07-19-2003, 07:50 PM
<img src='http://www.geocities.com/Athens/Delphi/9687/bharathi1.gif' border='0' alt='user posted image'>
பெண் விடுதலைக் கும்மி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் புூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் - அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி!
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் - அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
குட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்
கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
வற்புறுத் திப் பெண்ணைக்கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
வேதம் படிக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம், தெய்வச்
சாதிபடைக்கவும் செய்திடுவோம்
காத லொருவனைக் கைப் பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி!
மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்.
பெண் விடுதலைக் கும்மி
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்.
வீட்டுக்குள்ளே பெண்ணைப் புூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார் - அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி!
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் - அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
குட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்
கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்.
வற்புறுத் திப் பெண்ணைக்கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தை தள்ளி மிதித்திடுவோம்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!
வேதம் படிக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டிவந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம், தெய்வச்
சாதிபடைக்கவும் செய்திடுவோம்
காத லொருவனைக் கைப் பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வோமடி!
மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்.

