10-27-2004, 01:06 AM
அதுபோக இது கருத்துக்களம்... பத்திரிகையல்ல... வேண்டும் என்றால் அந்த ஆர்.துரைறட்னம் என்பவரே நேரில் வந்து இங்கு இவான் போன்றோருடன் பகிரங்கக் கருத்தாடலாம் அதற்கு கள நிர்வாகம் கள விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கும் என்றே எண்ணுகிறோம்...அதில் அவர்களுக்கு பிரச்சனை ஏதும் இருக்க வாய்ப்பில்லை....!
பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரத்தை பாவிக்கும் ஒரு பத்திரிகையாளர் ஒரு கருத்துக்களத்துக்கு இப்படியா அறிவுறுத்துவது... நேரில் வந்து களத்தில் கருத்துத் தெரிவிப்பதே அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை மாற்றுக் கருத்துகளுக்கு அப்பால் நிறுவ உதவி செய்யும்....! அச்சுறுத்தல்களோ பணிய வைக்க எண்ணுதல்களோ சகித்துக்கொள்ளக் கூடாதவை...அது பத்திரிகைத் தர்மத்தை மீறிகிறதோ இல்லையோ... தனி மனிதன் மனித சமூகத்தின் அடிப்படை நியாய வரம்புக்குள் நின்று கருத்தறியும் சுதந்திரத்தை கருத்து வெளியிடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவே அமையும்...!
பேச்சுச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரத்தை பாவிக்கும் ஒரு பத்திரிகையாளர் ஒரு கருத்துக்களத்துக்கு இப்படியா அறிவுறுத்துவது... நேரில் வந்து களத்தில் கருத்துத் தெரிவிப்பதே அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை மாற்றுக் கருத்துகளுக்கு அப்பால் நிறுவ உதவி செய்யும்....! அச்சுறுத்தல்களோ பணிய வைக்க எண்ணுதல்களோ சகித்துக்கொள்ளக் கூடாதவை...அது பத்திரிகைத் தர்மத்தை மீறிகிறதோ இல்லையோ... தனி மனிதன் மனித சமூகத்தின் அடிப்படை நியாய வரம்புக்குள் நின்று கருத்தறியும் சுதந்திரத்தை கருத்து வெளியிடும் சுதந்திரத்தைப் பறிப்பதாகவே அமையும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

