Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மும்பை எக்ஸ்பிரஸ்-கமல்
#6
கமலின் தமிழ்பற்று


அண்மையில் விழாவொன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழர்களின் தமிழ்ப்பற்று குறைந்து வருவது பற்றி, தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்தார். தமிழ் பேசுவதையே அவமானமாக, தமிழர்களே நினைக்கின்றார்கள் என்ற உண்மையையும் குறிப்பிட்டிருந்தார். 'நன்றி மறந்தவன் தமிழன் என்பதற்கு வேறு உதாரணமே தேவையில்லை. அவன் 'நன்றி' என்ற வார்த்தையே மறந்து விட்டான். அதனால் தான் ஆங்கிலத்தில் தேங்கஸ் என்றே சொல்லிப் பழகிவிட்டான், 'நன்றியை மறந்து விட்டான்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இன்று தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழில் பேசுவது பெருமைக்குரிய விஷயம் அல்ல என்ற உணர்வு வளர்ந்து வருகிறது.

தொலைக்காட்சிகளில் ஆங்கிலம் நிரம்பி வழிந்து, தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. சன் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களும், இசை நிகழ்ச்சிகளும் அந்தத் தொலைக்காட்சியின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்தன. ஆனால் அடுத்தடுத்து வந்த தொலைக்காட்சிகளும் சன் தொலைக்காட்சியைப் போலவே ஆங்கிலம் அதிகம் கலந்து பேசினால் தான் வெற்றி பெற முடியும் என்ற ஒரு மூடத்தனமான முடிவுக்குள் நுழைந்தன.

உண்மையில் இன்றைய நிலையில் முழுக்க முழுக்க நல்ல தமிழ் பேசிக்கொண்டு ஒரு தொலைக்காட்சி உருவாகினால், அந்தத் தொலைக்காட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளில் அது பேசும் நல்ல தமிழும் கண்டிப்பாக ஒரு காரணமாக இருக்கும். ஒருவேளை அந்தத் தொலைக்காட்சி வெற்றிபெறவில்லை என்றால் அதற்கு தமிழ் காரணமாக இருக்காது. அந்தத் தொலைக்காட்சியின் வேறு பலவீனங்கள் தான் காரணமாக இருக்க முடியும். ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் மற்ற தொலைக்காட்சிகள் சன் தொலைக்காட்சியைவிட நாங்கள் எந்த அளவிற்கு அதிக ஆங்கிலம் பயன்படுத்துகிறோம் பார்த்தீர்களா? என்று போட்டி போடுவதிலேயே குறியாக இருக்கின்றன. இதைவிட முட்டாள் தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

பிரபல நடிகை குஷ்பு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொருமுறையும் 'குட் மார்னிங் அண்டு வணக்கம்' என்றுதான் ஆரம்பிக்கிறார். குறைந்தபட்சம் 'வணக்கம் மற்றும் குட் மார்னிங்" என்று சொன்னாலாவது ஆறுதலாக இருக்கும். வேறு மொழியில் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் வணக்கம் மற்றும் நமஸ்காரண்டி" என்றோ அல்லது வேறு மாதிரியோ முதலில் தமிழில் அழைத்து, துவங்கினால் ஏற்றுக்கொள்வார்களா?

இன்னொரு தொலைக்காட்சியில் இன்னொரு தொகுப்பாளி, 'தமிழைநன்றாகப் பேசுகிறோம் என்ற எண்ணத்தில், ஆங்கிலத்தைக் கொலை செய்து விடக்கூடாது" என்று பதறுகிறார். இதேபோல் தெலுங்கு, மலையாள, கன்னட தொலைக்காட்சிகளில் அந்தந்த மொழிகளைக் கொலை செய்தாலும் பரவாயில்லை ஆங்கிலத்தை மட்டும், கொலை செய்யக்கூடாது என்று கூறினால் அவர்கள் விட்டு விடுவார்களா?

இலங்கையில் இருந்து வரும் வானொலியாகட்டும் அல்லது ரூபாவாஹினி தொலைக்காட்சியாகட்டும், அவைகளில் நல்ல தமிழ் புழங்கியது. தமிழில் தனியார் தொலைக்காட்சிகள் வந்த காலத்தில், அவை ரூபாவாஹினியை உதாரணமாகக் கொண்டு இயங்கியிருந்தால் கூட, இன்று தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்திலும் தமிழ் கொழித்திருக்கும். இன்று தமிழ்த் தொலைக்காட்சிகளை பார்த்து விட்டு சாதாரண மக்களும்கூட, ஆங்கில வார்த்தைகளை கலந்து தமிழைக் குதறியும் பேசுவதுதான் நவீன பாணி என்று நினைக்கிறார்களே அந்தப் பைத்தியக்காரத்தனம் வராமல் இருந்திருக்கும்.

பழைய இலங்கை வானொலி அறிவிப்பாளரும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகளின் அறிவிப்பாளருமான அப்துல் ஹமீது இவர்களெல்லாம், என்றென்றும் நல்ல தமிழ் பேசக் கூடியவர்கள். இவர்களின் மொழியாற்றல் மற்றும் உச்சரிப்புச் சிறப்புக்களை அளவு கோலாக வைத்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை உருவாக்கி இருந்தாலும் தமிழ் நன்றாக இருந்திருக்கும். ஆனால், தமது தொலைக்காட்சிகள் அதையும் செய்யவில்லை. திட்டமிட்டு தமிழ்மொழி உணர்வும், தமிழ் இன உணர்வும் வளரவே கூடாது என்று எல்லோரும் செயல்படுவது புரிகிறது.

அண்மையில், ஒரு படத்தின் ஒளிநாடா வெளியீட்டு விழாவில், நடிகை திரிஷா ஆங்கிலத்தில் பேச, சீறிச் சினந்து எழுந்த இயக்குனர் ராஜேந்தர், 'திரிஷா, தமிழ் நாட்டுப் பெண்தானே? எதற்காக ஆங்கிலத்தில் பேச வேண்டும்?" என்று பொங்கி எழுந்து விட்டார். மிக நியாயமான உணர்வு அது. ராஜேந்தர் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக திரிஷாவை யாரும் சமாதானப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

உண்மையில், ராஜேந்தர் பேசியதில் கூட நமக்கு ஒரு திருத்தம் உண்டு. அவர் சொல்லும் பொழுது, 'இங்கு சிம்ரன்,கிரண் போன்றவர்கள் ஆங்கிலத்தில் பேசினார்கள். காரணம் அவர்கள் தாய்மொழி தமிழ் அல்ல. அதனால் பரவாயில்லை. ஆனால் திரிஷா ஆங்கிலத்தில் பேசியது ஏன்?" என்று கேட்டார். ஆனால், சிம்ரனும், கிரனும் கூட தமிழில்தான் பேச வேண்டும். அதுதான்முறை.

எங்கோ ஊர் பேர் தெரியாமல் குப்பை கொட்டிக் கொண்டிருந்த இவர்களை புகழின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, பிரமுகர்களாக்கியது, தமிழ்சினிமா, இவர்கள் சாப்பிடும் சாப்பாடு தமிழ்நாடு போடும் சாப்பாடு. அப்படியிருக்க, இவர்கள் இங்கையே பல வருடங்களாக புழங்கி வரும் நிலையில், தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் பேசச் சொல்லி இவர்களை வற்புறுத்த வேண்டும்.

இங்கே இந்த மண்ணில் தமிழ் திரையுலகில் பிழைக்க வரும் வேற்று மொழிக் கலைஞர்கள் எல்லோரும் தங்கள் தாய் மொழியைச் சேர்ந்தவர்களை இங்கு வளர்த்துவிட்டு, தமிழ்த் திரையுலகில் தமிழர்களின் இருப்பைக் குறைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தங்கள் தாய்மொழி மாநிலங்களில் இருந்தே தொழில் நுட்பக் கலைஞர்களை கொண்டு வந்து அவர்களுக்கு வேலை கொடுத்து இங்குள்ள தமிழ்க் கலைஞர்களைப் புறக்கணிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கிற, பிழைக்கிற யாவரும் தமிழை, தமிழ் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்ற உணர்வு கட்டாயமாக உருவாக்கப்பட வேண்டும். நம் தமிழ் கலைஞர்கள் அனைவரும் இனியாவது உண்மையான தமிழ் உணர்வோடு செயல்பட்டால்தான் கமலஹாசனின் ஆதங்கம்,ஒரு நாள் கூத்தாக இல்லாம் தொடர்ந்து எல்லோரும் (மற்ற நடிகர்கள் உட்பட) பின்பற்றும் சூழ்நிலையை ஏற்படுத்தி அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும், பரவி, தமிழ் உணர்வுள்ள ஒரு தமிழ்;த் சமுதாயத்தை உருவாக்கும் அளவிற்குப் பலனைத் தரும். அப்போது தான் நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதில் பொருள் இருக்கும்.

வீரகேசரி
============================
இது பற்றோ? இல்லாட்டி அரசியலோ? எனக்கு விளங்கேல்லை....உங்களுக்கு????
"மும்பை கடுகதி" ஏன் மும்பை எக்சுபிரசு ஆனது???
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 11-07-2004, 07:49 PM
[No subject] - by kuruvikal - 11-07-2004, 08:28 PM
[No subject] - by kavithan - 11-07-2004, 08:58 PM
[No subject] - by கறுணா - 11-09-2004, 04:32 PM
[No subject] - by Kanani - 11-09-2004, 04:56 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)