Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்மை இங்கு புலியானதால்-புதுவை
#7
நாங்கள் இந்தக் கவிதையைச் சொல்லவில்லை அந்தக் காலப் பாவலர்கள் அரச சபைகளில் தங்கள் கவிப்புலமைக்கு பாராட்டும் கெளரவமும் தேடி அரசர்களை அரசிகளை மகிழ்விக்கச் சொன்ன பொய்கள் தான் அவை என்பதாகவே நாங்கள் சொன்னோம்....!

புறநானூற்றில் பெண்களின் வீரம் பற்றிச் சொல்லி இருக்கே...எந்த இடத்தில் என்பது தற்போது நினைவில் இல்லை...! தமிழர் இராச்சியங்களை அரசிகளும் ஆண்ட வரலாறுகள் உண்டுதானே...அவர்களை ஏன் பெண்கள் உதாரணமாகக் கொள்ளவில்லை....???!

நிச்சயமாக இக்கவிதை சொல்லும் விடயத்தில் தவறில்லை...எமது நோக்கு இதுதான்... பெண்களை தனித்துவமாகக் காட்டலாம் ஆனால் தனித்துக்காட்டக் கூடாது....ஆண்களின் பங்களிப்பில்லாமல் சமூகத்தின் பங்களிப்பில்லாமல் பெண் என்ன எவரும் எதையும் சமூகத்தில் சமூகத்துக்காக சாதிக்க முடியாது...ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான் சமூகம்...!

பெண்கள் ஆணை விஞ்சினால் என்ன ஆண் பெண்ணை விஞ்சினால் என்ன அடிப்படையில் இருவரும் ஒருவரில் ஒருவர் தங்கித்தான் இருக்க வேண்டும்...அதுதான் இருபால் உயிரினக் கோட்பாடு... அதை எந்த நிலையிலும் மனிதன் தன் அழிவைத் தீர்மானிக்க விரும்பாவிடின் குலைக்க முடியாது....! நிச்சயமாக பெண்கள் இன்று கல்வியில் முன்னணி வகிக்கின்றார்கள்...(விஞ்ஞானக் கல்வியில் பின்னணியில் நிற்கிறார்கள்...!) அது அவர்களின் சொந்த முயற்சிக்குக் கிடைத்த பலம்....அது பெண்களுக்கல்ல எலோருக்கும் பொது...நாளை ஆண்களும் தங்கள் முயற்சியை ஊக்கப்படுத்தினால் பெண்களின் நிலையை அடையலாம்...அதில் தவறில்லை..மொத்தத்தில் நன்மை பெறுவது ஆணும் பெண்ணும் வாழும் சமூகமே....!

நாங்கள் சொல்ல வந்தது... பெண்களிலும் மாற்றம் விரும்பாத பழமைவாதக் குகைகுள் வாழ நினைப்போர் அதிகம்....அதை ஆதரிக்கும் ஆண்களும் இருப்பதால்தான் அந்த நிலை தொடர்கிறது...! எனவே மாற்றத்தை விரும்பும் ஆணையும் மாற்றத்தை விரும்பும் பெண்ணுடன் இணைத்துக்காட்டுவதே முற்சொன்னோரும் மாற்றங்கள் நோக்கி வர உதவும் என்பதைத்தான்....!

ஆண் சமூகத்தில் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பதோ அல்லது பெண் ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பதோ எமது எதிர்பார்ப்பல்ல....! ஆதிக்கம் என்பது எந்த நிலையிலும் எவர் செய்யினும் ஆபத்தைத்தான் விளைவிக்கும்....புரட்சிகளைத் தான் தோற்றுவிக்கும்....! காரணம் மனிதன் (ஆண் பெண் பாகுபாட்டுக்கு அப்பால்) பகுத்தறிவு விலங்கு..அதற்குமேல் உயிர் அனைத்துக்கும் தனது வாழ்வுரிமைச் சுதந்திரத்தைப் பாதுகாக்க இயற்கையாக வழி சமைக்கப்பட்டுள்ளது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-02-2004, 09:32 AM
[No subject] - by hari - 11-02-2004, 10:36 AM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 01:43 PM
[No subject] - by tamilini - 11-02-2004, 02:32 PM
[No subject] - by Sothiya - 11-02-2004, 02:53 PM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 03:15 PM
[No subject] - by hari - 11-02-2004, 03:17 PM
[No subject] - by tamilini - 11-02-2004, 03:39 PM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 03:57 PM
[No subject] - by tamilini - 11-02-2004, 04:11 PM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 05:35 PM
[No subject] - by tamilini - 11-02-2004, 08:45 PM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 08:59 PM
[No subject] - by tamilini - 11-02-2004, 09:12 PM
[No subject] - by kuruvikal - 11-02-2004, 09:45 PM
[No subject] - by kavithan - 11-02-2004, 10:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)