10-30-2004, 08:23 AM
[size=18]<b>ஒரு கடிதம் [ கவிதன் ]</b>
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kaathaliyin_kaditham-thumb.JPG' border='0' alt='user posted image'>
[u][size=18]<b>ஒரு கடிதம்</b>
[size=18]முத்தான உன் எழுத்துக்களால்
நீ.!
எனக்கு
முகவரி இட்டு அனுப்பிய
அஞ்சல் என் கைகளில்
தவழ்கின்றது.
பத்தும் பலதும்
பறைந்த
பாசமான உன் கடிதம்
பார்க்கும்
என் கண்களில்,
ஆனந்த கண்ணீர்.
மனதிலோ,
பொங்கும் மகிழ்ச்சி
மட்டுக்கடங்காது.
சொல்லில் அடங்காத
ஓர் பேரின்பத்தை
உன்
சிறிய
மடல் மூலம்
எனக்கு
நீ ஏற்படுத்தினாய்.
பக்கம் பக்கமாய்
நான் படிக்கும்
கவிதைகளில்
இல்லாத
ஒரு சுகத்தை
உன்
ஒரு பக்க
கடிதத்தில்
நீ தந்தாய்.
கட்டுக் கட்டாய்
நான் பாட்டியிடம்
கேட்ட
கட்டுக் கதைகளில்
கிடைத்த
மகிழ்ச்சியை விட
உன் கடிதத்தினால்
எனக்கு அதிக
இன்பத்தை
நீ ஊட்டினாய்
"கடுகு சிறிதானலும்
காரம் பெரிது"
ஆமாம்,
உன் கடிதம்
கடுகு தான்
ஆனால்,
நீ சொன்னவை
காரம் அல்ல
இனிப்பு.
ஆம், இனிப்பு
என் உமிழ்நீரில்
கரையவில்லை
என் மனதில்
கரைகிறது.
அழகாக,
அழகழகாக,
எழுத்துக்களை கோர்த்து
வரிவடிவம் தந்து
அஞ்சல் எழுதிய
அப்பேனாவுக்கு
ஒரு முத்தம்.
பேனாவை இயக்கிய
அவ்
அழகிய விரல்களுக்கு
ஒரு முத்தம்.
கருத்துக்களை
கோர்த்து
அழகாக தந்த
உன் மனதுக்கு
ஒரு முத்தம்.
எஞ்சிய முத்தங்கள்
எனக்காக
காத்திருக்கும்
உனக்கே
உனக்காக.
எனக்கொரு
முத்தம்
கிடைக்குமா செல்லம்?
[யாவும் கற்பனை]
கவிதன்
29/10/2004
[9.56 இரவு]
http://kavithan.yarl.net
<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kaathaliyin_kaditham-thumb.JPG' border='0' alt='user posted image'>
[u][size=18]<b>ஒரு கடிதம்</b>
[size=18]முத்தான உன் எழுத்துக்களால்
நீ.!
எனக்கு
முகவரி இட்டு அனுப்பிய
அஞ்சல் என் கைகளில்
தவழ்கின்றது.
பத்தும் பலதும்
பறைந்த
பாசமான உன் கடிதம்
பார்க்கும்
என் கண்களில்,
ஆனந்த கண்ணீர்.
மனதிலோ,
பொங்கும் மகிழ்ச்சி
மட்டுக்கடங்காது.
சொல்லில் அடங்காத
ஓர் பேரின்பத்தை
உன்
சிறிய
மடல் மூலம்
எனக்கு
நீ ஏற்படுத்தினாய்.
பக்கம் பக்கமாய்
நான் படிக்கும்
கவிதைகளில்
இல்லாத
ஒரு சுகத்தை
உன்
ஒரு பக்க
கடிதத்தில்
நீ தந்தாய்.
கட்டுக் கட்டாய்
நான் பாட்டியிடம்
கேட்ட
கட்டுக் கதைகளில்
கிடைத்த
மகிழ்ச்சியை விட
உன் கடிதத்தினால்
எனக்கு அதிக
இன்பத்தை
நீ ஊட்டினாய்
"கடுகு சிறிதானலும்
காரம் பெரிது"
ஆமாம்,
உன் கடிதம்
கடுகு தான்
ஆனால்,
நீ சொன்னவை
காரம் அல்ல
இனிப்பு.
ஆம், இனிப்பு
என் உமிழ்நீரில்
கரையவில்லை
என் மனதில்
கரைகிறது.
அழகாக,
அழகழகாக,
எழுத்துக்களை கோர்த்து
வரிவடிவம் தந்து
அஞ்சல் எழுதிய
அப்பேனாவுக்கு
ஒரு முத்தம்.
பேனாவை இயக்கிய
அவ்
அழகிய விரல்களுக்கு
ஒரு முத்தம்.
கருத்துக்களை
கோர்த்து
அழகாக தந்த
உன் மனதுக்கு
ஒரு முத்தம்.
எஞ்சிய முத்தங்கள்
எனக்காக
காத்திருக்கும்
உனக்கே
உனக்காக.
எனக்கொரு
முத்தம்
கிடைக்குமா செல்லம்?
[யாவும் கற்பனை]
கவிதன்
29/10/2004
[9.56 இரவு]
http://kavithan.yarl.net
[b][size=18]

