09-12-2004, 01:12 PM
<img src='http://eelamweb.com/maveerar/images/maveerar_head.gif' border='0' alt='user posted image'>
அகிம்சையின் நாயகன்
உயிரை துச்சமாய் நினைத்து
உணர்வுகளில் கலந்திட்ட
உன் இனத்தை நினைந்து..
உன்னையே உருக்;கினாய்..
அகிம்சையை ஆயுதமாய் கொண்டு
ஐந்தம்ச கோரிக்கையை அணியாய் கொண்டு
அராஐகத்திற்கு எதிராய்
அண்ணன் நீ போர்க்கொடி தூக்கினாய்..
அகிம்சையின் தந்தையாய்
அன்று காந்திக்கு வெற்றி மாலை சூட்டினர்
ஆனால் உனக்கு
மரணத்தையே மாலையாக்கினர்...
உயிருக்கு அஞ்சான் தமிழன் என்று..
உன்னத யாகம் நீ கொண்டாய்..
உன் உயிரின் பிரிவால்...
ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரம்
உள்ளங்கள் கலங்கி நின்றன..
மனதிலே இரக்கமின்றி..
சிந்தையில் சிறிதும் கலக்கமின்றி..
உன் உருகும் கோலம் கண்டும்..
இறுமாப்புடன் இருந்தவர்கள்..
உன்னை கொன்று
எதனை வென்றனர்..
உன்னை போல் உள்ளம்
கொண்ட பல்லாயிரம்..
உள்ளங்கள் உருவாக..
கருவாக உன்னை
எமக்கு இனம் காட்டி தந்தனர்......
ஆண்டுகள் பதினேழு என்ன
பத்தாயிரம் சென்றாலும்..
பதிந்த உன் உருவம்..
மறையாது எம் நெஞ்சங்களில்..
விரகாவியமாக உருவாகும்
தமிழன் வீர வரலாற்றில்.....
நீ என்றும் அகிம்சையின் நாயகன்.......!.
அகிம்சையின் நாயகன்
உயிரை துச்சமாய் நினைத்து
உணர்வுகளில் கலந்திட்ட
உன் இனத்தை நினைந்து..
உன்னையே உருக்;கினாய்..
அகிம்சையை ஆயுதமாய் கொண்டு
ஐந்தம்ச கோரிக்கையை அணியாய் கொண்டு
அராஐகத்திற்கு எதிராய்
அண்ணன் நீ போர்க்கொடி தூக்கினாய்..
அகிம்சையின் தந்தையாய்
அன்று காந்திக்கு வெற்றி மாலை சூட்டினர்
ஆனால் உனக்கு
மரணத்தையே மாலையாக்கினர்...
உயிருக்கு அஞ்சான் தமிழன் என்று..
உன்னத யாகம் நீ கொண்டாய்..
உன் உயிரின் பிரிவால்...
ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரம்
உள்ளங்கள் கலங்கி நின்றன..
மனதிலே இரக்கமின்றி..
சிந்தையில் சிறிதும் கலக்கமின்றி..
உன் உருகும் கோலம் கண்டும்..
இறுமாப்புடன் இருந்தவர்கள்..
உன்னை கொன்று
எதனை வென்றனர்..
உன்னை போல் உள்ளம்
கொண்ட பல்லாயிரம்..
உள்ளங்கள் உருவாக..
கருவாக உன்னை
எமக்கு இனம் காட்டி தந்தனர்......
ஆண்டுகள் பதினேழு என்ன
பத்தாயிரம் சென்றாலும்..
பதிந்த உன் உருவம்..
மறையாது எம் நெஞ்சங்களில்..
விரகாவியமாக உருவாகும்
தமிழன் வீர வரலாற்றில்.....
நீ என்றும் அகிம்சையின் நாயகன்.......!.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

