09-18-2004, 10:32 AM
<b>தலைமறைவான போலி கைப்பந்தாட்டக் குழுவினர் ஜேர்மனிய பொலிசாரால் கைது </b>
இலங்கையிலிருந்து ஜேர்மன் சென்ற போலி கைப்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்த 23 பேரும் நேற்று மாலை ஜேர்மன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த வாரம் ஜேர்மனியில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியொன்றில் கலந்து கொள்ள விண்ணப்பித்து அதற்கான விசாவைப் பெற்று இந்த அணியினர் சென்றிருந்த போதிலும் போட்டியில் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகியிருந்தார்கள்.
இவர்கள் திட்டமிட்டு இத்தாலிக்கு செல்லும் நோக்கத்துடனேயே இந்த பயணத்தை மேற்கொண்டதாக பின்னர் தெரியவந்துள்ளது.
ஒரு வாரகாலமாக ஜேர்மனியில் தலைமறைவாகியிருந்த இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக 33 பேர் லன்டனுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஏயர் லங்கா அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட சட்டவிரோத பயணிகளுடன் இவரும் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
puthinam.com
இலங்கையிலிருந்து ஜேர்மன் சென்ற போலி கைப்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்த 23 பேரும் நேற்று மாலை ஜேர்மன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கடந்த வாரம் ஜேர்மனியில் நடைபெற்ற கைப்பந்தாட்ட போட்டியொன்றில் கலந்து கொள்ள விண்ணப்பித்து அதற்கான விசாவைப் பெற்று இந்த அணியினர் சென்றிருந்த போதிலும் போட்டியில் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகியிருந்தார்கள்.
இவர்கள் திட்டமிட்டு இத்தாலிக்கு செல்லும் நோக்கத்துடனேயே இந்த பயணத்தை மேற்கொண்டதாக பின்னர் தெரியவந்துள்ளது.
ஒரு வாரகாலமாக ஜேர்மனியில் தலைமறைவாகியிருந்த இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக 33 பேர் லன்டனுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஏயர் லங்கா அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட சட்டவிரோத பயணிகளுடன் இவரும் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

