07-23-2003, 06:53 PM
குடாநாட்டில் பாடசாலைகள் இரா ணுவ ஆக்கிரமிப்பு முகாம்களாகவும் இராணுவ அச்சுறுத்தல்களின் மத்தி யிலுமே இருக்கின்றன. இந்தப் பாட சாலைகளை மீள ஒப்படைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத சிறீலங்கா அரசின் எந்த ஓர் அமைச்சராக இருந் தாலும் புனரமைக்கப்பட்ட பாடசாலை களைக் கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்ள அருகதையற்றவர்கள்.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:-நேற்று காலை 11 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பாடசாலைகள் மீள் கையளித்தல் தொடர்பான நிகழ் வொன்று ஜேர்மன் தொழில்நுட்ப நிறு வனத்தினால் ஒழுங்கு செய்யப்பட் டது. மேற்படி நிறுவனத்தினால் புனரமைப்பு செய்யப்பட்ட பாட சாலைகள் ஏற்கனவே உரிய அதிபர்களிடம் பல மாதங்களிற்கு முன்னர் உத்தியோகபுூர்வமாக கையளிக்கப்பட்டது. ஆனால், மீண்டும் இந்நிகழ் வோடு எந்த வகையிலும் தொடர்புபட்டிராத சிறீலங்கா அரசின் புனர்வாழ்வு அமைச்சரினால் நேற்று மீண்டும் வைபவாPதியாக கையளிக்கப்பட இருந்தது.யாழ்.குடாநாட்டில் இன்று பாட சாலைகள் இராணுவ ஆக்கிரமிப்பு முகாம்களாகவும் இராணுவ அச்சு றுத்தல்களின் மத்தியிலுமே இருக்கிறது. இப்பாடசாலைகளை மீள ஒப் படைக்க எதுவித நடவடிக்கையும் எடுக்காத சிறீலங்கா அரசின் எந்த அமைச்சர்களாக இருந்தாலும் இவ்வாறான ஒரு வைபவத்தில் கலந்து கொள்ள அருகதையற்றவர்கள். இதனாலேயே இந்நிகழ்விற்கு வருகை தந்த அமைச் சரை கலந்துகொள்ளவேண்டாம் என பல்கலைக்கழக மாணவர்களும் பொதுமக்களும் திருப்பி அனுப்பிவிட்டு, இந்நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தினரை சகல மரியாதைக ளோடு மட்டுமல்லாது எமது மாணவர்களும் மக்களும் அழைத்துச் சென்று இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு சில மணி நேரங்களின்பின் மீண்டும் இந் நிகழ்வை அரசியல் இலாபம் தேட முயற்சித்தவர்கள் அமைச்சரை மீண் டும் அழைத்து யாழ்.பல்கலைக்கழக வளாக வாயிலில் வைத்து மாலை அணிவித்து பாடசாலைகளை மீண் டும் இரண்டாவது தடவையாக அதிபர் களிடம்கையளிக்க முயற்சித்தவேளை மாணவர்களும் மக்களும் மீண்டும் அமைச்சரை உரிய மரியாதையோடு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட தற்கிணங்க அமைச்சர் திரும்பிச் சென்றார்.அத்தோடு, நிகழ்வு பல்கலைக் கழகத்தில் தொடர்ந்து மேற்கொண்டு நடத்தப்படுவதற்கு மாணவர்கள் அனுமதி வழங்கவில்லை. இந்நிகழ்வை ஒழுங்கு செய்தவர்கள் இந்நிகழ்வை நடத்துவதில் எமக்கு எதுவித ஆட் சேபனையுமே இல்லை. இதனால்தான் அவர்கள் இந்நிகழ்வை நடத்த அனு மதித்தோம். ஆனால், அவர்கள் எமது மாணவர்களை ஏமாற்றிவிட்டு மீண் டும் நிகழ்வை அமைச்சரை அழைத்து நடத்த முயற்சித்தமை எமக்கு மிகவும் ஆத்திரமூட்டும் செயலாகவே இருந் தது. அதனாலேயே நாம் இந்நிகழ்வை பல்கலைக்கழகத்தில் நடத்தவிடாது இடைநிறுத்தியுள்ளோம். - என உள்ளது.

