11-09-2004, 10:47 PM
kuruvikal Wrote:கவிஞனே....
மலர் எனக்கு
அழகு கொடை
அழகழகாய்
சந்ததி தந்திட
சத்தியமாய் அது
எனக்குத் தேவை....!
மங்கை அவளுள்
அழகு திமிர்..!
அவள் கொண்டது
இரு இதழ் அல்ல
சொல் கொண்டு கொட்டும்
நச்சுக் கொடுக்குகள்...!
கண்ணி வைத்து
பறந்து திரியும் அவள்
கூந்தலுக்குள்
ஏன் சிக்கியது உன் கண்கள்..??!
வஞ்சகி அவளிடத்தில்
நான் அனுபவித்தேன்
கொடுங்கோல் சிறை
உடல் வாடி அழகொடிந்து
உயிர் வீழும் வரை....
உனக்கும் வேண்டுமோ அக்கதி...!
இளைய கவியே....
நீ பழைய பஞ்சாங்கமல்ல
பழைய பல்லவி பாட...!
புரட்சி உலகம் படைக்க
புறப்பட்ட வரிப்புலி...!
வஞ்சியவள் மெய்யழகில்
மெய் மறந்து உளறாதே
மெய்யாய் நீயும் வீழ்வாய்
பாதாளச் சிறையில்
பறிபோகும் உன்
அழகு சுதந்திரம்....!
பருவ மயக்கத்தில்
பரத்தை அவள் பொய்யழகில்
தடக்கி விழாதே...!
மலர் நான்
மங்கையிடம்
கண்ட உண்மை
உன் கவிக்கு பரிசாய்
தருகின்றேன்
கற்றுத் தேறிக்கொள்
தவறுகள் தொடராதே
இன்றே திருத்திக் கொள்.....!
சத்தியமாய் அது வேறை
இது என் மலர் குருவியே
எல்லா மங்கையும்
திமிர் பிடித்தவர்களா...?
இதழ்கள்
நச்சு கொடுக்குகள்
சிலருக்கு
ஆனால் பலருக்கு
இனிய தேன்
பருகும் கிண்ணத்தின்
விளிம்புகளாம்..!
ஏன் பூக்களில்
கூட நச்சு பூக்கள்
இருக்கிறதாமே..!
கண்ணி வைத்தா
இருகிறாள் கூந்தலில்
தெரியாமல் போய் விட்டது
ஆனாலும்
சிக்கவில்லை
என் கண்கள்
அவள் கூந்தலில்
என் கண்கள் சிக்கியது
அவள் சூடி இருந்த
மலரில்.
அப்படியே
சுட்டுவிட்டேன்
அம்மலரை
அதனால் தான்
மலரிடம் கேள்வி எழுப்பி
களத்திலும், குடிலிலும்
இட்டுவிட்டேன்
அதுவும் பதில் சொல்லுது
எனவே
என் மலர் பேசுது
ஜ லவ் யூ என் பூவே.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

