09-21-2004, 05:03 PM
<span style='color:red'><b>செல்லமே </b>
another view
'கதையில் ஒன்னுமில்லை: படத்துல என்னவோ இருக்குப்பா' என்று சொல்ல வைக்கும் படம் 'செல்லமே'.
தொழிலதிபர் கிரிஷ் கர்னட்டின் மகன் பரத். பரத் ஆறுமாத குழந்தையாக இருக்கும்போது ரீமா சென்னுக்கு வயது ஆறு. குழந்தை பருவத்திலேயே தாயை இழக்கும் பரத்துக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் ரீமாதான் எல்லாமும்.
வாலிப பருவம் வந்த பிறகும் பரத்-ரீமாவின் உறவு வளர்கிறது. இந்நிலையில் இன்கம் டாக்ஸ் அதிகாரியான விஷால், ஒரு முறை கிரிஸ்கர்னட் வீட்டிற்கு சோதனை போட போக அங்கு ரீமாவை பார்த்து சொக்கிப் போகிறார். அப்புறமென்ன கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்று மேட்டர் வளர்ந்து கடைசியில் கல்யாணம் வரை போகிறது.
கல்யாணம் முடிந்து இனிக்க இனிக்க இல்லறம் நடத்தும் இவர்களது வாழ்க்கையில் பரத் மூலம் திடீரென இடி விழுகிறது.
சின்ன வயசிலிருந்தே தன்னுடன் இருந்த ரீமா, திடீரென திருமணமாகி பிரிவதை தாங்கிக்கொள்ள முடியாத பரத்தின் மனசுக்குள் வக்கிரம் தொற்றிக்கொள்ள, சமயம் பார்த்து ரீமாவை கடத்தி, "இனி உனக்கு எல்லாமே நான்தான்" என்று சொல்ல கதையில் சூடு பறக்க ஆரம்பிக்கிறது. அப்புறமென்ன ஆகிறது என்று ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.
என்னடா இது.. எங்கேயோ கேட்ட கதையாக இருக்கிறதே என்று யோசனை செய்கிறீர்களா!? கரெக்ட். 'குணா', 'காதல் கொண்டேன்' படங்களின் உல்டாதான் இது. என்றாலும் உல்டாவை உருப்படியாக சொன்ன விதமும் திரைக்கதை பின்னலும் 'புதுசு கண்ணா புதுசு' ரகம்.
நாயகனாக வரும் விஷால் ரொம்பவே சாதாரணமாக இருக்கிறார். நானும் ஸ்டைலு காட்டுகிறேன் பேர்வழி என்று ஓவர் ஆக்டிங் பண்ணாமல் அடக்கி வாசித்திருப்பது சால சிறந்ததாக உள்ளது. அதே சமயம் ஒரு ரவுண்ட் வருவார்; சதுரம் வருவார் என்றெல்லாம் எந்த உறுதியும் கொடுக்க முடியாது.
அட ரீமாவா இது... என்று ஆச்சர்யப்படுமளவிற்கு மூட்டை கட்டி வைத்திருந்த நடிப்பு திறமையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். கடைசியில் சொன்ன வார்த்தை கவர்ச்சிக்கும் பொருந்தும்படியாக, 'ஆடி' முடிந்தும் கூட ரீமாவின் க்ளாமரில் தாராள தள்ளுபடிகள். மூர்க்க குணத்துடன் தன்னிடம் நடந்துகொள்ளும் பரத்திடம் ஆத்திரம் காட்டுவதா, அன்பு காட்டுவதா என்ற தனது தடுமாற்றத்தை முகபாவனைகளால் வெளிப்படுத்தும் காட்சியில் பேஷ்... பேஷ்!
நெகட்டிவ் ஹீரோ ரோல் என்றால் பரத் சும்மா புகுந்து விளையாடுவார் போல் தோன்றுகிறது. மிக்ஸிக்குள் லவ் பேர்ட்ஸை போட்டு மூடி, ரீமாவிடம் 'உன் புருஷன் இங்க வந்தான்னா இதோ இந்தமாதிரி சட்னி ஆகிடுவான்' என்று மிரட்டும்போதும், சிரித்துக்கொண்டே வில்லங்கம் செய்யும்போதும் 'குட்டி ரகுவரன்' என்று சொல்லவைக்கிறார் பரத். கீப் இட் அப்!
சீரியஸான கதைக்கிடையில் விவேக்கின் காமெடி ரிலாக்ஸ். மும்தாஜிடம் விசாரணை செய்யும் காட்சியில் குபீர் சிரிப்பு. பானுப்ரியா ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு மாயமாகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வைரமுத்துவின் 'ஆரிய உதடுகள் உன்னது.. திராவிட உதடுகள் என்னது..' பாடல் வரிகளில் புதுக்கவிதை பூத்துக்குலுங்குகிறது.
பாடலில் வைரமுத்து என்றால் ஒளிப்பதிவில் கவிதை வடித்திருக்கிறார் கே.பி. ஆனந்த். குறிப்பாக கோவா காட்சிகள் கண்கள் பார்த்து ரசிக்கும் கவிதை.
'கதை ஓல்டு, திரைக்கதை கோல்டு' என்கிற ரீதியில் எடுத்துக்கொண்ட விஷயத்தை, இளமை புதுமையாக சொல்லியிருப்பதால் இயக்குனர் காந்தி கிருஷ்ணாவை பாராட்டலாம்.
thanks:cinesouth
<b>'செல்லமே' கொஞ்சலாம்.</b> </span>
another view
'கதையில் ஒன்னுமில்லை: படத்துல என்னவோ இருக்குப்பா' என்று சொல்ல வைக்கும் படம் 'செல்லமே'.
தொழிலதிபர் கிரிஷ் கர்னட்டின் மகன் பரத். பரத் ஆறுமாத குழந்தையாக இருக்கும்போது ரீமா சென்னுக்கு வயது ஆறு. குழந்தை பருவத்திலேயே தாயை இழக்கும் பரத்துக்கு பக்கத்து வீட்டிலிருக்கும் ரீமாதான் எல்லாமும்.
வாலிப பருவம் வந்த பிறகும் பரத்-ரீமாவின் உறவு வளர்கிறது. இந்நிலையில் இன்கம் டாக்ஸ் அதிகாரியான விஷால், ஒரு முறை கிரிஸ்கர்னட் வீட்டிற்கு சோதனை போட போக அங்கு ரீமாவை பார்த்து சொக்கிப் போகிறார். அப்புறமென்ன கொஞ்சம் காதல், கொஞ்சம் மோதல் என்று மேட்டர் வளர்ந்து கடைசியில் கல்யாணம் வரை போகிறது.
கல்யாணம் முடிந்து இனிக்க இனிக்க இல்லறம் நடத்தும் இவர்களது வாழ்க்கையில் பரத் மூலம் திடீரென இடி விழுகிறது.
சின்ன வயசிலிருந்தே தன்னுடன் இருந்த ரீமா, திடீரென திருமணமாகி பிரிவதை தாங்கிக்கொள்ள முடியாத பரத்தின் மனசுக்குள் வக்கிரம் தொற்றிக்கொள்ள, சமயம் பார்த்து ரீமாவை கடத்தி, "இனி உனக்கு எல்லாமே நான்தான்" என்று சொல்ல கதையில் சூடு பறக்க ஆரம்பிக்கிறது. அப்புறமென்ன ஆகிறது என்று ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுக்கு க்ளைமாக்ஸில் கிடைக்கிறது விடை.
என்னடா இது.. எங்கேயோ கேட்ட கதையாக இருக்கிறதே என்று யோசனை செய்கிறீர்களா!? கரெக்ட். 'குணா', 'காதல் கொண்டேன்' படங்களின் உல்டாதான் இது. என்றாலும் உல்டாவை உருப்படியாக சொன்ன விதமும் திரைக்கதை பின்னலும் 'புதுசு கண்ணா புதுசு' ரகம்.
நாயகனாக வரும் விஷால் ரொம்பவே சாதாரணமாக இருக்கிறார். நானும் ஸ்டைலு காட்டுகிறேன் பேர்வழி என்று ஓவர் ஆக்டிங் பண்ணாமல் அடக்கி வாசித்திருப்பது சால சிறந்ததாக உள்ளது. அதே சமயம் ஒரு ரவுண்ட் வருவார்; சதுரம் வருவார் என்றெல்லாம் எந்த உறுதியும் கொடுக்க முடியாது.
அட ரீமாவா இது... என்று ஆச்சர்யப்படுமளவிற்கு மூட்டை கட்டி வைத்திருந்த நடிப்பு திறமையை அவிழ்த்துவிட்டிருக்கிறார். கடைசியில் சொன்ன வார்த்தை கவர்ச்சிக்கும் பொருந்தும்படியாக, 'ஆடி' முடிந்தும் கூட ரீமாவின் க்ளாமரில் தாராள தள்ளுபடிகள். மூர்க்க குணத்துடன் தன்னிடம் நடந்துகொள்ளும் பரத்திடம் ஆத்திரம் காட்டுவதா, அன்பு காட்டுவதா என்ற தனது தடுமாற்றத்தை முகபாவனைகளால் வெளிப்படுத்தும் காட்சியில் பேஷ்... பேஷ்!
நெகட்டிவ் ஹீரோ ரோல் என்றால் பரத் சும்மா புகுந்து விளையாடுவார் போல் தோன்றுகிறது. மிக்ஸிக்குள் லவ் பேர்ட்ஸை போட்டு மூடி, ரீமாவிடம் 'உன் புருஷன் இங்க வந்தான்னா இதோ இந்தமாதிரி சட்னி ஆகிடுவான்' என்று மிரட்டும்போதும், சிரித்துக்கொண்டே வில்லங்கம் செய்யும்போதும் 'குட்டி ரகுவரன்' என்று சொல்லவைக்கிறார் பரத். கீப் இட் அப்!
சீரியஸான கதைக்கிடையில் விவேக்கின் காமெடி ரிலாக்ஸ். மும்தாஜிடம் விசாரணை செய்யும் காட்சியில் குபீர் சிரிப்பு. பானுப்ரியா ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு மாயமாகிறார்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வைரமுத்துவின் 'ஆரிய உதடுகள் உன்னது.. திராவிட உதடுகள் என்னது..' பாடல் வரிகளில் புதுக்கவிதை பூத்துக்குலுங்குகிறது.
பாடலில் வைரமுத்து என்றால் ஒளிப்பதிவில் கவிதை வடித்திருக்கிறார் கே.பி. ஆனந்த். குறிப்பாக கோவா காட்சிகள் கண்கள் பார்த்து ரசிக்கும் கவிதை.
'கதை ஓல்டு, திரைக்கதை கோல்டு' என்கிற ரீதியில் எடுத்துக்கொண்ட விஷயத்தை, இளமை புதுமையாக சொல்லியிருப்பதால் இயக்குனர் காந்தி கிருஷ்ணாவை பாராட்டலாம்.
thanks:cinesouth
<b>'செல்லமே' கொஞ்சலாம்.</b> </span>

