10-14-2004, 01:37 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/52/30052_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<b>
வார்த்தைகளால் பேசிட.....!</b>
உனக்கு உறவாகி
உன் கரம் பற்றிய பின்
உலகமே சிறிதாய் எனக்கு...
எட்ட நின்று உன்னை
கடக்கண்ணால் பார்த்த காலம்..
கொஞ்சம் சுகம் தான்...
இன்று கண்ணாக உனை எண்ணி
வாழ்வது அதைவிட சுகம் தான்..!
ஆவலாய் உன்னை பார்க்க வந்து..
உன்னை கண்டபின் பல பொய் சொல்லி..
அப்பப்பா நான் பட்ட பாடு
சொல்லில் அடங்காது...
பாவி நீ என்னை அறிந்தும்..
பாரா முகமாய் நீ இருந்து
எத்தனை நாள் என் மனதிடம்
ரகசியமாய் அடிவாங்கியிருப்பாய்..
காதல் மனம் அன்பினால் திட்டிவிட்டு
அடுத்தகணம் உன்னை
எண்ணி ரசித்திருக்கும்...
மலைபோல் மனங்களில்
காதல் இருந்தும்
அதைவிட மேலாய் அன்பிருந்தும்..
அதை சொல்லிட முடியாமல்
சின்ன மனங்கள் இரண்டும்
பட்ட பாடு கொஞ்சமா...??
காலம் கை கூடி..
காதல் கனிந்து..
இன்று
எனக்கு நீ உனக்கு
நான் என ஆச்சு..
நாணம் விடுத்து வெட்கம் விளக்கி..
நான் உன்னுடன் பேசும்
நாள் இன்னும் வரவில்லை..
இன்னும் உன் முகத்தை ஒரு
முறை என் கண்களால்
பார்த்திட துடிக்கிறேன் முடியவில்லை...
கால்கள் தான் அழகழகான
கோலம் போடுகின்றன....
அதை நீயும் புரிந்து கொள்கிறாய்..
கோலங்களால் பேசியதை
வார்த்தையால் பேசும்
நாளுக்காய் காத்திருக்கிறேன்..!
யாவும் கற்பனை
<b>
வார்த்தைகளால் பேசிட.....!</b>
உனக்கு உறவாகி
உன் கரம் பற்றிய பின்
உலகமே சிறிதாய் எனக்கு...
எட்ட நின்று உன்னை
கடக்கண்ணால் பார்த்த காலம்..
கொஞ்சம் சுகம் தான்...
இன்று கண்ணாக உனை எண்ணி
வாழ்வது அதைவிட சுகம் தான்..!
ஆவலாய் உன்னை பார்க்க வந்து..
உன்னை கண்டபின் பல பொய் சொல்லி..
அப்பப்பா நான் பட்ட பாடு
சொல்லில் அடங்காது...
பாவி நீ என்னை அறிந்தும்..
பாரா முகமாய் நீ இருந்து
எத்தனை நாள் என் மனதிடம்
ரகசியமாய் அடிவாங்கியிருப்பாய்..
காதல் மனம் அன்பினால் திட்டிவிட்டு
அடுத்தகணம் உன்னை
எண்ணி ரசித்திருக்கும்...
மலைபோல் மனங்களில்
காதல் இருந்தும்
அதைவிட மேலாய் அன்பிருந்தும்..
அதை சொல்லிட முடியாமல்
சின்ன மனங்கள் இரண்டும்
பட்ட பாடு கொஞ்சமா...??
காலம் கை கூடி..
காதல் கனிந்து..
இன்று
எனக்கு நீ உனக்கு
நான் என ஆச்சு..
நாணம் விடுத்து வெட்கம் விளக்கி..
நான் உன்னுடன் பேசும்
நாள் இன்னும் வரவில்லை..
இன்னும் உன் முகத்தை ஒரு
முறை என் கண்களால்
பார்த்திட துடிக்கிறேன் முடியவில்லை...
கால்கள் தான் அழகழகான
கோலம் போடுகின்றன....
அதை நீயும் புரிந்து கொள்கிறாய்..
கோலங்களால் பேசியதை
வார்த்தையால் பேசும்
நாளுக்காய் காத்திருக்கிறேன்..!
யாவும் கற்பனை
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

