09-23-2004, 01:08 PM
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவின் சகோதரன் ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவனேசதுரை உட்பட 3 பேர் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் அதிரடி நடவடிக்கையொன்றின் போது கொல்லப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் இவர்கள் மீது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஏனைய இருவர் துமிலன் மற்றும் எழிலன் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இப்படியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினரால் ஊடகங்களுக்கு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவனேசதுரை கருணாவின் மூத்த சகோதரன், இவர் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த தனது சகோதரன் கருணா நீக்கப்பட்டதையடுத்து அவருடன் இணைந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் பிரதித் தளபதிகளில் ஒருவராக செயல்பட்ட இவர், தமிழ் தேசியப் படை என்ற பெயரில் இராணுவ துனைப்படையாக செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் மீது அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் சம்பவங்கள் இவரது வழிநடத்தலிலே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி புதினம்
மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் இவர்கள் மீது விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஏனைய இருவர் துமிலன் மற்றும் எழிலன் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இப்படியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினரால் ஊடகங்களுக்கு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவனேசதுரை கருணாவின் மூத்த சகோதரன், இவர் ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த தனது சகோதரன் கருணா நீக்கப்பட்டதையடுத்து அவருடன் இணைந்து கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் பிரதித் தளபதிகளில் ஒருவராக செயல்பட்ட இவர், தமிழ் தேசியப் படை என்ற பெயரில் இராணுவ துனைப்படையாக செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகள் மீது அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் சம்பவங்கள் இவரது வழிநடத்தலிலே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி புதினம்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>

