09-25-2004, 10:28 PM
<b>ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர் சிங்கம் கொலைக்கு தம்மிக்க அமரசிங்க பொறுப்பு </b>
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் இராணுவத் துணைப்படையான ஈ.பி.டி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் பிரபல வெளிநாட்டு பண உண்டியல் முகவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேனிவந்த சிங்கம் அண்மையில் யாழ் குடாநாட்டில் புதிய காரியாலயம் ஒன்றை நிறுவ ஏற்பாடுகள் செய்து வந்தவர். இவருடைய கொலை தொடர்பாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினராக கடமையாற்றியவர். ஆக்கால கட்டத்தில் பலரிடம் அரச வேலை பெற்றுத்தருவதாக பல இலட்சம் முற்பணமாக பெற்று ஏமாற்றியுள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் கந்தவேலு குலெந்திரன் (00447941094520) என்பவருடைய சகோதரிக்கு ( கலைவானி ) வெளிநாட்டு அமைச்சில் வேலை பெற்றுத்தருவதாக சுமார் 30 இலட்சம் முற்பணமாக பெற்றுள்ளார்.
இந்த பணத்தில் விகாரை லேனில் உள்ள வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். 1999 ம் ஆண்டு பெற்றுக்கொண்ட பணத்திற்கு இதுவரை பதில் இல்லாத நிலையில் இவரை கொலை செய்வதற்காக பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்த தம்மிக்க அமரசிங்க (தம்மிக்க அமரசிங்க நீதிமன்ற வளாகத்தினுள்ளே சுட்டுக்கொல்லப்பட்டார்) என்பவரின் சகாவான குறே சமிந்த என்பவரை நாடி 10 இலட்சம் பணத்திற்கு இவரை கொலை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவரின் கொலைக்கு இவரால் ஏமாற்றப்பட்ட பலர் உதவி செய்துள்ளதுடன் தரகராக பிரபல வர்த்தகர் பொறுப்பு எடுத்துள்ளார் சம்பவ தினத்தன்று ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்தவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
இவர்களால் பொரளையில் தமிழ் இளைஞர் ஓருவரும் பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் மூவரும் மருதானையில் தனியார் பேருந்து சாரதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இக்கொலைகள் குறித்த இனம் தெரியாத நபர்கள் எனவும் புலிகள் எனவும் சந்தேகங்களை தமிழ் ஊடகங்களால் வெளியிடுகின்றமை கவலை தருவதாக சம்பவத்துடன் தொடர்பு உடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
nitharsanam.com
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு - வெள்ளவத்தையில் இராணுவத் துணைப்படையான ஈ.பி.டி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினரான சிங்கம் எனப்படும் பிரபல வெளிநாட்டு பண உண்டியல் முகவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாப்புப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்தவர். இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளை பேனிவந்த சிங்கம் அண்மையில் யாழ் குடாநாட்டில் புதிய காரியாலயம் ஒன்றை நிறுவ ஏற்பாடுகள் செய்து வந்தவர். இவருடைய கொலை தொடர்பாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினராக கடமையாற்றியவர். ஆக்கால கட்டத்தில் பலரிடம் அரச வேலை பெற்றுத்தருவதாக பல இலட்சம் முற்பணமாக பெற்று ஏமாற்றியுள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் கந்தவேலு குலெந்திரன் (00447941094520) என்பவருடைய சகோதரிக்கு ( கலைவானி ) வெளிநாட்டு அமைச்சில் வேலை பெற்றுத்தருவதாக சுமார் 30 இலட்சம் முற்பணமாக பெற்றுள்ளார்.
இந்த பணத்தில் விகாரை லேனில் உள்ள வீடு ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். 1999 ம் ஆண்டு பெற்றுக்கொண்ட பணத்திற்கு இதுவரை பதில் இல்லாத நிலையில் இவரை கொலை செய்வதற்காக பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்த தம்மிக்க அமரசிங்க (தம்மிக்க அமரசிங்க நீதிமன்ற வளாகத்தினுள்ளே சுட்டுக்கொல்லப்பட்டார்) என்பவரின் சகாவான குறே சமிந்த என்பவரை நாடி 10 இலட்சம் பணத்திற்கு இவரை கொலை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவரின் கொலைக்கு இவரால் ஏமாற்றப்பட்ட பலர் உதவி செய்துள்ளதுடன் தரகராக பிரபல வர்த்தகர் பொறுப்பு எடுத்துள்ளார் சம்பவ தினத்தன்று ஈ.பி.டி.பி. அலுவலகத்திலிருந்து காரில் விகாரை லேனில் உள்ள தனது வீட்டிற்கு வழமை போல் வந்திறங்கிய சமயம் எதிர்கொண்ட பாதாள உலகக் கோஸ்டியைச் சேர்ந்தவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
இவர்களால் பொரளையில் தமிழ் இளைஞர் ஓருவரும் பலப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அருகில் மூவரும் மருதானையில் தனியார் பேருந்து சாரதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இக்கொலைகள் குறித்த இனம் தெரியாத நபர்கள் எனவும் புலிகள் எனவும் சந்தேகங்களை தமிழ் ஊடகங்களால் வெளியிடுகின்றமை கவலை தருவதாக சம்பவத்துடன் தொடர்பு உடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

