07-26-2003, 11:39 AM
அன்புக்கினிய முல்லை - மதிவதனன்
தங்களது விமர்சனங்களுக்கு பணிவன்பான நன்றிகள்.
தங்களது விமர்சனங்கள் என்னை ஆரோக்கியமான ஓர் விவாததுதுக்கு இட்டுச் சென்றிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.
நிழல் யுத்தம் குறும்படம் புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் யதார்த்த பிரச்சனைகளில் ஒரு துளி மட்டுமே.
இதை விட எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் அறியாதவர்களல்ல.அவை காலப்போக்கில் படைப்புகளாகலாம் அல்லது ஆகாமலும் போகலாம்.
சினிமா சார்ந்த படைப்பாளிகளில் பலர் தமது கருத்துகளை திணிப்பதையோ அல்லது புத்திமதி - அறிவுரை சொல்வதையோ தமது குறிக்கோளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் என் படைப்புகளில் ; நான் காண்பவற்றை அப்படியே யதார்த்தமாக கொஞ்சம் சினிமா மொழியோடு முன்வைக்கவே விரும்புகிறேன்.
அதற்கு காரணம்; தற்போதைய பெரும்பாலான மக்கள் படித்தவர்களாகவும் விழிப்படைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு பெரும்பாலும் அதிகமாக புத்திமதியோ அறிவுரையோ தேவைப்படுவதில்லை.
இவற்றை அவர்கள் மறுத்து விடுகிறார்கள்.
ஒரு படைப்பாளியின் இப்படியான எண்ணங்கள் பார்வையாளன் ஏதோ முட்டாள் என்றும் அவர்கள் நாம் சொல்வதை ஏற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிப்பது போன்ற நிலையை உருவாக்கிவிடும்.
எனது படைப்புகளை ; நான் காணும் சாதாரண மக்களின் யதார்த்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்குகிறேன். இக் கதாபாத்திரங்களுக்கு உரிவர்கள் அறிஞர்களில்லை. இவர்கள் சர்வ சாதாரணமானவர்கள்.
அதற்காக இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் யாரிடமாவது அனுமதி பெற்று அறிவுரையோடு செய்பவர்கள் என்றும் அர்த்தமல்ல.
இவர்கள் தாம் செய்பவை சரியாகத்தான் இருக்கிறதென்று கருத்தோடு வாழ்பவர்கள்.
புலம் பெயர்ந்த பின் இவர்கள் குடும்பம் உட்பட யாரையும் சாராதவர்கள்.
தாம் வந்த பாதையில் நடந்த தவறுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.
அதேபோல் தமது வெற்றிகளுக்கும் தாமே தம்முள் வெற்றிக் கிறீடங்களை வைத்துக் கொண்டவர்கள்.
நாமும் கடந்த காலங்களில்; இருந்த இடத்திலேயே இருந்து உலகத்தை பார்த்து பழக்கப் பட்டிருந்தோம்.
பின்னர் நமது அறிவு- பார்வை - வாழ்வின் மாற்றங்கள் மாற மாற எமது அனுபவங்களைக் கொண்டே நமது உள்ளார்ந்த அடிப்படை அறிவையும் -நம்மையும் மேன்மையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இருப்பினும் நிழல்யுத்தக் கதாபாத்திரங்களில் அவர்களை அவர்களாகவே வாழ வழி செய்திருக்கிறேன்.
அவர்களிடம் என்னுள் உள்ள கருத்தையோ அல்லது மற்றவர் எதிர் மறையாக எண்ணலாம் என்று தோன்றிய கருத்தையோ திணிக்கவில்லை.அது நாகரீகமுமில்லை.
நிழல்யுத்த கதாபாத்திரமான பாலா தனிமையிலும் - நண்பர்களுடனும் வாழ்ந்து பழக்கப்பட்டவன்.இவன் புலம் பெயர்ந்த பின் யாரையும் சார்ந்து வாழ்ந்தவனல்ல.
அவன் தான் நினைத்ததை - செய்வதை யாரிடமும் கலந்தாலோசிக்காமல் செய்து பழக்கப்பட்டவன்.
சாதாரணமாக புலம் பெயர் நாடுகளில் வாழும் நண்பர்கள் ஒன்றாக வீடுகளில் வந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதே அரிது.
(சில குடும்பங்களிலேயே இவை நடக்கிறது.)
இப்படியாகப் பழக்கப்பட்ட ஒருவனுக்கு இது சர்வ சாதாரணமாகலாம்.
இப்டியான எண்ணம் காரணமாக பாலா மனைவிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுவதும் ; நேரம் களித்து வீடு வருவதும் நடக்கிறது.
இது தவறாக அவனுக்குள் தெரிவதேயில்லை.
பெண்ணும் - ஆணும் சமமென்ற கருத்து கொண்ட நாம் வாழும் நாடுகளில் ராதிகாவின் தனிமையைப் பற்றியோ ; அல்லது அவள் தனக்காக காத்திருப்பாள் என்ற நிiனைப்பையோ சற்றும் எண்ணத் தோன்றாத சிந்தனையும் அவனது அடிமனதில் இருக்கலாம்.
எங்கோ ஒரு முரண்பாடு ஏற்படும் போதுதான் பிரச்சனை தெரிகிறது; தெறிகக்கத் தொடங்குகிறது.
ஆனால் ராதிகாவோ குடும்பம் - மற்றும் குடும்ப பந்தங்களுடன் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவள்.
உறவினர்கள் - நண்பர்கள் என்று குதூகலத்துடன் வாழ்வை பகிர்ந்து கொண்டு சார்ந்து பழக்கப்பட்டு விட்ட அவளுக்கு இது ஒரு பேரிடி.
புலம், சொர்க்கமானாலும் இந்த மாற்றம் - தனிமை - வீடடுக் கவலை ஆகியவை அவளது முகத்தில் நரக வேதனையையும் சோகத்தின் படிமங்களையும் தொடர்ந்து அவள் முகத்துக்குள் தேக்கியே வைத்திருக்கிறது.
அவளது நண்பனாக தெரியும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பினனர்; தனக்கிருக்கும் ஒரே ஆறுதலாக நினைக்கும் பாலாவின் மேல் அவளுக்கு ஏற்பட்ட சந்தேகம் அவளை வருத்துவதில் எந்த தவறுமில்லை.
தவறு செய்துவிட்டோமே என்ற உள் உணர்வு காரணமாக அவள் அவனைத் தேடுவது இயல்பான ஒன்று.
தவறு செய்யும் குழந்தையை தண்டித்து விட்டு தூங்கிய பின் தன் குழந்தை பக்கத்தில் சென்று கண்கலங்கியவாறு தடவிக் கொடுக்கும் எத்தனையோ தாய்மாரை எனக்குத் தெரியும்.
இது ஒருபோதும் தாழ்வாகி விடாது
இதுதான் மனித நேயம்.
பாலாவும் மோசமானவனல்ல ; கோபத்தில் சிரிப்பவர்கள் மனிதர்களல்ல, நல்ல நடிகர்கள்.
அவன் கோபத்தில் கத்தி விட்டு பின்னர் கலங்கிப் போய் கண்கலங்குகிறான்.
எந்தப் பிரச்சனையை வேணுடுமானாலும் நண்பர்களுடன் கலந்து பேசலாம்,இது வீட்டுப் பிரச்சனை ??????????????
வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில், கவலையை மறக்க தூக்கம்தான் மருந்து என்று முன் அறையில் இருக்கும் செட்டியை (நீள் கதிரை) படுக்கையாக்கிக் கொள்கிறான்.
பாலா-ராதிகா இருவரது கண்ணீர்; பிரச்சனைக்கு முடிவல்ல.கண்ணீர் மனித மன வேதனைகளை வெளிக் கொண்டு வர உடலில் ஏற்படும் ஓர் இரசாயன மாற்றத்தின் அறிகுறி மட்டுமே.
ஒருவரை ஒருவர் தேடிச் செல்வதும் , குனிவதும் , விழித்துப் பார்ப்பதும் , முடங்கிக்கிடப்பதும் சிறுமையல்ல.
குனிந்து மூழ்கித்தான் முத்தெடுக்க வேண்டும்.
அதே போல் தேவையானதை தேவையான சமயத்தில் செய்யாது போவது ஒரு மனநோய்.
உண்மையான படைப்பாளி ஒரு சர்வதிகாரியல்ல.பார்வையாளனுக்கு கட்டளை போடவோ - முடிவுரை சொல்லவோ உரிமையில்லை.
வாழ்கை என்பதும் ஒரு தொடர் கதைதான்......எனது படைப்புகளில் எனக்கு பரிச்சயமான ஏதோ சில விதைகளைத் தூவி விட்டு விலகி நின்று பார்க்கிறேன்.
சிந்திப்பவர்கள் தாங்களாகவே அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள்.
தன்னை பற்றி சிந்தித்து தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஆரோக்கியமான ஒரு சமுதாயம்தான் எமக்குத் தேவையேயொழிய மீண்டுமொரு அடிமையொடிமைச் சமுதாயமொன்றல்ல.
நல்லதை தேர்ந்தெடுக்கவும் - பிரித்து வேறுபடுத்தவும் - தேவையானதை ஏற்றுக்கொள்ளவும் - ஏற்றுக் கொள்ளாமலிருக்கவும் பார்வையாளனுக்கு முழு உரிமையுமுண்டு.
படைப்பாளி என்பவன் இறைவனல்ல.அவனும் உங்களைச்சார்ந்த - உங்களைப் போன்ற ஒரு சராசரி மனிதன்தான்.
பணிவன்புடன்
அஜீவன்
தங்களது விமர்சனங்களுக்கு பணிவன்பான நன்றிகள்.
தங்களது விமர்சனங்கள் என்னை ஆரோக்கியமான ஓர் விவாததுதுக்கு இட்டுச் சென்றிருப்பதையிட்டு மகிழ்கிறேன்.
நிழல் யுத்தம் குறும்படம் புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் யதார்த்த பிரச்சனைகளில் ஒரு துளி மட்டுமே.
இதை விட எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் அறியாதவர்களல்ல.அவை காலப்போக்கில் படைப்புகளாகலாம் அல்லது ஆகாமலும் போகலாம்.
சினிமா சார்ந்த படைப்பாளிகளில் பலர் தமது கருத்துகளை திணிப்பதையோ அல்லது புத்திமதி - அறிவுரை சொல்வதையோ தமது குறிக்கோளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் என் படைப்புகளில் ; நான் காண்பவற்றை அப்படியே யதார்த்தமாக கொஞ்சம் சினிமா மொழியோடு முன்வைக்கவே விரும்புகிறேன்.
அதற்கு காரணம்; தற்போதைய பெரும்பாலான மக்கள் படித்தவர்களாகவும் விழிப்படைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்கு பெரும்பாலும் அதிகமாக புத்திமதியோ அறிவுரையோ தேவைப்படுவதில்லை.
இவற்றை அவர்கள் மறுத்து விடுகிறார்கள்.
ஒரு படைப்பாளியின் இப்படியான எண்ணங்கள் பார்வையாளன் ஏதோ முட்டாள் என்றும் அவர்கள் நாம் சொல்வதை ஏற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவிப்பது போன்ற நிலையை உருவாக்கிவிடும்.
எனது படைப்புகளை ; நான் காணும் சாதாரண மக்களின் யதார்த்த வாழ்வை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்குகிறேன். இக் கதாபாத்திரங்களுக்கு உரிவர்கள் அறிஞர்களில்லை. இவர்கள் சர்வ சாதாரணமானவர்கள்.
அதற்காக இவர்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் யாரிடமாவது அனுமதி பெற்று அறிவுரையோடு செய்பவர்கள் என்றும் அர்த்தமல்ல.
இவர்கள் தாம் செய்பவை சரியாகத்தான் இருக்கிறதென்று கருத்தோடு வாழ்பவர்கள்.
புலம் பெயர்ந்த பின் இவர்கள் குடும்பம் உட்பட யாரையும் சாராதவர்கள்.
தாம் வந்த பாதையில் நடந்த தவறுகளுக்கு தாமே பொறுப்பேற்றுக் கொண்டவர்கள்.
அதேபோல் தமது வெற்றிகளுக்கும் தாமே தம்முள் வெற்றிக் கிறீடங்களை வைத்துக் கொண்டவர்கள்.
நாமும் கடந்த காலங்களில்; இருந்த இடத்திலேயே இருந்து உலகத்தை பார்த்து பழக்கப் பட்டிருந்தோம்.
பின்னர் நமது அறிவு- பார்வை - வாழ்வின் மாற்றங்கள் மாற மாற எமது அனுபவங்களைக் கொண்டே நமது உள்ளார்ந்த அடிப்படை அறிவையும் -நம்மையும் மேன்மையாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இருப்பினும் நிழல்யுத்தக் கதாபாத்திரங்களில் அவர்களை அவர்களாகவே வாழ வழி செய்திருக்கிறேன்.
அவர்களிடம் என்னுள் உள்ள கருத்தையோ அல்லது மற்றவர் எதிர் மறையாக எண்ணலாம் என்று தோன்றிய கருத்தையோ திணிக்கவில்லை.அது நாகரீகமுமில்லை.
நிழல்யுத்த கதாபாத்திரமான பாலா தனிமையிலும் - நண்பர்களுடனும் வாழ்ந்து பழக்கப்பட்டவன்.இவன் புலம் பெயர்ந்த பின் யாரையும் சார்ந்து வாழ்ந்தவனல்ல.
அவன் தான் நினைத்ததை - செய்வதை யாரிடமும் கலந்தாலோசிக்காமல் செய்து பழக்கப்பட்டவன்.
சாதாரணமாக புலம் பெயர் நாடுகளில் வாழும் நண்பர்கள் ஒன்றாக வீடுகளில் வந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதே அரிது.
(சில குடும்பங்களிலேயே இவை நடக்கிறது.)
இப்படியாகப் பழக்கப்பட்ட ஒருவனுக்கு இது சர்வ சாதாரணமாகலாம்.
இப்டியான எண்ணம் காரணமாக பாலா மனைவிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுவதும் ; நேரம் களித்து வீடு வருவதும் நடக்கிறது.
இது தவறாக அவனுக்குள் தெரிவதேயில்லை.
பெண்ணும் - ஆணும் சமமென்ற கருத்து கொண்ட நாம் வாழும் நாடுகளில் ராதிகாவின் தனிமையைப் பற்றியோ ; அல்லது அவள் தனக்காக காத்திருப்பாள் என்ற நிiனைப்பையோ சற்றும் எண்ணத் தோன்றாத சிந்தனையும் அவனது அடிமனதில் இருக்கலாம்.
எங்கோ ஒரு முரண்பாடு ஏற்படும் போதுதான் பிரச்சனை தெரிகிறது; தெறிகக்கத் தொடங்குகிறது.
ஆனால் ராதிகாவோ குடும்பம் - மற்றும் குடும்ப பந்தங்களுடன் சார்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவள்.
உறவினர்கள் - நண்பர்கள் என்று குதூகலத்துடன் வாழ்வை பகிர்ந்து கொண்டு சார்ந்து பழக்கப்பட்டு விட்ட அவளுக்கு இது ஒரு பேரிடி.
புலம், சொர்க்கமானாலும் இந்த மாற்றம் - தனிமை - வீடடுக் கவலை ஆகியவை அவளது முகத்தில் நரக வேதனையையும் சோகத்தின் படிமங்களையும் தொடர்ந்து அவள் முகத்துக்குள் தேக்கியே வைத்திருக்கிறது.
அவளது நண்பனாக தெரியும் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்ட பினனர்; தனக்கிருக்கும் ஒரே ஆறுதலாக நினைக்கும் பாலாவின் மேல் அவளுக்கு ஏற்பட்ட சந்தேகம் அவளை வருத்துவதில் எந்த தவறுமில்லை.
தவறு செய்துவிட்டோமே என்ற உள் உணர்வு காரணமாக அவள் அவனைத் தேடுவது இயல்பான ஒன்று.
தவறு செய்யும் குழந்தையை தண்டித்து விட்டு தூங்கிய பின் தன் குழந்தை பக்கத்தில் சென்று கண்கலங்கியவாறு தடவிக் கொடுக்கும் எத்தனையோ தாய்மாரை எனக்குத் தெரியும்.
இது ஒருபோதும் தாழ்வாகி விடாது
இதுதான் மனித நேயம்.
பாலாவும் மோசமானவனல்ல ; கோபத்தில் சிரிப்பவர்கள் மனிதர்களல்ல, நல்ல நடிகர்கள்.
அவன் கோபத்தில் கத்தி விட்டு பின்னர் கலங்கிப் போய் கண்கலங்குகிறான்.
எந்தப் பிரச்சனையை வேணுடுமானாலும் நண்பர்களுடன் கலந்து பேசலாம்,இது வீட்டுப் பிரச்சனை ??????????????
வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில், கவலையை மறக்க தூக்கம்தான் மருந்து என்று முன் அறையில் இருக்கும் செட்டியை (நீள் கதிரை) படுக்கையாக்கிக் கொள்கிறான்.
பாலா-ராதிகா இருவரது கண்ணீர்; பிரச்சனைக்கு முடிவல்ல.கண்ணீர் மனித மன வேதனைகளை வெளிக் கொண்டு வர உடலில் ஏற்படும் ஓர் இரசாயன மாற்றத்தின் அறிகுறி மட்டுமே.
ஒருவரை ஒருவர் தேடிச் செல்வதும் , குனிவதும் , விழித்துப் பார்ப்பதும் , முடங்கிக்கிடப்பதும் சிறுமையல்ல.
குனிந்து மூழ்கித்தான் முத்தெடுக்க வேண்டும்.
அதே போல் தேவையானதை தேவையான சமயத்தில் செய்யாது போவது ஒரு மனநோய்.
உண்மையான படைப்பாளி ஒரு சர்வதிகாரியல்ல.பார்வையாளனுக்கு கட்டளை போடவோ - முடிவுரை சொல்லவோ உரிமையில்லை.
வாழ்கை என்பதும் ஒரு தொடர் கதைதான்......எனது படைப்புகளில் எனக்கு பரிச்சயமான ஏதோ சில விதைகளைத் தூவி விட்டு விலகி நின்று பார்க்கிறேன்.
சிந்திப்பவர்கள் தாங்களாகவே அனைத்தையும் புரிந்து கொள்கிறார்கள்.
தன்னை பற்றி சிந்தித்து தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஆரோக்கியமான ஒரு சமுதாயம்தான் எமக்குத் தேவையேயொழிய மீண்டுமொரு அடிமையொடிமைச் சமுதாயமொன்றல்ல.
நல்லதை தேர்ந்தெடுக்கவும் - பிரித்து வேறுபடுத்தவும் - தேவையானதை ஏற்றுக்கொள்ளவும் - ஏற்றுக் கொள்ளாமலிருக்கவும் பார்வையாளனுக்கு முழு உரிமையுமுண்டு.
படைப்பாளி என்பவன் இறைவனல்ல.அவனும் உங்களைச்சார்ந்த - உங்களைப் போன்ற ஒரு சராசரி மனிதன்தான்.
பணிவன்புடன்
அஜீவன்

