10-01-2004, 05:06 PM
தமிழ்த்தேசியப்படைக்கு மட்டக்களப்பு கிரான் பகுதியில் ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. கருணாவின் பெயரில் இலங்கை அரச உளவுப்பிரிவினரால் உருவாக்கப்பட்ட இந்தக் கும்பலுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக சுமார் பத்தாயிரம் ருபாய் கொடுப்பனவாக வழங்கப்பட இருப்பதாகவும் இந்த ஆயுதக் கும்பலில் இணைபவர்களுக்கு முற்பணமாக இலங்கை அரச இராணுவ உளவுப்பிரிவினர் 6000 ஆயிரம் ரூபாய்களை முற்பணமாகக் கொடுத்து வருவதாகவும் தெரியவருகிறது.
பல இளைஞர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் முகவர்கள் பலரும் ஈடுபட்டு வருவதாகவும் கருணாவின் சொந்தக் கிராமமான கிரான் பகுதியில் இதற்குப் பலத்த எதிர்ப்பு உருவாகி உள்ளதாகவும் தெரியவருவதுடன் வறிய குடும்பத்தைச் சேர்ந்த எதுவும் அறியாத ஒரு சில இளைஞர்கள் இதற்குப் பலியாகும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக அனைவரும் அவதானமாகவும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் என கிரான் பிரதேசத்தமிழ்த்தேசிய நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் அரச படைகளில் தனி தமிழ் படைப்பிரிவாக மாற்றப்பட இருப்பதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பல இளைஞர்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் முகவர்கள் பலரும் ஈடுபட்டு வருவதாகவும் கருணாவின் சொந்தக் கிராமமான கிரான் பகுதியில் இதற்குப் பலத்த எதிர்ப்பு உருவாகி உள்ளதாகவும் தெரியவருவதுடன் வறிய குடும்பத்தைச் சேர்ந்த எதுவும் அறியாத ஒரு சில இளைஞர்கள் இதற்குப் பலியாகும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக அனைவரும் அவதானமாகவும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும் என கிரான் பிரதேசத்தமிழ்த்தேசிய நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் அரச படைகளில் தனி தமிழ் படைப்பிரிவாக மாற்றப்பட இருப்பதாக அரச உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

