Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலையுதிர்ந்துபோகும் எம் வசந்தகாலங்கள்
#1
<b>இலையுதிர்ந்துபோகும்...
எம் வசந்தகாலங்கள்...! </b>


மனிதனைவிட
மரங்கள் மேலானது...!

கோபம்
பொறாமை
ஆணவம்
பழிவாங்கும் எண்ணம்
மூடநம்பிக்கை
இவை எதுவுமே
அவைகளுக்கு இல்லை...!

கொலைகள்
கொடுமைகள்
இரத்தம்
இவையெல்லாம்
மனிதனோடு போகட்டுமே
மரங்கள் என்னகுற்றம்
செய்தன...?

மரணம் வருமுன்பு
புன்னகைக்கும்
புற்றுநோய்க்கரன்போல...
இடம்பெயர்வதற்கு
இரண்டு நாள் முன்பு
©த்துக் குலுங்கியது..!

சுமைகளை
தோளிலும்
நெஞ்சிலும்
சுமந்துகொண்டு
ஊரைவிட்டு ஓடிவந்தோம்...!

அதை...
சுமந்துவர முடியாது
என்ன செய்வேன்...?

எதிரிகளுக்கு அது...
வெறும் மரம்...!
எனக்கு அது
மாறாத ரணம்...!

இப்போது...
இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!

<b>வே.த. தமிழீழதாசன்
24.10.2004 (பாரீஸ்)</b>
[size=18]<b> ...!
..!!!</b>
<b>-..</b>
Reply


Messages In This Thread
இலையுதிர்ந்துபோகும் எம் வசந்தகாலங்கள் - by V.T Tamileelathasan - 10-26-2004, 01:03 PM
[No subject] - by hari - 10-26-2004, 03:03 PM
[No subject] - by V.T Tamileelathasan - 10-26-2004, 03:29 PM
[No subject] - by shobana - 10-26-2004, 04:02 PM
[No subject] - by kuruvikal - 10-26-2004, 07:38 PM
[No subject] - by tamilini - 10-26-2004, 09:52 PM
[No subject] - by kavithan - 10-27-2004, 01:29 AM
[No subject] - by V.T Tamileelathasan - 10-27-2004, 11:00 AM
[No subject] - by shanmuhi - 10-27-2004, 08:30 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)