Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உயிர் உள்ளவரை தொடரும்........!
#1
<img src='http://www.yarl.com/forum/files/face_lumi.jpg' border='0' alt='user posted image'>

எங்கேயும் எப்போதும் இருவருமாய்..
சிறகு முளைத்த பறவைகளாய்
சிரிப்புடனே நாங்கள்...
தோழிக்கு இலக்கணம்..
இலக்கியங்களில் காணவில்லை..
தோழி நீ இலக்கணம்
என் தோழமைக்கு...

உருவான கருவறை வேறானாலும்
உண்டதும் உறங்கியதும் ஒன்றாக..
உணர்வுகளும் ஒன்றாகிட..
துன்பங்கள் சில வேளை தொடர்ந்ததுண்டு..
நட்பெணும் கால்கள் கொண்டு
துச்சமாய் நாம் மிதித்ததுண்டு...

நினைவுகளில் கலந்திட்ட
சுவையான சுகமான கணங்கள்
நிக்கமற நெஞ்சங்களில் நினைவாக..
விடியலுக்காய் காத்திருக்கும்
என் இரவுகள்
நாளைப் பொழுதை
நண்பி உன்னுடன் கழித்திட...
மகிழ்வுடன் நாம் ஒவ்வொரு நிமிடமும்...

தொடர்புகளே இல்லாமல்
தொடர்ந்த நம் தோழமை..
தொடர் கதையாய்...
உருவங்கள் மறைந்த நிலையிலும்..
உணர்வுகளின் உதவியுடன்..
உயிர் உள்ளவரை தொடரும்........!
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Messages In This Thread
உயிர் உள்ளவரை தொடரும - by tamilini - 09-19-2004, 05:20 PM
[No subject] - by kavithan - 09-19-2004, 05:24 PM
[No subject] - by tamilini - 09-20-2004, 11:36 AM
[No subject] - by shanmuhi - 09-20-2004, 12:26 PM
[No subject] - by tamilini - 09-20-2004, 12:53 PM
[No subject] - by vasanthan - 09-20-2004, 05:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)