10-21-2004, 12:45 AM
kuruvikal Wrote:எதையும் முட்டாள் தனம் என்று எடுத்த எடுப்பில் ஒதுக்கி வைக்காமல் கொஞ்சம் நவீன விஞ்ஞானம் கொண்டு விளங்கிப் பாருங்கள் பல அற்புதத்தன்மைகள் காண்பீர்கள்... இன்று அமெரிக்கா உருவாக்க மிணக்கடும் அன்ரி மிசைல்ஸ் சிஸ்டத்தை அன்றே இலக்கியங்களும் சமய யுத்தங்களும் விளக்கி உள்ளன... அதை விளங்கி விருத்தி செய்யாதது எங்கள் குறையே அன்றி சமயங்களினதோ அல்லது இலக்கியங்களினதோ அல்ல... அவை அவற்றின் காலத்தால் என்ன செய்ய முடிந்ததோ அதைச் செய்தே உள்ளனன... நாம் தாம் எம் காலத்துக்கென்று எதுவும் சாதிக்காமல்...மூதாதையோரை முட்டாள்கள் முட்டாள்கள் என்று கொண்டு நாம் முட்டாள்கள் ஆகிக் கொண்டிருக்கின்றோம்....!
மேற்குலகத்தினர் ஒரு ஓவியர் வரைந்த படத்தின் அடிப்படையில்தான் முதன் முதலில் கவச வாகனம் உருவாக்கினர்... நாம் ஓவியங்களைப் பார்த்து என்ன சொன்னோம்... வேலை மிணக்கட்டதுகள் விளையாடி இருக்குதுகள் என்று.... இப்படி நாம் பார்ப்பவற்றை ஆராய்வத்தில்லை...எடுத்த எடுப்பில் ஏதாவது சாட்டுச் சொல்லி எங்கள் இயலாமையை வெளிக்காட்டாது விடயங்கள் நிராகரித்து விட்டு மற்றவர்களின் வாயைப் பார்த்துக் கொண்டிருகின்றோம்...அதுதான் இன்றும் நீராவியில் புட்டுத்தான் அவிக்கின்றோமே தவிர அந்த வெப்ப சக்தியைக் கொண்டு இயந்திரங்கள் இயக்கவில்லை....!
அதையாராவது செய்து தந்தால் அனுபவித்துக் கொண்டு எங்கள வென்றவர்கள் யார் என்று வாய் வீரம் மட்டும் கதைத்துக் கொள்வோம்...!
இதில் இருந்து எங்கள் சமூகத்தை நினைந்து வருந்தத்தான் முடிகிறதே தவிர... வேறெதைச் செய்ய முடியும் தற்போதைக்கு...! :wink:
:roll: :roll: :roll: :roll: :roll: :roll:
மிகவும் சரியா சொல்லீட்டுது குருவியள் இனி என்ன பெழுது போகாட்டி நல்ல கவிதை கட்டுரைகள எழுதுங்கோ......
பி.கு:- சமய சம்பந்தமான கேள்விகளை பெழுது போக்கம்சமாக பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். இதில் எந்த தவறான அர்தமும் இல்லை ஆனால் சிற் சில் சந்தர்ப்பங்களில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு இது வழியமைக்கலாம்
-நேசமுடன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

