07-26-2003, 05:43 PM
இனிய அன்பு உள்ளங்ளே,
உங்கள் விமர்சனங்களில் தெரியும் பாராட்டுகள் உண்மையில் எம்மைத் தாலாட்டகின்றன.
இது ஒரு தனி மனிதனின் வெற்றியல்ல என்னோடு இணைந்து கரம் கோர்த்த அனைவரதும் வெற்றியாகத்தான் கருதுகிறேன். உங்கள் விமர்சனங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்வேன்.அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு என் நன்றிகள்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் அல்லது வெற்றிக்காக இணைந்து நிற்கும் பலர் வெளிச்சத்தில் தெரிவதில்லை.
ஒரு மரத்தின் வளர்ச்சியைப் பார்த்து பிரமிக்கும் நாம்இ அதன் வளர்ச்சிக்கு உதவிய ஒளி - காற்று - நீர் - சுற்றம் -------- இன்னும் எத்தனை எத்தனையோ விடயங்களை நாம் கணக்கிலெடுப்பதில்லை.
அதுபோல் என் படைப்புகளில் சேர்ந்திருந்து வேதனைகளைத் தாங்கி உரமான மற்றும் கருத்து முரண்பட்டு - பொறுமையற்று - எனது பிடிவாதங்ளை
( கொள்கை) ஏற்றுக் கொள்ளாது என்னை நட்டாற்றில் விட்டுச் சென்ற அனைவருக்கும் நன்றி சொல்ல யாழ் இணையம் வழி என் இதயம் துடிக்கிறது.
தாங்கள் குறை கானும் போதும் மகிழ்வோடு தங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறது மனது.
சுவிசின் திரைப்பட விழாவில் 5 விருதுகளைப் பெறும் போது Swiss மக்களுடன் சேர்ந்து கரவொலி செய்யவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது தனித்து நின்று குமுறிய என் இதயத்துக்கு தாக சாந்தி செய்தது போன்ற உணர்வு உங்கள் பாராட்டுகள் - விமர்சனங்கள் -தாக்குதல்கள் மூலம் கிடைத்ததில் அக மகிழ்ச்சி.நன்றிகள்...............
அடுத்த படைப்பான
அழியாக் கவிதை குறும் படம் வெகு விரைவில் உங்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.
லட்சங்களுக்காக வாழும் மக்கள் மத்தியில் லட்சியங்களுக்காக வாழும் ஒரு சிலராவது இல்லாமலில்லை.
நன்றியறிலுடன்
அஜீவன்.
உங்கள் விமர்சனங்களில் தெரியும் பாராட்டுகள் உண்மையில் எம்மைத் தாலாட்டகின்றன.
இது ஒரு தனி மனிதனின் வெற்றியல்ல என்னோடு இணைந்து கரம் கோர்த்த அனைவரதும் வெற்றியாகத்தான் கருதுகிறேன். உங்கள் விமர்சனங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்வேன்.அவர்கள் சார்பாகவும் உங்களுக்கு என் நன்றிகள்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் அல்லது வெற்றிக்காக இணைந்து நிற்கும் பலர் வெளிச்சத்தில் தெரிவதில்லை.
ஒரு மரத்தின் வளர்ச்சியைப் பார்த்து பிரமிக்கும் நாம்இ அதன் வளர்ச்சிக்கு உதவிய ஒளி - காற்று - நீர் - சுற்றம் -------- இன்னும் எத்தனை எத்தனையோ விடயங்களை நாம் கணக்கிலெடுப்பதில்லை.
அதுபோல் என் படைப்புகளில் சேர்ந்திருந்து வேதனைகளைத் தாங்கி உரமான மற்றும் கருத்து முரண்பட்டு - பொறுமையற்று - எனது பிடிவாதங்ளை
( கொள்கை) ஏற்றுக் கொள்ளாது என்னை நட்டாற்றில் விட்டுச் சென்ற அனைவருக்கும் நன்றி சொல்ல யாழ் இணையம் வழி என் இதயம் துடிக்கிறது.
தாங்கள் குறை கானும் போதும் மகிழ்வோடு தங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ளத் துடிக்கிறது மனது.
சுவிசின் திரைப்பட விழாவில் 5 விருதுகளைப் பெறும் போது Swiss மக்களுடன் சேர்ந்து கரவொலி செய்யவோ அல்லது பகிர்ந்து கொள்ளவோ முடியாது தனித்து நின்று குமுறிய என் இதயத்துக்கு தாக சாந்தி செய்தது போன்ற உணர்வு உங்கள் பாராட்டுகள் - விமர்சனங்கள் -தாக்குதல்கள் மூலம் கிடைத்ததில் அக மகிழ்ச்சி.நன்றிகள்...............
அடுத்த படைப்பான
அழியாக் கவிதை குறும் படம் வெகு விரைவில் உங்கள் பார்வைக்கு வரவிருக்கிறது.
லட்சங்களுக்காக வாழும் மக்கள் மத்தியில் லட்சியங்களுக்காக வாழும் ஒரு சிலராவது இல்லாமலில்லை.
நன்றியறிலுடன்
அஜீவன்.

