09-23-2004, 01:41 PM
Quote:தாயகத்து நாய்கள் எல்லாம்
செல்ல பிராணி கேட்கவிலையே....
நாய்க்கு நாய் எப்படி செல்லபிராணி ஆகும்..?
நாய்க்கு மனிதன் தானே செல்லபிராணி என்றாயே.!
அவர்களை எல்லாம் கண்டவன் தான் நான்...
அடித்து பிடித்து கடித்து சாப்பிடுவார்களே..!
அவர்கள் தானே..!
மோப்பம் பிடித்து குண்டு பிடிப்பார்களே
சொறி "கண்டு பிடிப்பார்களே"
அவர்கள் தானே..!
இப்படி எத்தனை உங்கள் இனத்தவரை பாத்திருப்போம்.
செல்ல பிராணிவேண்டும் என்று சொல்லி விட்டு
உங்கள் இனத்தவரின்
பழைய கதை சொல்லி என்னை ஏமாத்தப் பாக்கிறாய்
பயப்படுத்துகிறாய்..!
எல்லாம் அந்த ஓசி சோறு போடவேண்டும் என்று தானே.
பார்..! மனிதன் போல் வாழ வேண்டும் என்று கதைத்தவுடனே
நீ மனிதன் குணம் பெற்றாய்..!
மனிதனாக வாழும் நான் எத்தனை பாடு படுவேன்....
சொல்லு பார்ப்போம்
மானிடனே.. எம்மவர்கள் அங்கே..
இயங்க முடியாமல் இருக்கிறார்கள்..
நாம் எஜமானாய் வந்த பின்..
முதல் செய்வது அவர்களை
எமமைப்போல் மாற்றுவது...
மானிடரை செல்ல பிராணியாக்கி
நாம் கற்பிக்க வேண்டும் பல பாடங்கள் அவர்க்கு..
ஓசி சோறா நாம் சாப்பிடுகிறோம் சற்று சந்தி..
உனக்கு காவலாளியாய்..
உனக்கு செல்லபிராணியாய்..
உன் பிள்ளைக்கு விளையாட்டு பொருளாய்..
சம்பளமில்லாமல் வேலை வாங்குகிறாய்..
இதில் போடுவது சோறு மட்டும் ...
அளப்பது பெரிய கதை..
மனிதனாக வாழ என்ன கஸ்டம் வந்தது உனக்கு..
நீ எப்படி மனிதனோ அதே போல்
மற்றவனை மதி.. கஸ்டம் என்பது
உன்னை கிட்டவும் நெருங்காது...
உன்னை விட அறிவு குறைந்த நான்..
உனக்கு சொல்லும் முதல் பாடம் இது தான்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

