10-24-2004, 11:16 AM
Quote:"கருணாவின் பெயரில்" நடைபெறும் இக்கூட்டுக் கட்சி நாடகத்தில் "றோவினால்" திரட்டப்படும் துரோகக் கும்பல்கள் அணியில் "ஈ.பி.டி.பி", "ஈ.என்.டி.எல்.எப்", "வரதராசப் பெருமாளின் ஈ.பி.ஆர்.எல்.எப்", "சங்கர் ராஜியின் ஈரோஸ்" உடன் "கருணாவையும்" சேர்த்து ஒரு அமைப்பை உருவாக்குவதென்றும், ஆனால் தனித்தனி கட்சிகள் ஆக இயங்குவதாகவும்,, அப்போது தான் தமிழர்களில் பல கட்சிகள் "புலிகளுக்கு" எதிராக இருப்பதாக வெளியுலகத்திற்கு காட்டப்படலாமாம்.தமது உறுப்பினரின் கொலைக்கு கருணாவை சாடுகிறார்; சித்தார்த்தன்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இக்கும்பல்களின் கூட்டில் "புளொட்" சேர்த்துக் கொள்ளப்படவில்லையாம். அன்றிலிருந்து இன்றுவரை "இந்தியாவிற்கு" "புளொட்" மீது சந்தேகக் கண்தானாம். மற்றும் இக்கூட்டில் "ஈ.என்.டி.எல்.எப்" இணைக்கப்பட்டது "புளொட்" அமைப்பினருக்குப் பிடிக்கவில்லையாம். "புளொட்" அமைப்பானது வெகுவிரைவில் கடந்த காலங்களில் தேசிய நீரோட்டத்தில் இணைந்த இயக்கங்களைப் போல இணையலாமென ஒரு நம்பத்தகுந்த வட்டாரம் அறியத்தந்தது. இதற்கு சில சாதகமான சமிக்கைகளும் தெரியத்தான் செய்கின்றன. ..
1) யுத்த நிறுத்த காலத்திற்குப் பின் சில காலங்களாக நடைபெற்ற களையெடுப்புக்களில் எந்த ஒரு "புளுட்" உறுப்பினர் கூட தாக்கப்படவில்லை.
2) "புளொட்டின்" அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கடந்த காலங்களைப் போலல்லாது "விடுதலைப் புலிகள்" விடயத்தில் மிகமிக மென்மையான போக்கை கடைப்பிடிப்பதை பார்க்கக்கூடியதாகவுள்ளது.
3) புலப்பெயர் நாடுகளில் துரோகிகளினால் நடாத்தப்படும் "தேனீ", "மீன்பாடும்",.. பொஇஒன்ற இணையத்தளங்களில் "புளொட்" அமைப்பிற்கு எதிரான சில கருத்துக்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன்.
4) ........... இப்படிச் சில அறிகுறிகள் தெரிகின்றன. அப்படி இருக்கவும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் "புளொட்" உறுப்பினர்கள் இந்த அரசியல் நகர்வுகள் விளங்காமலோ அல்லது அதற்கு எதிராகவோ செயஏபடுவதை பார்க்கக் கூடியதாகவுள்ளது.
எது எப்படி இருப்பினும் தமிழ்த் தேசியத்திற்காக காலத்தின் தேவை உணர்ந்து "புளொட்" நீரோட்டத்தில் இணையுமாயின்,அதை ஒவ்வொரு ஈழத் தமிழ் மகனும் மகிழ்சியுடன் ஏற்றுக்கொள்வான்.
_________________
"நக்கிற நாய்களிருக்கும் மட்டும் செக்கு நினைக்குமாம் தான்தான் சிவலிங்கமென்று"
ஜ சனிக்கிழமைஇ 23 ஒக்ரேபர் 2004 ஸ ஜ முல்லை ஸ
கடந்த வருடகால யுத்த நிறுத்தத்தின்போது கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர்கள் திட்டமிட்டபடி கருணாவினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் புளொட் அமைப்பின் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் வானொலி ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் சித்தார்த்தன். புலிகள் எமது பிரநிதிகள் எவரையும் கொலை செய்யவில்லை என்றும் இரண்டு உறுப்பினர்கள் கடந்த இரண்டு வருடத்தில் கருணாவினால் மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்டதாகவும் இதனை புளொட் அமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் கண்டிப்பதாகவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் கொலைகள் அனைத்தையும் பல காலத்திற்கு முதலே நிறுத்தி விட்டதாகவும் புளொட் அமைப்புகள் சில உறுப்பினர்கள் இராணுவத்தின் ஒற்றர்களாக செயற்படுவதாகவும் இதனால் சில சிக்கல்களை புளொட் அமைப்பு எதிர் நோக்குவதாகவும் மேலும் தெரிவித்தார்.
யுத்த நிறுத்த காலத்தில் அதிகம் பாதிப்பிற்கு உட்படாத இயக்கம் புனொட் என்பது
" "

