Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அழியா நினைவுகளிலிருந்து.... "மேஜர் கணேஸ்"
#1
எனது மனத்தில் இன்னும் அழியா நினைவாக இருக்கும் அந்த 86ம் ஆண்டு இதேமாதம் இதேநாள் நடைபெற்ற .....................

........... இதேநாள் நான் சிறுவனாக இருந்தபோது எனது உறவினருடன் அவரது மோட்டார் சைக்கிளில் முல்லைத்தீவைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறோம். திடீரென சோக இசை எங்கும் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் நாம் வந்த வாகனத்தை நிறுத்தி, சோக இசைக்காண காரணத்தை அறீய முற்பட்டோம். என்ன நடந்தது என வழியால் வந்தவரிடம் விசாரித்தோம், அவரோ திருமலையில் "மேஜர் கணேஸ்" இன்று வீரமரணமடைந்ததாக கூறிச் சென்றார். எமக்கோ அப்போ "மேஜர் கணேஸை" பார்த்ததுமில்லை, கேள்விப்படவுமில்லை! நாமும் சென்று விட்டோம்.

நாம் திரும்பி வரும் வழியில், தற்சமயம் திருமலை மூதூரிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் ஓர் கிராமம் வழியே வர நேர்ந்தது. அக்கிராமத்தில் கண்டது ............. இருபது இருபத்தைந்து இளம்பெண்களிருக்கும் கதறி ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார்கள். ஒண்று மட்டும் புரிந்தது குடும்ப உறவொண்றைத் தொலைத்து விட்டார்களென்று! என்னவென்று விசாரிக்க முற்பட்டோம், "மேஜர் கணேஸ்ஸின்" இழப்புத்தானென்பது புரிந்தது. அம்மாமலையின் கதைகளை சொல்லிச் சொல்லியழுதார்கள். ................

............ 85, 86ம் ஆண்டுகளில் முஸ்லீம் ஊர்காவற் படையினர் எனும் பெயரில் கிழக்கு மாகாணத்தில் செய்த அட்டூளியங்கள், சொல்லிலடங்காது. குறிப்பாக வெளியுலகு தொடர்பற்ற மூதூர் பிரதேசம் ஜிகாத், ஊர்காவற்படை என பல முஸ்லீம் காடையர்களினால் அரச படைகளின் ஆதரவுடன் சவற்காடாக மாற்றப்பட்டிருந்து. ஏராளமான பெண்கள் கூட பிடித்துச் செல்லப்பட்டு கற்பளித்தும், மார்பகங்கள் அறுக்கப்பட்டும் சித்திரைவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்............... ஓர் நாள் இக்காடையர்களினால் மூதூரை அண்டிய அயற் கிராமங்களிலிருந்து பிடித்துகொண்டு செல்லப்பட்ட ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்த மனிதத்தெய்வம் தனது தோழர்கள் சிலருடன் உயிராபத்து நிறைந்த இராணுவ, முஸ்லீம் பகுதிகளுக்குள் உட்புகுந்து அக்காடையர்களை அழித்து அவர்களை மீட்டு வந்தான்................
.................. எங்கிருந்தோ வந்தான், தமக்கு பாரதத்தில் வந்த கண்ணனே இந்தக் கணேஸாக வந்ததாக சொல்லியழுதார்கள். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களே அப்பெண்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.

எண்பதுகளில் தமிழீழத்தில் காரைநகர் தொடக்கம் திருக்கோவில் வரை இம்மனிதத் தெய்வத்தின் முழக்கங்கள் கேட்காத இடமேயில்லையாம். திருமலையில் சீலனின் நண்பனாக, இயக்கத்தில் சூரியத் தேவனுக்கு பலம் பொருந்திய தோழனாக, மூத்த தளபதியாக, அம்மக்களின் தெய்வமாக பிறப்பிற்கே அர்த்தம் கூறி மாவீரனாகி விட்டான்.............
"
"
Reply


Messages In This Thread
அழியா நினைவுகளிலிருந்து.... "மேஜர் கணேஸ்" - by Nellaiyan - 11-05-2004, 10:50 PM
[No subject] - by TMR - 11-06-2004, 10:47 PM
[No subject] - by Sriramanan - 11-07-2004, 09:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)