Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா காலடியில் சரணடையும் புஷ்....
#1
தான்றோன்றித்தனமாக ஐ நா வையும் உலகையும் பகைத்து ஈராக் பிடிக்கப் போன புஷ் இன்று, அங்கு திட்டமிட்டு ஒருங்கமைக்கப்பட்ட சதாமின் கொரில்லாச் சண்டைக்கு முகம் கொடுக்க முடியாமல் 149 படை வீரர்களை (அமெரிக்க கணக்குப் படியே) இழந்து இன்னும் இழக்க இருக்கும் நிலையில் ஐ.நாவின் உதவிக்காக அதன் காலடியில் சரணடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினமும் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்படுவது ஈராக்கில் உள்ள அமெரிக்க படை வீரர்கள் மத்தியில் பெரும் மனச் சோர்வையும் ஏற்படுத்தி இருப்பதும், அமெரிக்கப்படை வீரர்களின் தற்போதைய உயிரிழப்பு எண்ணிக்கை 1991 ஈராக் யுத்தத்தில் இழக்கப்பட்ட 147 அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை கடந்திருப்பதும் ஈராக் மக்கள் அமெரிக்க படையினருக்கு எதிராகக் காட்டும் கடும் எதிர்ப்புமே புஷ் தானே ஒதுக்கி வைத்த ஐ .நாவின் உதவி நாடி ஓட வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஐ.நாவும் அதன் ஏனைய அங்கத்துவ நாடுகளும் புஷ்ஷிற்கு உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...இது தான் புஷ்ஷின் இன்றை ஆப்பிழுத்த குரங்கின் நிலை....இது யுத்தத்தை விரும்பும் சில சிங்கள அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடமாக இருக்கும் என்பது வெள்ளிடை மலையாகும்....!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஐ.நா காலடியில் சரணடையு - by kuruvikal - 07-19-2003, 06:10 PM
[No subject] - by TMR - 07-20-2003, 08:13 PM
[No subject] - by sethu - 08-11-2003, 07:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)