08-14-2004, 07:17 PM
<b>மூக்கு சுந்தருக்கு ஈழ்நாதனின் பதில் ...</b>
ஒரு பதிவிற்கான எதிர்வினையும் சில விளக்கங்களும்
அன்பின் சுந்தர் அவர்கட்கு.முதலில் மூத்தவர் என்ற முறையிலும் பலமுறை நான் நெகிழ்ந்த பதிவுகளை எழுதியவர் என்ற முறையிலும் நீங்கள் நீ இள வயது வளரவேண்டிய பிள்ளை.ஆக்க பூர்வமாகச் செய்ய எவ்வளவோ இருக்கு என்று சொன்னதை உண்மையான வாழ்த்தாக எடுத்துக்கொண்டு அதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்படியான பதிவுகள் பின்னூட்டங்கள் மூலம் இருவருக்கும் இடையில் இதுவரை இல்லாத நட்பு ஆகக்குறைந்தது புரிந்துணர்வாக ஆவது வளரும் என்று நம்புகிறேன்.
உங்களுக்குப் பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழரோடு பழக்கம் உண்டு என்ற தன்னிலை விளக்கத்துக்குப் பதிலாக நானும் தன்னிலை விளக்கத்தை முன்வைக்கிறேன்.உங்களுக்கு ஈழத்தமிழருடன் பழக்கம் தான் உண்டு.எனக்கோ படிக்க என வந்த இடத்தில் இந்தியச் சகோதரர்கலுடன் ஒன்றாக உண்டுறங்கும் வாழ்க்கை கடந்த மூன்றாண்டுகளாக இதுதான் தொடர்கிறது நீ இந்தியன் நான் ஈழத்தவன் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் தமிழன் என்ற குறு இனவாதம் சேர்த்து வைத்திருக்கிறது.எங்களிடையே விவாதங்கள் வரும் ராஜீவைக் கொன்றது சரியா தவறா என்பதிலிருந்து ஈழத்தில் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள் வரை உணர்ச்சிக் கொந்தளிப்பை விடுத்து ஆராய்ச்சி பூர்வமாகப் பேசுவோம்.அப்போதெல்லாம் நான் அடிக்கடி சொல்லும் விடயம் ராஜீவின் கொலை தவிர்த்திருக்கப்படவேண்டியது.பல கொலைகள் உள் நாட்டில் நடந்தாலும் சர்வதேச ரீதியில் கெட்ட பெயரை உண்டாக்கியது என்ற ரீதியில் தவிர்த்திருக்கலாம்.ஆனால் ராஜீவ் செய்தது சரியென்பதை நானோ அந்த இந்தியச் சகோதரர்களோ முற்றுமுழுதாக ஒத்துக்கொண்டதில்லை.
ஈழத்துப்பூக்கள் என்னும் தலைப்பிலான பதிவு வெறுமனே உங்கள் அனைவருக்கும் இவர் இவர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காகவே அன்றி எவ்விதத்திலும் பாகுபடுத்தவன்று என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன்.வலைப்பதிவில் ஏனெனில் வலைப்பதிவாளர் அனைவருமே ஏதோ ஒருவகையில் யாகு குழுமங்களிலோ மன்றங்களிலோ அறிமுகமானவர்கள்.ஆனால் ஈழத்தைச் சேர்ந்தவர்களை இங்கே மட்டுமே முதலில் கண்டிருப்பீர்கள் அதிலும் எவர் ஈழத்தைச் சேர்ந்தவர் எவர் பிறநாட்டவர் என்று பலரை உங்களால் அடையாளப்படுத்தவே முடியாது.அதனால் தான் ஈழத்து வலைப்பதிவாளர் அனைவரையும் ஏதோ ஒருவகையில் அறிந்திருக்கும் நான் அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன் ஒழிய நீங்கள் சொல்லும் இரத்தத்தில் ஊறிய பிரிவினை என்றால் வலைப்பதிவுகள் அறிமுகத்தை அத்துடன் நிறுத்தியிருப்பேன் மற்றையவர்கள் பதிவுக்குப் போய் ஊக்கு வித்துக் கொண்டிருக்க மாட்டேன்.
இதையெ உங்கள் எழுத்து நேர்மைக்குச் சான்றாய் அன்றைய தினமே வலைப்பூவின் பின்னூட்டத்தில் கொடுத்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் இன்று உங்களுக்குச் சாதகமில்லா ஆடுகளத்தை திசைதிருப்ப இது உபயோகிக்கப் பட்டுவிட்டது நாளையே ஏதேனும் சிக்கல் வந்தால் ஈழநாதன் இட்ட பொறி என்று தமிழ்கூறும் நல்லுலகம் இவ்வுலகில் உள்ளவரை ஈழநாதன் பெயர் வாழும்.அதற்கான முதல் வித்தை நீங்கள் இட்டிருக்கிறீர்கள் நன்று புலிமுத்திரையோடு இந்தச் சின் முத்திரையையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது பதிவில் சொல்லியது பிளவு வந்துவிடுமோ என்று பயப்படாமல் உண்மைகளை எழுதும்படி மற்றவர் வலைப்பதிவுகளை எட்டிப் பார்க்கும் வழக்கம் இருந்திருந்தால் அவ்வார்த்தைக்கான காரணம் புரிந்திருக்கும்.நாங்களெல்லாம் இப்படி காரசாரமாக விவாதித்துக்கொள்வதால் எங்கே ஈழத்தவர் இந்தியர் என்ற பிளவு வந்துவிடுமோ என்று ஒரு உறவு எழுதியிருந்தது அதையே பல உறவுகள் மனதில் நினைத்திருக்கும் அதற்காகத் தான் எழுதினேன் நெருப்பு என்று சொன்னால் வாய் சுட்டுவிடாது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய அறிவு மட்டுமல்ல இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய நெளிவு சுழிவுகள் உங்களுக்கு விளக்கமின்மையே //ஊர் ரெண்டு பட வேண்டும் என்று ஆயுதம் கொடுத்திருக்க மாட்டோம். பிராந்திய வல்லரசு நாங்கள். இலங்கை வேண்டுமென்று நினைத்திருந்தால் இம் மாதிரி ஈன வழிகளில், குழப்பம் விளைவித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டியதில்லை. ஹார்லிக்ஸ் விளம்பர ஸ்டைலில் "அப்டியே ச்சாப்பிட்டிருப்போம்" . உங்கள் அச்சுபிச்சு ராசதந்திர சிந்தாந்தங்களை நிறுத்துக் கொள்ளுங்கள்.//
என்ற வாக்கியத்துக் காரணம்.இந்தியா எங்கே தனது பிராந்திய வல்லாதிக்கம் பறிபோய்விடுமோ என்று பயப்படுவதே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையை தனது கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவது என்பது அரிச்சுவடியன்றி அச்சுப்பிச்சுச் சித்தாந்தமல்ல.
நாம் வல்லரசு எவனையும் பிடுங்கி விடுவோம் என்ற அதீத நம்பிக்கைதான் கார்கிலில் தீவிரவாதிகளின் ஊடுருவலாய் முடிந்தது.அவ்வாறான ஒரு கதையே இலங்கையிலும் நடந்தது.புலிகள் மற்றும் யாழ்ப்பாணத்தமிழ் மக்கள் பற்றிய எந்தவித விளக்கமும் இன்றி இந்திய இராணுவம் தான் ஒரு வல்லரசு என்று கொண்டிருந்த இறுமாப்பே ஆரம்பத்தில் அதுபெற்ற கசப்பான தோல்விகளுக்குக் காரணமாயிற்று.அதுவே முதற் கோணல் முற்றுங் கோணல் என்றமாதிரி ஆகிப்போனது.இன்று உங்கள் படையில் ஆயிரம் பேரை இழந்துவிட்டோம் என்று நீங்களும் எங்களில் பல்லாயிரக்கணக்கானவரை இழந்துவிட்டோம் நாங்களும் புலம்பக் காரணமாயிற்று.
பிராந்திய வல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம் என்று சொல்பவர்களுக்கு அமெரிக்காவின் குரல் என்றொரு வானொலி நிலையத்தை அமெரிக்கா புத்தளம் பகுதியில் அமைத்தபோது அதைத் தடுத்து நிறுத்த இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமற் போனது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.அதற்கான காரணமும் இந்தச் சின்னஞ்சிறு நாட்டில் அவ்வளவு பொருட்செலவில் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை நிறுவவேண்டியதன் அவசியம் என்னவென்று புரிந்திருந்தால் துளியூண்டு இலங்கையின் சிறு பகுதியைத் தானும் உங்கள் நாட்டால் விளம்பரத்தில் சொல்வதுபோன்று அப்படியே சாப்டுவேன் என்று சாப்பிட முடியாது என்ற சிறிய உண்மை புரிந்துபோயிருக்கும் இதெல்லாம் புள்ளிவிபரம் இல்லை அரசியல் சாதாரண ஈழத்தமிழனாய் எமது நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்கள் யார் என்று தோன்டிப்பார்க்கப் புறப்பட்டு தோன்டத் தோட்டப் பூதமாய்ப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் புழுத்துபோன அரசியல்.
இதனை விட இன்னொன்று தெரியுமா எப்போதும் ஈழத்தமிழ் ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாகக் காட்டப்படும் இன்னொரு விவகாரம் திருகோணமலைத் துறைமுகமும் அதனை அண்டியதாகக் கட்டப்பட்டுள்ளது பாரிய எண்ணைக் குதங்களும்.இதனை ஆரம்பத்தில் நானும் நம்பவில்லை அப்படித் துறைமுகத்தாலும் எண்ணைக்குதத்தாலும் வரும் வருமானம் பெரிதல்ல என்றாலும் அதுபற்றிட்த் தொடர்ந்து வாசித்தபோது பொருளாதாரம் என்பதைவிட இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் என்ற புதிய காரணியைத் தெரிந்துகொண்டேன்.
ஒரு பதிவிற்கான எதிர்வினையும் சில விளக்கங்களும்
அன்பின் சுந்தர் அவர்கட்கு.முதலில் மூத்தவர் என்ற முறையிலும் பலமுறை நான் நெகிழ்ந்த பதிவுகளை எழுதியவர் என்ற முறையிலும் நீங்கள் நீ இள வயது வளரவேண்டிய பிள்ளை.ஆக்க பூர்வமாகச் செய்ய எவ்வளவோ இருக்கு என்று சொன்னதை உண்மையான வாழ்த்தாக எடுத்துக்கொண்டு அதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்படியான பதிவுகள் பின்னூட்டங்கள் மூலம் இருவருக்கும் இடையில் இதுவரை இல்லாத நட்பு ஆகக்குறைந்தது புரிந்துணர்வாக ஆவது வளரும் என்று நம்புகிறேன்.
உங்களுக்குப் பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழரோடு பழக்கம் உண்டு என்ற தன்னிலை விளக்கத்துக்குப் பதிலாக நானும் தன்னிலை விளக்கத்தை முன்வைக்கிறேன்.உங்களுக்கு ஈழத்தமிழருடன் பழக்கம் தான் உண்டு.எனக்கோ படிக்க என வந்த இடத்தில் இந்தியச் சகோதரர்கலுடன் ஒன்றாக உண்டுறங்கும் வாழ்க்கை கடந்த மூன்றாண்டுகளாக இதுதான் தொடர்கிறது நீ இந்தியன் நான் ஈழத்தவன் என்ற வித்தியாசமின்றி அனைவரையும் தமிழன் என்ற குறு இனவாதம் சேர்த்து வைத்திருக்கிறது.எங்களிடையே விவாதங்கள் வரும் ராஜீவைக் கொன்றது சரியா தவறா என்பதிலிருந்து ஈழத்தில் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள் வரை உணர்ச்சிக் கொந்தளிப்பை விடுத்து ஆராய்ச்சி பூர்வமாகப் பேசுவோம்.அப்போதெல்லாம் நான் அடிக்கடி சொல்லும் விடயம் ராஜீவின் கொலை தவிர்த்திருக்கப்படவேண்டியது.பல கொலைகள் உள் நாட்டில் நடந்தாலும் சர்வதேச ரீதியில் கெட்ட பெயரை உண்டாக்கியது என்ற ரீதியில் தவிர்த்திருக்கலாம்.ஆனால் ராஜீவ் செய்தது சரியென்பதை நானோ அந்த இந்தியச் சகோதரர்களோ முற்றுமுழுதாக ஒத்துக்கொண்டதில்லை.
ஈழத்துப்பூக்கள் என்னும் தலைப்பிலான பதிவு வெறுமனே உங்கள் அனைவருக்கும் இவர் இவர் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காகவே அன்றி எவ்விதத்திலும் பாகுபடுத்தவன்று என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தேன்.வலைப்பதிவில் ஏனெனில் வலைப்பதிவாளர் அனைவருமே ஏதோ ஒருவகையில் யாகு குழுமங்களிலோ மன்றங்களிலோ அறிமுகமானவர்கள்.ஆனால் ஈழத்தைச் சேர்ந்தவர்களை இங்கே மட்டுமே முதலில் கண்டிருப்பீர்கள் அதிலும் எவர் ஈழத்தைச் சேர்ந்தவர் எவர் பிறநாட்டவர் என்று பலரை உங்களால் அடையாளப்படுத்தவே முடியாது.அதனால் தான் ஈழத்து வலைப்பதிவாளர் அனைவரையும் ஏதோ ஒருவகையில் அறிந்திருக்கும் நான் அவர்களை உங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன் ஒழிய நீங்கள் சொல்லும் இரத்தத்தில் ஊறிய பிரிவினை என்றால் வலைப்பதிவுகள் அறிமுகத்தை அத்துடன் நிறுத்தியிருப்பேன் மற்றையவர்கள் பதிவுக்குப் போய் ஊக்கு வித்துக் கொண்டிருக்க மாட்டேன்.
இதையெ உங்கள் எழுத்து நேர்மைக்குச் சான்றாய் அன்றைய தினமே வலைப்பூவின் பின்னூட்டத்தில் கொடுத்திருந்தால் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் இன்று உங்களுக்குச் சாதகமில்லா ஆடுகளத்தை திசைதிருப்ப இது உபயோகிக்கப் பட்டுவிட்டது நாளையே ஏதேனும் சிக்கல் வந்தால் ஈழநாதன் இட்ட பொறி என்று தமிழ்கூறும் நல்லுலகம் இவ்வுலகில் உள்ளவரை ஈழநாதன் பெயர் வாழும்.அதற்கான முதல் வித்தை நீங்கள் இட்டிருக்கிறீர்கள் நன்று புலிமுத்திரையோடு இந்தச் சின் முத்திரையையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது பதிவில் சொல்லியது பிளவு வந்துவிடுமோ என்று பயப்படாமல் உண்மைகளை எழுதும்படி மற்றவர் வலைப்பதிவுகளை எட்டிப் பார்க்கும் வழக்கம் இருந்திருந்தால் அவ்வார்த்தைக்கான காரணம் புரிந்திருக்கும்.நாங்களெல்லாம் இப்படி காரசாரமாக விவாதித்துக்கொள்வதால் எங்கே ஈழத்தவர் இந்தியர் என்ற பிளவு வந்துவிடுமோ என்று ஒரு உறவு எழுதியிருந்தது அதையே பல உறவுகள் மனதில் நினைத்திருக்கும் அதற்காகத் தான் எழுதினேன் நெருப்பு என்று சொன்னால் வாய் சுட்டுவிடாது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய அறிவு மட்டுமல்ல இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் பற்றிய நெளிவு சுழிவுகள் உங்களுக்கு விளக்கமின்மையே //ஊர் ரெண்டு பட வேண்டும் என்று ஆயுதம் கொடுத்திருக்க மாட்டோம். பிராந்திய வல்லரசு நாங்கள். இலங்கை வேண்டுமென்று நினைத்திருந்தால் இம் மாதிரி ஈன வழிகளில், குழப்பம் விளைவித்து உள்ளே நுழைந்திருக்க வேண்டியதில்லை. ஹார்லிக்ஸ் விளம்பர ஸ்டைலில் "அப்டியே ச்சாப்பிட்டிருப்போம்" . உங்கள் அச்சுபிச்சு ராசதந்திர சிந்தாந்தங்களை நிறுத்துக் கொள்ளுங்கள்.//
என்ற வாக்கியத்துக் காரணம்.இந்தியா எங்கே தனது பிராந்திய வல்லாதிக்கம் பறிபோய்விடுமோ என்று பயப்படுவதே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையை தனது கட்டுக்குள் வைத்திருக்க விரும்புவது என்பது அரிச்சுவடியன்றி அச்சுப்பிச்சுச் சித்தாந்தமல்ல.
நாம் வல்லரசு எவனையும் பிடுங்கி விடுவோம் என்ற அதீத நம்பிக்கைதான் கார்கிலில் தீவிரவாதிகளின் ஊடுருவலாய் முடிந்தது.அவ்வாறான ஒரு கதையே இலங்கையிலும் நடந்தது.புலிகள் மற்றும் யாழ்ப்பாணத்தமிழ் மக்கள் பற்றிய எந்தவித விளக்கமும் இன்றி இந்திய இராணுவம் தான் ஒரு வல்லரசு என்று கொண்டிருந்த இறுமாப்பே ஆரம்பத்தில் அதுபெற்ற கசப்பான தோல்விகளுக்குக் காரணமாயிற்று.அதுவே முதற் கோணல் முற்றுங் கோணல் என்றமாதிரி ஆகிப்போனது.இன்று உங்கள் படையில் ஆயிரம் பேரை இழந்துவிட்டோம் என்று நீங்களும் எங்களில் பல்லாயிரக்கணக்கானவரை இழந்துவிட்டோம் நாங்களும் புலம்பக் காரணமாயிற்று.
பிராந்திய வல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம் என்று சொல்பவர்களுக்கு அமெரிக்காவின் குரல் என்றொரு வானொலி நிலையத்தை அமெரிக்கா புத்தளம் பகுதியில் அமைத்தபோது அதைத் தடுத்து நிறுத்த இந்திய இராஜ தந்திர வட்டாரங்கள் எவ்வளவோ முயன்றும் முடியாமற் போனது உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.அதற்கான காரணமும் இந்தச் சின்னஞ்சிறு நாட்டில் அவ்வளவு பொருட்செலவில் அமெரிக்கா ஒலிபரப்பு நிலையத்தை நிறுவவேண்டியதன் அவசியம் என்னவென்று புரிந்திருந்தால் துளியூண்டு இலங்கையின் சிறு பகுதியைத் தானும் உங்கள் நாட்டால் விளம்பரத்தில் சொல்வதுபோன்று அப்படியே சாப்டுவேன் என்று சாப்பிட முடியாது என்ற சிறிய உண்மை புரிந்துபோயிருக்கும் இதெல்லாம் புள்ளிவிபரம் இல்லை அரசியல் சாதாரண ஈழத்தமிழனாய் எமது நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்கள் யார் என்று தோன்டிப்பார்க்கப் புறப்பட்டு தோன்டத் தோட்டப் பூதமாய்ப் புறப்பட்டுக்கொண்டிருக்கும் புழுத்துபோன அரசியல்.
இதனை விட இன்னொன்று தெரியுமா எப்போதும் ஈழத்தமிழ் ஊடகங்கள் பெரிதுபடுத்துவதாகக் காட்டப்படும் இன்னொரு விவகாரம் திருகோணமலைத் துறைமுகமும் அதனை அண்டியதாகக் கட்டப்பட்டுள்ளது பாரிய எண்ணைக் குதங்களும்.இதனை ஆரம்பத்தில் நானும் நம்பவில்லை அப்படித் துறைமுகத்தாலும் எண்ணைக்குதத்தாலும் வரும் வருமானம் பெரிதல்ல என்றாலும் அதுபற்றிட்த் தொடர்ந்து வாசித்தபோது பொருளாதாரம் என்பதைவிட இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் என்ற புதிய காரணியைத் தெரிந்துகொண்டேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

