07-25-2003, 04:39 PM
கணனியில் பதிந்த கைகள் எழுதுகோலெடுத்தெழுத
பிணங்குகிறதெனப் பலரும் பகர்ந்தது கேட்டதுண்டு--
சுணக்கமாயிருந்தாலும் மனம்விட்டு வரும் கருவை
தணலிட்ட பொன்னாக மிளிரச்செய்ய ;வகையுண்டு
மைகொண்டு தாளில் வடித்தெடுத்து வாசித்து
மெய்தானோவெனச் சரிபார்த்து தவறகற்றி
கணனியில் ஏற்றிட்டால் செதுக்கிய சிற்பமென ஆக்கம் வரும் காலத்தாலழியாது நிற்கும்..
தலையெழுத்து தாறுமாறாய் போனதுபோல்..எந்தன்
கையெழுத்தும்;இடையிடையே தடம் புரள்வதுண்டு
ஆனாலும் அழகாயெழுத நினைத்திருந்தால் இப்போதும்
முத்துமுத்தாய் குண்டாய் முழுமையாய் வருவதுண்டு..
பிணங்குகிறதெனப் பலரும் பகர்ந்தது கேட்டதுண்டு--
சுணக்கமாயிருந்தாலும் மனம்விட்டு வரும் கருவை
தணலிட்ட பொன்னாக மிளிரச்செய்ய ;வகையுண்டு
மைகொண்டு தாளில் வடித்தெடுத்து வாசித்து
மெய்தானோவெனச் சரிபார்த்து தவறகற்றி
கணனியில் ஏற்றிட்டால் செதுக்கிய சிற்பமென ஆக்கம் வரும் காலத்தாலழியாது நிற்கும்..
தலையெழுத்து தாறுமாறாய் போனதுபோல்..எந்தன்
கையெழுத்தும்;இடையிடையே தடம் புரள்வதுண்டு
ஆனாலும் அழகாயெழுத நினைத்திருந்தால் இப்போதும்
முத்துமுத்தாய் குண்டாய் முழுமையாய் வருவதுண்டு..
-

