07-19-2003, 06:26 PM
காட்டிக் கொடுப்பவன் எங்கே? - அந்தக்
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
தமிழீழ அரசவைக் கவிஞர் காசிஆனந்தனின் நெருப்பு வரிகள் இவை. இதனைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்காது என்று நான் நினைத்தது பிழைத்துப் போய்விட்டது.
'ஏன் நான் இருக்கிறேன்" என திருவாளர் ஆனந்தசங்கரியார் என் முன் வந்து நிற்கிறார்.
தமிழினத்துக்குள் இருக்கும் துரோகிகளை அடையாளம் காண்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது.
'உன் எதிரி உனது பக்கம் இருப்பவர்களில் யார் யாரைப் பாராட்டுகிறானோ, போற்றுகிறானோ, புகழ்கிறானோ மாலை போடுகிறானோ, தோரணம் கட்டுகிறானோ அவன்தான் உன் எதிரி" என்பதுதான் அந்த வழி!
திரு. ஆனந்தசங்கரியார் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தளர் நடை போட்டுக் கொண்டு நுழைகிறார். எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்ற பேதமில்லாமல் சிங்கள உறுப்பினர்கள் எல்லோரும் எழுந்து நின்று கையொலி எழுப்புகிறார்கள்! மேசை அதிரத் தட்டுகிறார்கள்!
'முதுகெலும்புள்ள தமிழனே வருக! புலியைக் புறம்கண்ட ஆனந்தக் கோனாரே வருக!" என்று ஒரே குரலில் புகழாரம்!
திரு.ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த வரவேற்பை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்" நாளேடு அந்தக் காட்சியைப் படம் பிடித்து எழுதியிருந்தது.
'இங்குள்ள எல்லா தமிழ் கட்சிகளும் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் ஆதரவாகச் செயற்படும்போது, கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி மட்டும் துணிச்சலாகப் புலிகளைக் கண்டித்துக் கொண்டே தனது தலைமைப் பதவியையும் காப்பாற்றிக்கொண்டார். அவர்தான் முதுகெலும்பு உள்ள தமிழன்"" என்றெல்லாம் ஆனந்தசங்கரியைப் புகழ்ந்து பாராட்டினர்.""
இந்தப் போற்றலையும் வரவேற்பையும் சற்றும் எதிர்பாராத திரு. ஆனந்தசங்கரியார் உதடுகளில் ஒரு மந்தகாசப் புன்னகையை தவழவிட்டு கம்பீரமாக நடந்து வந்து தனது இருக்கையில் அமர்கிறார்!
அப்போதும் கைதட்டு நிற்கவில்லை! மேசையைத் தட்டுவதும் ஓயவில்லை!
எதற்காக இந்த அமர்க்களம்? ஏன் இந்த ஆரவாரம்?
திரு. ஆனந்தசங்கரியார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டாராம்! அதற்குத்தான் இந்த அமர்க்களம்! அதற்குத்தான் இந்த ஆரவாரம்!
கொஞ்சம் தன்மானமுள்ள இன்னொரு அரசியல்வாதி என்றால் இந்த ஆரவாரத்தைக் கண்டு நாணித் தலை குனிந்திருப்பார்!
ஆனால் அந்தத் தன்மானம்தான் திரு. ஆனந்தசங்கரியாரிடம் மருந்துக்கும் கிடையாதே!
எந்தப் போதி மரத்தின்கீழ் இருந்தபோது திரு.ஹஆனந்தசங்கரியாருக்கு இந்த ஞானம் பிறந்ததோ நாம் ஒன்றும் அறியோம் பராபரமே! ஆனால் ஞானம் பிறந்தது என்னவோ உண்மைதான்!
'அரசோடு பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது மட்டும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள். ஆனால் வேறு நேரங்களில் அவர்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாங்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்தான்!"
திரு. ஆனந்தசங்கரியார் குறிப்படும் சிறீலங்கா நாடாளுமன்றந்தான் இன்றைய இனச் சிக்கலுக்கு முழுதும் காரணம். அந்த நாடாளுமன்றந்தான் தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றியது. அந்த நாடாளுமன்றந்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இயற்றியது. அந்த நாடாளுமன்றந்தான் ஒருமுறை அல்ல இரண்டு முறை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை நிறைவேற்றியது!
அப்படியான ஒரு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதைத்தான் ஆனந்தசங்கரி ஜென்மம் எடுத்த பலன் என்று நினைக்கிறார்!
'என்ன திரு. ஆனந்தசங்கரியார் முட்டையில் மயிர் பிடுங்குகிறார்?" என்று நீங்கள் நினைக்கக்கூடும்.
ஆனால் திரு. ஆனந்தசங்கரியார் அப்படி நினைக்கவில்லை. அவர் பெரிய அரசியல் தத்துவத்தை உதிர்ப்பதாக நினைக்கிறார்!
ஏன் நினைக்க மாட்டார்? அவரிடம் என்ன ஆள் அம்பு, ஆனை, சேனை இல்லையா? யாழ்ப்பாணம் போகும் போது எல்லாம் அவருக்கு ஆயுதம் தாங்கிய இராணுவம் பாதுகாப்புக் கொடுக்கிறதே!
“வுhழரபா inஎழடஎநன in வாநளந iவெசய-pயசவல சழறள யுயெனெயளயபெயசநந அயiவெயiளெ வாந டியளiஉ வுயஅடை pழளவைழைn: வுபைநசள யசந வாந ளழடந சநிசநளநவெயவiஎநள in வாந pநயஉந pசழஉநளள. "ஐவ'ள வாநல றாழ கழரபாவ கழச வாந வுயஅடைள யனெ வை ளை றiவா வாநஅ ய pநயஉநகரட ளழடரவழைn ளாரடன டிந றழசமநன ழரவஇ டிரவ அயiவெயiளெ வாயவ hந hயள ழெ அயனெயவந வழ உயடட யலெடிழனல வாந ளழடந சநிசநளநவெயவiஎநள ழக வாந வுயஅடை pநழிடந. வுhநசந யசந in Pயசடயைஅநவெ வுயஅடை ஆநஅடிநசள றாழ டிநடழபெ வழ pயசவநைள னநயனடல ழிpழளநன வழ வாந டுவுவுநு." (வுhந ளுரனெயல ழுடிளநசஎநச- துரநெ 15இ2003)
இது எவ்வளவு பெரிய இமாலயக் கண்டு பிடிப்பு? நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் விடுதலைப்புலிகளுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. எனவே விடுதலைப்புலிகளை எப்படி தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று என்னால் சொல்ல முடியும் என்கிறார்.
விடுதலைப்புலிகளை எதிர்க்கிற கட்சிகள் எவை என்று பார்த்தால் ஒன்று ஈபிடிபி மற்றது புளொட். இந்தக் கட்சிகளின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மூன்று!
ஒரு வாதத்துக்கு திரு. ஆனந்தசங்கரியார் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அவர் சொல்வது பேச்சுவார்த்தைக்கும் பொருந்தும்தானே? விடுதலைப்புலிகள் மட்டும் ஏகப் பிரதிநிதிகள் இல்லை நாங்களும் இருக்கிறோம் எங்களையும் கூப்பிடுங்கள் என்று ஏன் சொல்லவில்லை?
திரு. ஆனந்தசங்கரிக்கு 1960, 1965ல் சமஜமாசிக் கட்சி சார்பில் போட்டியிட்டு கட்டுப் பணம் இழந்ததை அவருக்கு யாரும் ஞாபகப் படுத்தக் கூடாது. அதுதான் 1970ல் கட்சி தாவி மலையகத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்த ஜி.ஜி. பொன்னம்பலத்தின் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு 657 வாக்கு வித்தியாசத்தில் வென்று விட்டாரே!
1989இல் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் கூட்டணி சார்பில் போட்டியிட்டு முற்றாக மண்ணைக் கவ்வியதை புட்டுக் காட்டப்படக்கூடாது! அவரது தலைவரே மட்டக்களப்பில் மண்ணைக் கவ்வியபோது இவர் தோற்றதில் என்ன அதிசயம்? என்ன அவமானம்?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1989ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்களை ஈன இரக்கமின்றி சுட்டுத் தள்ளி அவர்களை வேட்டையாடிய இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறக் கூடாது என எந்தத் துக்கமோ வெட்கமோ இன்றி கூறப்பட்டிருந்தது.
''வுhந வுருடுகு நடநஉவழைn அயnகைநளவழ ளவயவநன வாயவ வாந ஐPமுகு ளாழரடன ழெவ டிந றiவானசயறn ரவெடை கரடட யரவழழெஅல hயன டிநநn பiஎநn வழ வாந ழேசவா யனெ நுயளவநசn pசழஎinஉநள யனெ ய வுயஅடை னழஅiயெவநன ளநஉரசவைல கழசஉந ளநவ ரி வாநசந. "வுhந ஐPமுகு ளை யn iஅpநசயவiஎந வழ வாந வுயஅடைள ரவெடை டயற யனெ ழசனநச ளை நளவயடிடiளாநன யனெ வாந அயஉhiநெசல ளவயசவள கரnஉவழைniபெ in வாந pசழஎinஉநள. வுhநல ளாழரடன சநஅயin வழ பiஎந வுயஅடைள ளநஉரசவைல யனெ pசழவநஉவழைn ரவெடை றந பநவ நஎநசலவாiபெ in ழசனநச." (வுருடுகு 1989 நுடநஉவழைn ஆயnகைநளவழ)
ஆனால் அரசியல் தெரிந்த தமிழ்மக்கள் போட்டியிட்ட எல்லோரையும் ஒட்டு மொத்தமாக மண்ணைக் கவ்வ வைத்து வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம் படிப்பித்தார்கள்.
அப்புறம் 1994ல் வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே கூட்டணி சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்ததையும் அவருக்கு ஞாபகப்படுத்தக் கூடாது! அதைக் கெட்ட கனவாக அவர் மறந்து விட்டார்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைக்கு மாறாக தனது சுயநன்மைக்காக கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரித்தெடுத்தார்.
அந்தக் கால கட்டத்தில் திரு. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரிய தலையிடியாக இருந்தார்.
கடந்த செப்தெம்பர் 28, 2002ல் ரொறன்ரோவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த திரு. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 75வது ஆண்டு நிறைவு நாளில் கலந்து கொண்டு பேசிய திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் தனது கணவர் உயிரோடு இருந்த போது அவருக்குச் சிலர் பெரிய தலையிடியாக இருந்தார் என்று குறிப்பிட்டார். அவர் யாரை மனதில் வைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட திரு. ஆனந்தசங்கரியார் ''பழைய விடயங்களை கிளற வேண்டாம்"" என்று இடைமறித்துக் கேட்டுக் கொண்டார்.
திரு. ஆனந்தசங்கரியார் ஒரு போதும் அரசியலை உள்ளார்ந்த அக்கறையோடு (ளநசழைரள) எடுத்துக் கொண்டதில்லை. அதற்குத் தோதாக தமிழர் விடுதலைக் கூட்டணியும் 1977ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு உள்ளார்ந்த அக்கறையோடு அரசியல் நடத்தும் கட்சியாகச் செயற்படவில்லை.
அந்தக் கட்சியில் உறுப்புரிமை கிடையாது. உறுப்பினர் பட்டியல் கிடையாது. ஆண்டுச் சந்தாப்பணம் கிடையாது. தேர்தல் கிடையாது. மாநில மாநாடு கிடையாது.
தேர்தல் மழை பெய்தால் மட்டும் தொண்டர்கள் காளான்கள் போல் ஒரே நாளில் முளைத்து, காய்த்து களம் இறங்கிவிடுவார்கள்! தேர்தல் முடிந்ததும் திரும்பவும் நித்திரைக்குப் போய் விடுவார்கள்!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுவில் இருப்பவர்களில் பாதிப் பேர்களது இரண்டு காலில் ஒன்று கல்லறைக்குள் இருக்கிறது!
எடுத்துக்காட்டாக ஆவரங்கால் சின்னத்துரை என்பவர் அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சியில் முதலீடு செய்த அரசியல் சம்பாத்தியத்தை இப்போதும் வைத்துக் கொண்டு காலத்தைப் போக்கி வருகிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் இப்படி இருப்பதால்தான் அதன் தலைவர் விக்கிரமாதித்தன் மாதிரி உள்நாடு ஆறு மாதம் வெளிநாடு ஆறு மாதம் எனக் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா என மாதக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்க முடிகிறது.
ஒரு இலட்சம் தமிழ்மக்கள் மீள் குடியமர முடியாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி அதியுயர் பாதுகாப்பு வலையத்தை அகற்றவோ பின்தள்ளவோ சிங்கள இராணுவம் தயாராயில்லை.
தமிழ் மீனவர்கள் கடலுக்குப் போவதென்றால் இராணுவத்திடம் இரண்டு மணித்தியாலம் காத்திருந்து பாஸ் பெறவேண்டும். அதன் பின்னரும் இராணுவம் விதிக்கும் நேரக்கட்டுப்பாடு தூரக்கட்டுப்பாட்டுக்கு அமையவே தொழில் செய்ய வேண்டும்.
வேதாளம் முருக்க மரத்தில் ஏறியது போல யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு எங்கணும் மறுபடியும் இராணுவமும் காவல்த்துறையும் கூட்டாகச் சேர்ந்து சுற்றி வளைப்பை மேற்கொண்டு தமிழர்களை, அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்துக்காக, சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.
இவைபற்றி எல்லாம் திரு. ஆனந்தசங்கரியாருக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இருக்கிறோம் எனவே நாங்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மார் தட்டும் அவர் அங்கே பேசா மடந்தையாக இருக்கிறார்! பேசினால் வாய் முத்து உதிர்ந்துவிடும் என்று மெத்தவும் பயப்படுகிறார்!
இதோ எந்தக் கட்சியின் தலைவர் நான்தான் என்று உலகம் முழுதும் திரு. ஆனந்தசங்கரி தண்டோராப் போடுகிறாரோ அதே கட்சியின் திருமலைக் கிளை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
'அரச பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் தற்போது நிலை கொண்டிருக்கும் இடங்களிலிருந்து முன்பு நிலைகொண்டிருந்த இடங்களுக்கு மாற்றும்படி கேட்கப்படுமானால், முன்னைய ஆனையிறவு இராணுவ முகாம் அமைந்திருந்த பிரதேசத்தை தமக்குத் திருப்பித் தரும்படி அரச படைகள் கேட்பதற்கு உரித்து ஏற்படும் என்றும், அரசாங்கத்திற்கு செய்யமுடியாத ஒன்றை (இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாகக் குறிப்பிட்டு) செய்யுமாறு வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்த கூற்றுகள் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் தெளிவாக வரையறுக்கக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவை. ஆனந்தசங்கரியின் கூற்றுகள் தமிழ் மக்கள் மத்தியில் திகைப்பையும், பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
'பல நூற்றாண்டுகளுக்குச் சொந்தமானதும் தாங்கள் வாழ்ந்து வந்ததுமான தங்களது ஜீவனோபாயத்தைத் தேடித் தந்ததுமான, தமது சமூக, பொருளாதார, கலாசார நலன்களைப் பேணியதுமான பிரதேசங்களில் மீளக்குடியமர்வதற்கு தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான அபிலாசைகளை ஒரு தனிப்பட்ட நபர் என்ற வகையில் ஆனந்தசங்கரி புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அவரது கூற்றுக்கள் வெளிப்படுத்துகின்றன.
'தங்களது நியாயபூர்வமான அடிப்படை உரிமையின் பிரகாரம் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கும், ஒரு பாழடைந்த பிரதேசத்தில் தனிப்பட்ட இராணுவ அமைப்பாக அமைந்திருந்த ஆனையிறவு இராணுவ முகாம் பிரதேசத்தின் ஆதிக்கத்தையும் எவ்விதத்திலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஆனையிறவு இராணுவ முகாம் விடயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையில் உள்ள இராணுவப் பிரச்சினையாகும்."
திரு. ஆனந்தசங்கரியார் தனது அரசியல் அந்திம காலத்தில் தனது சொந்தக் காட்சிக்காரர்களாலேயே கடுமையாக விமர்ச்சிக்கப்படுவதைப் பார்க்க கவலையாக இருக்கிறது!
இதற்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் எவருக்கும் இந்தத் துர்ப்பாக்கியம் ஏற்படவில்லை!
கயவனைக் கொண்டு வா! தூணோடு கட்டு!
சாட்டை எடுத்துவா இங்கே! - தம்பி
சாகும்வரை அடி பின்பு கொளுத்து!
தமிழீழ அரசவைக் கவிஞர் காசிஆனந்தனின் நெருப்பு வரிகள் இவை. இதனைப் பயன்படுத்த வாய்ப்பு இருக்காது என்று நான் நினைத்தது பிழைத்துப் போய்விட்டது.
'ஏன் நான் இருக்கிறேன்" என திருவாளர் ஆனந்தசங்கரியார் என் முன் வந்து நிற்கிறார்.
தமிழினத்துக்குள் இருக்கும் துரோகிகளை அடையாளம் காண்பதற்கு ஒரு இலகுவான வழி இருக்கிறது.
'உன் எதிரி உனது பக்கம் இருப்பவர்களில் யார் யாரைப் பாராட்டுகிறானோ, போற்றுகிறானோ, புகழ்கிறானோ மாலை போடுகிறானோ, தோரணம் கட்டுகிறானோ அவன்தான் உன் எதிரி" என்பதுதான் அந்த வழி!
திரு. ஆனந்தசங்கரியார் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தளர் நடை போட்டுக் கொண்டு நுழைகிறார். எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்ற பேதமில்லாமல் சிங்கள உறுப்பினர்கள் எல்லோரும் எழுந்து நின்று கையொலி எழுப்புகிறார்கள்! மேசை அதிரத் தட்டுகிறார்கள்!
'முதுகெலும்புள்ள தமிழனே வருக! புலியைக் புறம்கண்ட ஆனந்தக் கோனாரே வருக!" என்று ஒரே குரலில் புகழாரம்!
திரு.ஆனந்தசங்கரிக்குக் கிடைத்த வரவேற்பை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்" நாளேடு அந்தக் காட்சியைப் படம் பிடித்து எழுதியிருந்தது.
'இங்குள்ள எல்லா தமிழ் கட்சிகளும் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் ஆதரவாகச் செயற்படும்போது, கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி மட்டும் துணிச்சலாகப் புலிகளைக் கண்டித்துக் கொண்டே தனது தலைமைப் பதவியையும் காப்பாற்றிக்கொண்டார். அவர்தான் முதுகெலும்பு உள்ள தமிழன்"" என்றெல்லாம் ஆனந்தசங்கரியைப் புகழ்ந்து பாராட்டினர்.""
இந்தப் போற்றலையும் வரவேற்பையும் சற்றும் எதிர்பாராத திரு. ஆனந்தசங்கரியார் உதடுகளில் ஒரு மந்தகாசப் புன்னகையை தவழவிட்டு கம்பீரமாக நடந்து வந்து தனது இருக்கையில் அமர்கிறார்!
அப்போதும் கைதட்டு நிற்கவில்லை! மேசையைத் தட்டுவதும் ஓயவில்லை!
எதற்காக இந்த அமர்க்களம்? ஏன் இந்த ஆரவாரம்?
திரு. ஆனந்தசங்கரியார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டாராம்! அதற்குத்தான் இந்த அமர்க்களம்! அதற்குத்தான் இந்த ஆரவாரம்!
கொஞ்சம் தன்மானமுள்ள இன்னொரு அரசியல்வாதி என்றால் இந்த ஆரவாரத்தைக் கண்டு நாணித் தலை குனிந்திருப்பார்!
ஆனால் அந்தத் தன்மானம்தான் திரு. ஆனந்தசங்கரியாரிடம் மருந்துக்கும் கிடையாதே!
எந்தப் போதி மரத்தின்கீழ் இருந்தபோது திரு.ஹஆனந்தசங்கரியாருக்கு இந்த ஞானம் பிறந்ததோ நாம் ஒன்றும் அறியோம் பராபரமே! ஆனால் ஞானம் பிறந்தது என்னவோ உண்மைதான்!
'அரசோடு பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது மட்டும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள். ஆனால் வேறு நேரங்களில் அவர்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல. நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாங்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்தான்!"
திரு. ஆனந்தசங்கரியார் குறிப்படும் சிறீலங்கா நாடாளுமன்றந்தான் இன்றைய இனச் சிக்கலுக்கு முழுதும் காரணம். அந்த நாடாளுமன்றந்தான் தனிச் சிங்களச் சட்டத்தை நிறைவேற்றியது. அந்த நாடாளுமன்றந்தான் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இயற்றியது. அந்த நாடாளுமன்றந்தான் ஒருமுறை அல்ல இரண்டு முறை ஒற்றையாட்சி அரசியல் யாப்பை நிறைவேற்றியது!
அப்படியான ஒரு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதைத்தான் ஆனந்தசங்கரி ஜென்மம் எடுத்த பலன் என்று நினைக்கிறார்!
'என்ன திரு. ஆனந்தசங்கரியார் முட்டையில் மயிர் பிடுங்குகிறார்?" என்று நீங்கள் நினைக்கக்கூடும்.
ஆனால் திரு. ஆனந்தசங்கரியார் அப்படி நினைக்கவில்லை. அவர் பெரிய அரசியல் தத்துவத்தை உதிர்ப்பதாக நினைக்கிறார்!
ஏன் நினைக்க மாட்டார்? அவரிடம் என்ன ஆள் அம்பு, ஆனை, சேனை இல்லையா? யாழ்ப்பாணம் போகும் போது எல்லாம் அவருக்கு ஆயுதம் தாங்கிய இராணுவம் பாதுகாப்புக் கொடுக்கிறதே!
“வுhழரபா inஎழடஎநன in வாநளந iவெசய-pயசவல சழறள யுயெனெயளயபெயசநந அயiவெயiளெ வாந டியளiஉ வுயஅடை pழளவைழைn: வுபைநசள யசந வாந ளழடந சநிசநளநவெயவiஎநள in வாந pநயஉந pசழஉநளள. "ஐவ'ள வாநல றாழ கழரபாவ கழச வாந வுயஅடைள யனெ வை ளை றiவா வாநஅ ய pநயஉநகரட ளழடரவழைn ளாரடன டிந றழசமநன ழரவஇ டிரவ அயiவெயiளெ வாயவ hந hயள ழெ அயனெயவந வழ உயடட யலெடிழனல வாந ளழடந சநிசநளநவெயவiஎநள ழக வாந வுயஅடை pநழிடந. வுhநசந யசந in Pயசடயைஅநவெ வுயஅடை ஆநஅடிநசள றாழ டிநடழபெ வழ pயசவநைள னநயனடல ழிpழளநன வழ வாந டுவுவுநு." (வுhந ளுரனெயல ழுடிளநசஎநச- துரநெ 15இ2003)
இது எவ்வளவு பெரிய இமாலயக் கண்டு பிடிப்பு? நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் விடுதலைப்புலிகளுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றன. எனவே விடுதலைப்புலிகளை எப்படி தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று என்னால் சொல்ல முடியும் என்கிறார்.
விடுதலைப்புலிகளை எதிர்க்கிற கட்சிகள் எவை என்று பார்த்தால் ஒன்று ஈபிடிபி மற்றது புளொட். இந்தக் கட்சிகளின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மூன்று!
ஒரு வாதத்துக்கு திரு. ஆனந்தசங்கரியார் சொல்வதை ஏற்றுக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் அவர் சொல்வது பேச்சுவார்த்தைக்கும் பொருந்தும்தானே? விடுதலைப்புலிகள் மட்டும் ஏகப் பிரதிநிதிகள் இல்லை நாங்களும் இருக்கிறோம் எங்களையும் கூப்பிடுங்கள் என்று ஏன் சொல்லவில்லை?
திரு. ஆனந்தசங்கரிக்கு 1960, 1965ல் சமஜமாசிக் கட்சி சார்பில் போட்டியிட்டு கட்டுப் பணம் இழந்ததை அவருக்கு யாரும் ஞாபகப் படுத்தக் கூடாது. அதுதான் 1970ல் கட்சி தாவி மலையகத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்த ஜி.ஜி. பொன்னம்பலத்தின் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு 657 வாக்கு வித்தியாசத்தில் வென்று விட்டாரே!
1989இல் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் கூட்டணி சார்பில் போட்டியிட்டு முற்றாக மண்ணைக் கவ்வியதை புட்டுக் காட்டப்படக்கூடாது! அவரது தலைவரே மட்டக்களப்பில் மண்ணைக் கவ்வியபோது இவர் தோற்றதில் என்ன அதிசயம்? என்ன அவமானம்?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 1989ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ஆயிரக் கணக்கான தமிழ்ப் பொதுமக்களை ஈன இரக்கமின்றி சுட்டுத் தள்ளி அவர்களை வேட்டையாடிய இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறக் கூடாது என எந்தத் துக்கமோ வெட்கமோ இன்றி கூறப்பட்டிருந்தது.
''வுhந வுருடுகு நடநஉவழைn அயnகைநளவழ ளவயவநன வாயவ வாந ஐPமுகு ளாழரடன ழெவ டிந றiவானசயறn ரவெடை கரடட யரவழழெஅல hயன டிநநn பiஎநn வழ வாந ழேசவா யனெ நுயளவநசn pசழஎinஉநள யனெ ய வுயஅடை னழஅiயெவநன ளநஉரசவைல கழசஉந ளநவ ரி வாநசந. "வுhந ஐPமுகு ளை யn iஅpநசயவiஎந வழ வாந வுயஅடைள ரவெடை டயற யனெ ழசனநச ளை நளவயடிடiளாநன யனெ வாந அயஉhiநெசல ளவயசவள கரnஉவழைniபெ in வாந pசழஎinஉநள. வுhநல ளாழரடன சநஅயin வழ பiஎந வுயஅடைள ளநஉரசவைல யனெ pசழவநஉவழைn ரவெடை றந பநவ நஎநசலவாiபெ in ழசனநச." (வுருடுகு 1989 நுடநஉவழைn ஆயnகைநளவழ)
ஆனால் அரசியல் தெரிந்த தமிழ்மக்கள் போட்டியிட்ட எல்லோரையும் ஒட்டு மொத்தமாக மண்ணைக் கவ்வ வைத்து வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம் படிப்பித்தார்கள்.
அப்புறம் 1994ல் வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே கூட்டணி சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்ததையும் அவருக்கு ஞாபகப்படுத்தக் கூடாது! அதைக் கெட்ட கனவாக அவர் மறந்து விட்டார்.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைக்கு மாறாக தனது சுயநன்மைக்காக கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரித்தெடுத்தார்.
அந்தக் கால கட்டத்தில் திரு. ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணிக்குப் பெரிய தலையிடியாக இருந்தார்.
கடந்த செப்தெம்பர் 28, 2002ல் ரொறன்ரோவில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த திரு. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 75வது ஆண்டு நிறைவு நாளில் கலந்து கொண்டு பேசிய திருமதி. மங்கையற்கரசி அமிர்தலிங்கம் தனது கணவர் உயிரோடு இருந்த போது அவருக்குச் சிலர் பெரிய தலையிடியாக இருந்தார் என்று குறிப்பிட்டார். அவர் யாரை மனதில் வைத்துப் பேசுகிறார் என்பதைப் புரிந்து கொண்ட திரு. ஆனந்தசங்கரியார் ''பழைய விடயங்களை கிளற வேண்டாம்"" என்று இடைமறித்துக் கேட்டுக் கொண்டார்.
திரு. ஆனந்தசங்கரியார் ஒரு போதும் அரசியலை உள்ளார்ந்த அக்கறையோடு (ளநசழைரள) எடுத்துக் கொண்டதில்லை. அதற்குத் தோதாக தமிழர் விடுதலைக் கூட்டணியும் 1977ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு உள்ளார்ந்த அக்கறையோடு அரசியல் நடத்தும் கட்சியாகச் செயற்படவில்லை.
அந்தக் கட்சியில் உறுப்புரிமை கிடையாது. உறுப்பினர் பட்டியல் கிடையாது. ஆண்டுச் சந்தாப்பணம் கிடையாது. தேர்தல் கிடையாது. மாநில மாநாடு கிடையாது.
தேர்தல் மழை பெய்தால் மட்டும் தொண்டர்கள் காளான்கள் போல் ஒரே நாளில் முளைத்து, காய்த்து களம் இறங்கிவிடுவார்கள்! தேர்தல் முடிந்ததும் திரும்பவும் நித்திரைக்குப் போய் விடுவார்கள்!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழுவில் இருப்பவர்களில் பாதிப் பேர்களது இரண்டு காலில் ஒன்று கல்லறைக்குள் இருக்கிறது!
எடுத்துக்காட்டாக ஆவரங்கால் சின்னத்துரை என்பவர் அந்தக் காலத்தில் தமிழரசுக் கட்சியில் முதலீடு செய்த அரசியல் சம்பாத்தியத்தை இப்போதும் வைத்துக் கொண்டு காலத்தைப் போக்கி வருகிறார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் இப்படி இருப்பதால்தான் அதன் தலைவர் விக்கிரமாதித்தன் மாதிரி உள்நாடு ஆறு மாதம் வெளிநாடு ஆறு மாதம் எனக் கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா என மாதக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்க முடிகிறது.
ஒரு இலட்சம் தமிழ்மக்கள் மீள் குடியமர முடியாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி அதியுயர் பாதுகாப்பு வலையத்தை அகற்றவோ பின்தள்ளவோ சிங்கள இராணுவம் தயாராயில்லை.
தமிழ் மீனவர்கள் கடலுக்குப் போவதென்றால் இராணுவத்திடம் இரண்டு மணித்தியாலம் காத்திருந்து பாஸ் பெறவேண்டும். அதன் பின்னரும் இராணுவம் விதிக்கும் நேரக்கட்டுப்பாடு தூரக்கட்டுப்பாட்டுக்கு அமையவே தொழில் செய்ய வேண்டும்.
வேதாளம் முருக்க மரத்தில் ஏறியது போல யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு எங்கணும் மறுபடியும் இராணுவமும் காவல்த்துறையும் கூட்டாகச் சேர்ந்து சுற்றி வளைப்பை மேற்கொண்டு தமிழர்களை, அவர்கள் தமிழர்களாகப் பிறந்த ஒரே குற்றத்துக்காக, சந்தேகத்தின் மீது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.
இவைபற்றி எல்லாம் திரு. ஆனந்தசங்கரியாருக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இருக்கிறோம் எனவே நாங்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மார் தட்டும் அவர் அங்கே பேசா மடந்தையாக இருக்கிறார்! பேசினால் வாய் முத்து உதிர்ந்துவிடும் என்று மெத்தவும் பயப்படுகிறார்!
இதோ எந்தக் கட்சியின் தலைவர் நான்தான் என்று உலகம் முழுதும் திரு. ஆனந்தசங்கரி தண்டோராப் போடுகிறாரோ அதே கட்சியின் திருமலைக் கிளை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
'அரச பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் தற்போது நிலை கொண்டிருக்கும் இடங்களிலிருந்து முன்பு நிலைகொண்டிருந்த இடங்களுக்கு மாற்றும்படி கேட்கப்படுமானால், முன்னைய ஆனையிறவு இராணுவ முகாம் அமைந்திருந்த பிரதேசத்தை தமக்குத் திருப்பித் தரும்படி அரச படைகள் கேட்பதற்கு உரித்து ஏற்படும் என்றும், அரசாங்கத்திற்கு செய்யமுடியாத ஒன்றை (இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாகக் குறிப்பிட்டு) செய்யுமாறு வற்புறுத்துவது எந்த வகையிலும் நியாயமானது அல்ல என்றும் ஆனந்தசங்கரி தெரிவித்த கூற்றுகள் தமிழர் விடுதலைக் கூட்டணியினால் தெளிவாக வரையறுக்கக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவை. ஆனந்தசங்கரியின் கூற்றுகள் தமிழ் மக்கள் மத்தியில் திகைப்பையும், பெரும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
'பல நூற்றாண்டுகளுக்குச் சொந்தமானதும் தாங்கள் வாழ்ந்து வந்ததுமான தங்களது ஜீவனோபாயத்தைத் தேடித் தந்ததுமான, தமது சமூக, பொருளாதார, கலாசார நலன்களைப் பேணியதுமான பிரதேசங்களில் மீளக்குடியமர்வதற்கு தமிழ் மக்களுடைய நியாயபூர்வமான அபிலாசைகளை ஒரு தனிப்பட்ட நபர் என்ற வகையில் ஆனந்தசங்கரி புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அவரது கூற்றுக்கள் வெளிப்படுத்துகின்றன.
'தங்களது நியாயபூர்வமான அடிப்படை உரிமையின் பிரகாரம் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கையை மீள ஆரம்பிப்பதற்கும், ஒரு பாழடைந்த பிரதேசத்தில் தனிப்பட்ட இராணுவ அமைப்பாக அமைந்திருந்த ஆனையிறவு இராணுவ முகாம் பிரதேசத்தின் ஆதிக்கத்தையும் எவ்விதத்திலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. ஆனையிறவு இராணுவ முகாம் விடயம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசபடையினருக்கும் இடையில் உள்ள இராணுவப் பிரச்சினையாகும்."
திரு. ஆனந்தசங்கரியார் தனது அரசியல் அந்திம காலத்தில் தனது சொந்தக் காட்சிக்காரர்களாலேயே கடுமையாக விமர்ச்சிக்கப்படுவதைப் பார்க்க கவலையாக இருக்கிறது!
இதற்கு முன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் எவருக்கும் இந்தத் துர்ப்பாக்கியம் ஏற்படவில்லை!

