10-15-2004, 09:52 PM
ஒண்டு முடிஞ்சு இன்னொண்டு தொடங்கியிருக்கினம் போல இருக்கு!!!
அவர்களின் இணையம் ஒன்றில் தான் கீழ் உள்ள தகவலைக்கண்டேன்.
இணைய முகவரியை தர விரும்பவில்லை.
======================================================================
அவர்களின் இணையம் ஒன்றில் தான் கீழ் உள்ள தகவலைக்கண்டேன்.
இணைய முகவரியை தர விரும்பவில்லை.
======================================================================
Quote:திகதி:- 15-10-2004
தமிழ்ப் பேசும் மக்களுக்கு வணக்கம்,
அன்புடையீர்!
தமழீழ மக்களின் விடுதலையை வென்றெடுக்க எங்கள் இயக்கங்களான, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளும் (TMVP), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் (ENDLF) இணைந்து "தமிழீழ ஐக்கிய விடுதலை முன்னணி (TIVM)" என்ற குடை அமைப்பினை ஏற்படுத்தியுள்ளோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவை நிவர்த்தி செய்து தமிழ் மக்களின் உரிமைகள் மீட்டெடுக்க ஒன்றிணைந்து போராடுவது
இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
இருபது ஆண்டுகள் தமிழ் மக்கள் வேட்டையாடப்பட்டுள்ளனர். உயிர் தப்பினால் அதுவே சுதந்திரம் என்ற நிலை ஏற்பட்டு, அதுவே தமிழ் மக்களின் கொள்கையாக்கப்பட்டுவிட்டது. இழந்த உரிமையை மீட்கப்போய் எங்கள் இனம் கொடிய பயங்கரவாதியிடம் சிக்கிக்கொண்டுவிட்டது.
சுதந்திர வாழ்வென்பதே அமைதியும் சமாதானத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான். அதனை அடையத்தான் எங்கள் மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். சுதந்திரமாக, பாதுகாப்பாக, அமைதியாக, உரிமையுடன் வாழவேண்டும் என்பதே இனப்போராட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
மேற்சொன்னவற்றை இலங்கை அரசிடமிருந்து பெற்றாலும் பெறலாம் ஆனால், பிரபாகரனிடமிருந்து தமிழ் மக்களுக்கு இவை கிடைக்காது என்பது உறுதி. எனவே தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்;. அவற்றுக்கு முன்னோடியாக எங்கள் இயக்கங்கள் இணைந்து கூட்டு அமைப்பை ஏற்படுத்தி
யுள்ளன.
இரண்டு கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ள கூட்டறிக்கை இன்று (15-10-2004) வெளியிடப்படுகிறது. தமிழர்களது நிரந்தரத் தீர்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
இவ்வண்ணம்,
ஒருங்கிணைப்பாளர்,
பா.இராஜரெத்தினம்.

