானது.
முன்னர் கூட கண்ணன் இந்தக் கருத்துக் களத்தில் குறும்படங்களைப் பற்றிக் கதைத்து வந்தார். ஏனோ அவரைக் காணவேயில்லை.
பார்த்தீர்களா? அந்த குறும்படத்தில் எவ்வளவு விடயங்களைச் சொல்ல வருகிறீர்களென்று. ஆக நீங்கள் சொல்ல வந்ததெல்லாம் எல்லோரிடமும் போய்ச் சேர்ந்ததாகக் கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமே வருகின்றது.
நாங்கள் தாயகத்தில் இருக்கும் போது, பல விசயங்களை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாதிருந்தது. ஆனால் இன்று எதுவுமே எங்களுக்குத் தூரத்தில் இல்லை.
கலைக்காகவும் உங்கள் திருப்திக்காகவும் குறும்படங்களைத் தயாரிக்கும் உங்களுக்கு தென்னிந்தியத் திரைப் படங்கள் போன்ற ஜனரஞ்சகம் கலந்த படங்களைத் தயாரிக்கும் எண்ணம் உண்டா..?
ஏனெனில் இன்று தென்னிந்தியக் கலைஞர்கள் நாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில்தான் படம்பிடித்துப் போகின்றார்கள். எங்கள் கதைகளையே படமாக்கி எங்களுக்குப் போட்டுக் காட்டும் நிலையே அவர்களிடம் இப்போது உள்ளது.
தொடர்ந்தும் நாங்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்போமானால்..... ஆண்டிகள் கட்டிய மடம் போல்தான் எல்லாமே.
முன்னுக்கு வருவீர்களா? முயற்சி செய்வீர்களா? என்பதுதான் இப்போதைக்குத் தேவையானது.
முன்னர் கூட கண்ணன் இந்தக் கருத்துக் களத்தில் குறும்படங்களைப் பற்றிக் கதைத்து வந்தார். ஏனோ அவரைக் காணவேயில்லை.

