08-21-2004, 06:40 AM
Quote: பெண் தனக்கு தேவையானவற்றை தானே வாங்க கூடிய நிலையில் இருந்தும் கணவனைக்கேட்க வேண்டிய நிலை இருக்கிறது காரணம்..
இருவரது வருமானத்திலும் தான் குடும்பம் ஓடுது.. கணக்குகளை அதற்கேற்றாற் போல தான் வகுத்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது...! இதில ஆணுக்கு தான் குடி.. புகை.. என்டு நிறைய செலவு..
குடும்ப சூழ்நிலையை புரிந்து வாழும் பெண்கள் தான் அதிகம்...!
பெண்கள் எங்கே ஆண்களைக்கேட்கிறார்கள்...
சீட்டுப்பிடிச்சு அந்தக்காலத்திலேயே பழகியவர்கள்..
கண்ணுக்கு மை உதட்டுக்கு சாயம், கைப்பை,
புதிது புதிதாய் சேலைக்கேற்ற செருப்பு, செருப்புக்கேற்ற சேலை.....
சமையலுக்கு
காப்பி போடுவதற்கு
றொட்டி சுடுவதற்கு என்று எத்தனை
எல்லாம் கேட்டா வாங்குகிறார்கள்.
பாவம் கணவன் வீட்டுக்கு வந்து பார்த்தால் அன்றைய மாத உழைப்பு வேண்டாத பொருளாக வீட்டில் குடியிருக்கும்
பெண் உழைப்பவள் என்றாள் தனது பணத்தை பக்குவமாக வங்கியில் போட்டுவிடுவாள்
இல்லை பெற்றோருக்கு அனுப்பி வைப்பாள்...
தம்பியை வெளிநாடுகூப்பிட வேண்டும் என்பாள்..
இல்லை என்று சொல்ல முடியுமா?...
சொன்னாள் இரண்டு வாரம் எங்கே சாப்பிடுவது....
பேச்சு வார்த்தை இருக்காது
ஆனால் வசவு மட்டும் இருக்கும்...
இதை எல்லாம் கேட்க முடியுமா?
கேட்டாலும் ஆணின் நற்பெயரை இதைவைத்தே சிதைத்துவிடுவாள் பெண்.
நீ சுயநலவாதி என்று பட்டம் கொடுத்துவிடுவாளே...
எல்லா ஆணும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்கவே
வாழ்நாளை செலவுசெய்து வீணாகிறார்கள்...
வீணாகிப்போனதே என் வாழ்வு என்று
கொஞ்சம் குடிக்கிறார்கள்..
வேறு என்ன செய்ய முடியும் அவர்களால்...
பாவப்பட்ட இனம் ஆயிற்றே அவர்கள்...
Quote:ஒரு மனைவி எதிரிபார்ப்புகள்..கோரிக்கைகளை கணவன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாளோ..? இல்லையோ.. கணவன் நிறைவேற்ற முயற்சியாவது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் என்ன கணவன்..??
மனைவியின் கோரிக்கைளை நிiவேற்ற வேண்டும் கணவன் இல்லை என்றாள்
என்ன கணவன்? என்று ஏளனமாய் பேசிவிடுகிறார்கள்...
என்ன மனைவியர்.. ? இவர்கள் வெறும் சுயநலவாதிகள்...
கணவனும் மனிதன் தானே...
அவனுக்கு துணையாக வாழ்வதை விட்டுவிட்டு
அவன் கேட்பதை கொடுக்கவேண்டும் இல்லை என்றாள் ஆண்மைக்கே இழுக்காக
ஒரு வார்த்தையை பிரயோகித்து கேவலப்படுத்துவது...
Quote:சீதனம் என்பது வாழ்க்கையை தொடங்குவதற்கு ஒரு முதலீடாக இருக்கலாம்.. அதை இருவரும் கொண்டுவரலாம்.. அது கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இங்கு பெண்கள் தான் சீதனம் கொண்டு போகிறார்கள் எத்தனை ஆண்கள் சீதனம் கொண்டு போனார்கள்.. போகிறார்கள் சொல்லுங்கோ பாப்பம்... அதைவிட சீதனமாக வாங்கப்படுகின்ற பணம் அவர்களது வாழ்வு தெரடங்குவதற்கு முதலீடாக போடபடபடுகிறதா என்றால் அதுவும் இல்லை.. அது ஆணின் குடும்பத்தாருக்கு தான் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்..! வாழப்போற இருவருக்கும் பயன்படுவது குறைவு...! சரி அப்படி பார்த்தாலும்.. கஸ்டப்பட்ட வசதி குறைந்த வீடுகளில் சீதனம் வாங்காமல் பெண் எடுக்க எத்தனை பேர் வாறார்கள்.. என்கிட்ட வசதியிருக்கு.. பெண் சீதனம் கொடுக்க தேவையில்லை என்டு எத்தனை பேர் திருமணம் செய்கிறார்கள்.. தங்களுக்கு ஏற்ற வித்தில் சீதனத்தை வாங்கி கொண்டு தானே திருமணம் செய்கிறார்கள்...!
சீதனம் மட்டும்தான் அவள் கொண்டுவருகிறாள்....
அதன்பின் எல்லாம் அவன்தானே...
கல்யாணம் செய்துவைத்தபின் பெண்வீட்டாரைப்பார்க்கவேண்டுமே...
எவ்வளவு சந்தோசமாய் இருப்பார்கள்...
இனிக்கவலையில்லை இனி செலவு எல்லாம்
அந்த இளிச்சவாயன் பார்த்துக்கொள்வான்...
விட்டுது தொல்லை என்று மகிழ்ச்சியாக இருப்பார்கள்..
ஏமாந்த ஆண் அதன்பின்
ஏற்படப்போகும் பெரிய பெரிய செலவுகளை
எல்லாம் அறியாதவனாய்..
தண்ணீர்கொதிக்கவைத்த பானைக்குள் இருக்கும் தவளைபோல
சுகமாக இருக்கிறது சுகமாக இருக்கிறது என்று
தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொள்கிறான்...
Quote:கிரடிட் காட்டை போட்டு காசை எடுத்து ஆண்கள் காட்டியதனால் தானே மேலத்தேய பெண்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள்... காட்டை இழுத்து கலர்ஸ் காட்டி பழக்கியது யார்..?? ஆண்கள் தானே பிறகு பெண்களை குற்றம் சொல்லி என்ன ஆகிறது.. சொல்லுங்கள்.. ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு காதலிக்கோ யாருக்கோ.. செலவு செய்து காட்டியிருந்தால்.. ஏன் இந்த வில்லங்கம் எல்லாம் வருகிறது... அதைவிட காதலுக்கும் காசுக்கும் இடையில் என்ன தொடர்பு காசுக்காக காதல் முறிந்து போக.. இது தானே வேண்டாம் என்கிறது....! ஒரு பெண்ணுக்கு காசை காட்டி தான் காதலிக்க வேணும் என்டால் அந்த காதல் தேவை தானா...?? அதுக்கு பேர் கூட காதல் கிடையாது...
தன் கைப்பணம் எல்லாம்
பெண்ணின் ஆசையைப்புூர்த்தி செய்ய முதலில் செலவு செய்துவிடுகிறான்
அப்படியும் அவை அடங்கவில்லை...
சரி இன்னும் முயற்சிக்கலாம் என்று
கடன் அட்டையைபயன்படுத்துகிறான்..
பேராசைபிடித்த பெண்கள் பணம் இல்லை என்றால்
கேவலமாக ஆணை மட்டம் தட்டிவிடுவார்கள்
என்ன ஆண் நீ
என்ன கவணன் நீ
என்ன காதலன் நீ.. என்று
என்ன செய்வார்கள் ஆண்கள்... பாவம் ..
Quote:தாயகத்தில் இருந்து பெண் எடுப்பதற்கு இது மட்டும் காரணம் கிடையாது... இங்க உள்ள பெண்களை அவ்வளவாக ஏமாற்ற முடியாது.. அங்கிருக்கிறவர்களை சில காலம் என்றாலும் ஏமாற்றலாம்... அதைவிட இங்க இருக்கிற பெண்கள் கூடுதலாக இங்கத்தைய கலை கலாச்சாரங்களுடன் பழக்கப்பட்டிருப்பார்கள் என்று பல காரணங்களைக் கொண்டு தான் எடுக்கிறார்கள்.. என்ன செய்வது அங்கு வாழ்பவர்களும் இதை எல்லாம் யோசிப்பது கிடையாது வெளிநாட்டு மாப்பிளை என்டால் எதையும் யோசிக்க மாட்டினம்.. தலையை அடைவு வைத்து என்டாலும் அனுப்பி விடுவினம்..!
தாயகத்தில் இருந்து பெண் எடுப்பது ஏன் என்றால்
அவளுடைய தேவைகள் குறைவாக இருக்கும்
அப்படியும் அவள் தேவைகளை அதிகப்படுத்திக்கொண்டாலும்
கொஞ்சம் நாள் எடுக்கும்...
அனால் இதற்கு விதிவிலக்கும் உண்டு
யாரையும் பார்த்து அது வேண்டும்
இது வேண்டும் என்று அடம்பிடிக்கும் தாயகப்பெண்களும் உண்டு.
இல்லை என்றால் மரியாதைஇல்லை என்று
மரியாதைக்காக பொருட்களைவாங்க வைத்து
கணவனை கடன்காரணாக்கம் பெண்களும் உண்டு
மகளுக்குகொடுத்த பணத்தை ஏன் பெண்வீட்டார் ஊரெல்லாம் சொல்லி
ஒப்பாரிவைக்கிறாhகள்....
அவள் நல்லா வாழ்வதற்கு உதவியாகத்தானே கொடுத்தது...
மாப்பிள்ளை வீட்டாரை மட்டம் தட்ட இது ஒரு நல்ல காரணமாக
பயன்படுத்துகிறார்கள்...
சரி எதற்காக இப்படியெல்லாம் சீதனம் கொடுத்து கட்டிவைக்கிறார்கள்...
சமுதாயத்தில் சீதனம் வாங்காமல் திருமணம் செய்ய
எத்தனையோ பேர் தயாராக உள்ளார்கள்..
அவர்களுக்கு பெண்களை கட்டிவைக்கலாமே..
அவர்களிடம் நொட்டைபிடிப்பார்கள்...
பணம்கொடுத்து வாங்கினாத்தான் எதற்கும் மதிப்பு இந்த சமுதாயத்தில்..
இல்லை என்றால் அது...
[/quote]

