08-20-2004, 10:54 PM
இன்றைய சூழ்நிலையில் உழைக்கிற பெண்கள் தான் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.. அது புலம் என்றாலும் சரி தாயகம் என்றாலும் சரி.. பெண் தனக்கு தேவையானவற்றை தானே வாங்க கூடிய நிலையில் இருந்தும் கணவனைக்கேட்க வேண்டிய நிலை இருக்கிறது காரணம்..
இருவரது வருமானத்திலும் தான் குடும்பம் ஓடுது.. கணக்குகளை அதற்கேற்றாற் போல தான் வகுத்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது...! இதில ஆணுக்கு தான் குடி.. புகை.. என்டு நிறைய செலவு..
குடும்ப சூழ்நிலையை புரிந்து வாழும் பெண்கள் தான் அதிகம்...!
ஒரு மனைவி எதிரிபார்ப்புகள்..கோரிக்கைகளை கணவன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாளோ..? இல்லையோ.. கணவன் நிறைவேற்ற முயற்சியாவது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் என்ன கணவன்..??
சீதனம் என்பது வாழ்க்கையை தொடங்குவதற்கு ஒரு முதலீடாக இருக்கலாம்.. அதை இருவரும் கொண்டுவரலாம்.. அது கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இங்கு பெண்கள் தான் சீதனம் கொண்டு போகிறார்கள் எத்தனை ஆண்கள் சீதனம் கொண்டு போனார்கள்.. போகிறார்கள் சொல்லுங்கோ பாப்பம்... அதைவிட சீதனமாக வாங்கப்படுகின்ற பணம் அவர்களது வாழ்வு தெரடங்குவதற்கு முதலீடாக போடபடபடுகிறதா என்றால் அதுவும் இல்லை.. அது ஆணின் குடும்பத்தாருக்கு தான் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்..! வாழப்போற இருவருக்கும் பயன்படுவது குறைவு...! சரி அப்படி பார்த்தாலும்.. கஸ்டப்பட்ட வசதி குறைந்த வீடுகளில் சீதனம் வாங்காமல் பெண் எடுக்க எத்தனை பேர் வாறார்கள்.. என்கிட்ட வசதியிருக்கு.. பெண் சீதனம் கொடுக்க தேவையில்லை என்டு எத்தனை பேர் திருமணம் செய்கிறார்கள்.. தங்களுக்கு ஏற்ற வித்தில் சீதனத்தை வாங்கி கொண்டு தானே திருமணம் செய்கிறார்கள்...!
கிரடிட் காட்டை போட்டு காசை எடுத்து ஆண்கள் காட்டியதனால் தானே மேலத்தேய பெண்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள்... காட்டை இழுத்து கலர்ஸ் காட்டி பழக்கியது யார்..?? ஆண்கள் தானே பிறகு பெண்களை குற்றம் சொல்லி என்ன ஆகிறது.. சொல்லுங்கள்.. ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு காதலிக்கோ யாருக்கோ.. செலவு செய்து காட்டியிருந்தால்.. ஏன் இந்த வில்லங்கம் எல்லாம் வருகிறது... அதைவிட காதலுக்கும் காசுக்கும் இடையில் என்ன தொடர்பு காசுக்காக காதல் முறிந்து போக.. இது தானே வேண்டாம் என்கிறது....! ஒரு பெண்ணுக்கு காசை காட்டி தான் காதலிக்க வேணும் என்டால் அந்த காதல் தேவை தானா...?? அதுக்கு பேர் கூட காதல் கிடையாது...
தாயகத்தில் இருந்து பெண் எடுப்பதற்கு இது மட்டும் காரணம் கிடையாது... இங்க உள்ள பெண்களை அவ்வளவாக ஏமாற்ற முடியாது.. அங்கிருக்கிறவர்களை சில காலம் என்றாலும் ஏமாற்றலாம்... அதைவிட இங்க இருக்கிற பெண்கள் கூடுதலாக இங்கத்தைய கலை கலாச்சாரங்களுடன் பழக்கப்பட்டிருப்பார்கள் என்று பல காரணங்களைக் கொண்டு தான் எடுக்கிறார்கள்.. என்ன செய்வது அங்கு வாழ்பவர்களும் இதை எல்லாம் யோசிப்பது கிடையாது வெளிநாட்டு மாப்பிளை என்டால் எதையும் யோசிக்க மாட்டினம்.. தலையை அடைவு வைத்து என்டாலும் அனுப்பி விடுவினம்..!
இருவரது வருமானத்திலும் தான் குடும்பம் ஓடுது.. கணக்குகளை அதற்கேற்றாற் போல தான் வகுத்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய தேவை இருக்கிறது...! இதில ஆணுக்கு தான் குடி.. புகை.. என்டு நிறைய செலவு..
குடும்ப சூழ்நிலையை புரிந்து வாழும் பெண்கள் தான் அதிகம்...!
ஒரு மனைவி எதிரிபார்ப்புகள்..கோரிக்கைகளை கணவன் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாளோ..? இல்லையோ.. கணவன் நிறைவேற்ற முயற்சியாவது செய்ய வேண்டும் இல்லாவிட்டால் என்ன கணவன்..??
சீதனம் என்பது வாழ்க்கையை தொடங்குவதற்கு ஒரு முதலீடாக இருக்கலாம்.. அதை இருவரும் கொண்டுவரலாம்.. அது கூட ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இங்கு பெண்கள் தான் சீதனம் கொண்டு போகிறார்கள் எத்தனை ஆண்கள் சீதனம் கொண்டு போனார்கள்.. போகிறார்கள் சொல்லுங்கோ பாப்பம்... அதைவிட சீதனமாக வாங்கப்படுகின்ற பணம் அவர்களது வாழ்வு தெரடங்குவதற்கு முதலீடாக போடபடபடுகிறதா என்றால் அதுவும் இல்லை.. அது ஆணின் குடும்பத்தாருக்கு தான் ஏதாவது ஒரு வகையில் பயன்படும்..! வாழப்போற இருவருக்கும் பயன்படுவது குறைவு...! சரி அப்படி பார்த்தாலும்.. கஸ்டப்பட்ட வசதி குறைந்த வீடுகளில் சீதனம் வாங்காமல் பெண் எடுக்க எத்தனை பேர் வாறார்கள்.. என்கிட்ட வசதியிருக்கு.. பெண் சீதனம் கொடுக்க தேவையில்லை என்டு எத்தனை பேர் திருமணம் செய்கிறார்கள்.. தங்களுக்கு ஏற்ற வித்தில் சீதனத்தை வாங்கி கொண்டு தானே திருமணம் செய்கிறார்கள்...!
கிரடிட் காட்டை போட்டு காசை எடுத்து ஆண்கள் காட்டியதனால் தானே மேலத்தேய பெண்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள்... காட்டை இழுத்து கலர்ஸ் காட்டி பழக்கியது யார்..?? ஆண்கள் தானே பிறகு பெண்களை குற்றம் சொல்லி என்ன ஆகிறது.. சொல்லுங்கள்.. ஆண்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு காதலிக்கோ யாருக்கோ.. செலவு செய்து காட்டியிருந்தால்.. ஏன் இந்த வில்லங்கம் எல்லாம் வருகிறது... அதைவிட காதலுக்கும் காசுக்கும் இடையில் என்ன தொடர்பு காசுக்காக காதல் முறிந்து போக.. இது தானே வேண்டாம் என்கிறது....! ஒரு பெண்ணுக்கு காசை காட்டி தான் காதலிக்க வேணும் என்டால் அந்த காதல் தேவை தானா...?? அதுக்கு பேர் கூட காதல் கிடையாது...
தாயகத்தில் இருந்து பெண் எடுப்பதற்கு இது மட்டும் காரணம் கிடையாது... இங்க உள்ள பெண்களை அவ்வளவாக ஏமாற்ற முடியாது.. அங்கிருக்கிறவர்களை சில காலம் என்றாலும் ஏமாற்றலாம்... அதைவிட இங்க இருக்கிற பெண்கள் கூடுதலாக இங்கத்தைய கலை கலாச்சாரங்களுடன் பழக்கப்பட்டிருப்பார்கள் என்று பல காரணங்களைக் கொண்டு தான் எடுக்கிறார்கள்.. என்ன செய்வது அங்கு வாழ்பவர்களும் இதை எல்லாம் யோசிப்பது கிடையாது வெளிநாட்டு மாப்பிளை என்டால் எதையும் யோசிக்க மாட்டினம்.. தலையை அடைவு வைத்து என்டாலும் அனுப்பி விடுவினம்..!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

