10-08-2004, 07:42 PM
நண்பன் அஜீவன்,
இப்படியொரு செய்தியை அறிந்ததும் வேலைத் தளத்திலிருந்தே இம்மடலை எழுதுகிறேன்.
தங்களுடன் எமக்கு ஏற்பட்ட தொடர்பு, தங்களது குறும்படப் படைப்புகளின் வாயினால்தான். தங்களது திறமையைக் கௌரவிக்குமுகமாக சென்ற ஆண்டு பாhPல் தங்களுக்கான குறும்படமாலை ஒன்றை நிகழ்த்தி, நினைவுப் பரிசு 'சலனம்' சார்பாக வழங்கிக் கௌரவித்திருந்தோம்.
புகலிடக் குறும்பட, தமிழ்த்திரை முயற்சியில் தங்களால் தனித்துவமான தடம் பதிக்கமுடியும் என்பதை நாங்கள் நன்கறிவோம்.
தாங்கள் காப்பற்றப்பட்ட தகவல் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. அழிவுறும் பொருட் சேதங்கள் பற்றிய கவலைகள் வேண்டாம். ஈழத்தமிழன் அழிவிலிருந்தே மீண்டெழுபவன். தாங்கள் இப்போது தீயினால் புடமிடப்பட்டுள்ளீர்கள். புத்தெழுச்சியுடன் எழுக!
நண்பா படைப்புகளால் ஈழத்தழினின் புகலிட இருப்பை தொடர்ந்தும் காத்திரமாகப் பதிவு செய்யுங்கள்.
என்றென்றும் உற்சாகத்துடனும், செயலு}க்கத்துடன் அஜீவன் வாழ இனிய வாழ்த்துகள்.
-முகிலன், அருந்தா, இளவேனில், இலக்கியன்.
இப்படியொரு செய்தியை அறிந்ததும் வேலைத் தளத்திலிருந்தே இம்மடலை எழுதுகிறேன்.
தங்களுடன் எமக்கு ஏற்பட்ட தொடர்பு, தங்களது குறும்படப் படைப்புகளின் வாயினால்தான். தங்களது திறமையைக் கௌரவிக்குமுகமாக சென்ற ஆண்டு பாhPல் தங்களுக்கான குறும்படமாலை ஒன்றை நிகழ்த்தி, நினைவுப் பரிசு 'சலனம்' சார்பாக வழங்கிக் கௌரவித்திருந்தோம்.
புகலிடக் குறும்பட, தமிழ்த்திரை முயற்சியில் தங்களால் தனித்துவமான தடம் பதிக்கமுடியும் என்பதை நாங்கள் நன்கறிவோம்.
தாங்கள் காப்பற்றப்பட்ட தகவல் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. அழிவுறும் பொருட் சேதங்கள் பற்றிய கவலைகள் வேண்டாம். ஈழத்தமிழன் அழிவிலிருந்தே மீண்டெழுபவன். தாங்கள் இப்போது தீயினால் புடமிடப்பட்டுள்ளீர்கள். புத்தெழுச்சியுடன் எழுக!
நண்பா படைப்புகளால் ஈழத்தழினின் புகலிட இருப்பை தொடர்ந்தும் காத்திரமாகப் பதிவு செய்யுங்கள்.
என்றென்றும் உற்சாகத்துடனும், செயலு}க்கத்துடன் அஜீவன் வாழ இனிய வாழ்த்துகள்.
-முகிலன், அருந்தா, இளவேனில், இலக்கியன்.

